இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் 8 அதிகாரிகள் உளவாளிகளாகச் செயல்பட்டதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்து வந்த மெஹ்மூத் அக்தர் என்பவர் இந்தியப் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டார். டெல்லி சாணக்யபுரி போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர், தூதரக உறவு காரணமாக விடுவிக்கப்பட்டார்.
இதன்காரணமாக அவர் உள்பட பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய 6 பேர் கடந்த புதன்கிழமை வெளியேறினர். மேலும், பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ராஜஸ்தானைச் சேர்ந்த 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து இந்தியத் தூதரகத்தில் பணிபுரிந்து வந்த சுர்ஜீத் சிங் என்ற அதிகாரியை பாகிஸ்தானுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி அந்நாட்டு அரசு வெளியேற்றியது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyFhq_FN0rwCyNWd4A4m4QqQjON78SU2FXsF_mBrvBzrR_-qoD6NHUXmqTEC64kW4wrf552PcXAX23u6FxzdIiURzNQhx5J6urWWMTlbF4U_lNweCuqiWScTQ-BcfdPDufw-Mcxo3O5AA/s320/pakistan__large.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKhPXHTRIMwns8yLHkpFNvmSfjJ5SCaWDfRPe9KW1tNmNVrtdr5-aWskFDF_VYuXWL6rygMHB8IcYM1ixZTzdXwBz6OgxAU7i12KEQ7b2VjzG8kyQrryJit2e_FvYuBRtnAGBHAGGc1Xw/s320/viyanna__large.jpg)