Saturday, 2 September 2017
Thursday, 27 April 2017
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதியன்று திருச்சி பாலக்கரையில் கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
5 ஆண்டுகள் முடிவு :
ராமஜெயம் கொலை நடைபெற்று 5 ஆண்டுகள் கடந்தும் இதுவரை குற்றவாளிகள் ஒருவரைக்கூட போலீஸார் கைது செய்யவில்லை இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி அவரது மனைவி லதா உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்து நிலுவையில் உள்ளது.
சிபிசிஐடி அறிக்கைகள் :
இந்த வழக்கு நீதிபதி பஷீர்அகமது முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி போலீஸார் சார்பில் 12வது விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ராமஜெயம் கொலை தொடர்பாக 300 காரணங்கள் அடிப்படையில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கோரினார். குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம். விசாரணை இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. எனவே மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறினார்.
சிபிஐக்கு மாற்ற கோரிக்கை :
சிபிசிஐடி போலீஸார் ஒவ்வொரு முறையும் குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகக் கூறுகின்றனர். ஆனால் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. எனவே சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று மனுதாரர் வழக்கறிஞர் ரவி வாதிட்டார்.
இரு தரப்பு வாதம்:
இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்துள்ள ரகசிய அறிக்கைகளை படித்து பார்க்க வேண்டியதுள்ளது என்று கூறி, விசாரணையை ஏப்ரல் 27ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராமஜெயம் கொலை குறித்து 12 விசாரணை அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளதாக சிபிசிஐடி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணையில் நம்பிக்கை இல்லை என லதா தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டார். சிபிஐக்கு வழக்கை விசாரிக்கும் தகுதி உள்ளதாகவும் லதா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுமா?
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். ராமஜெயம் கொலை நடைபெற்று 5 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை குற்றவாளியின் நிழலைக்கூட போலீசார் நெருங்கவில்லை. அறிவியல் ரீதியான விசாரணை நடைபெற்றும் குற்றவாளிகள் யார் என்று பிடிபடவில்லை. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க நீதிபதி உத்தரவிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
English summary:
Wife seeks CBI probe in Ramajayam murder case. Ramajayam murder case being probed from 300 angles cbcid told madras high court madurai bench. HC bench postponed verdict.
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?

நாஞ்சில் சம்பத் என்ற "மாபெரும்" மனிதரை தெரியாதவர்கள் யாரும் இல்லை. வைகோவின் மதிமுகவில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த சம்பத், வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து விலகினார். கடந்த 2012-ல் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
அவருக்கு அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவியை கொடுத்தார் ஜெயலலிதா. அத்துடன் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்துவதற்காக இன்னோவா காரையும் ஜெயலலிதா பரிசாக கொடுத்தார்.
சர்ச்சையில் சிக்கினார்:
இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னையே வெள்ளத்தில் தத்தளித்தது. அதற்கு அதிமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்களே கொதித்து போய் இருந்தனர். அந்த நேரத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் வெகு விமரிசையாக நடந்தது. இதை எதிர்க்கட்சிகள் கண்டித்தன. அப்போது நாஞ்சில் சம்பத், பக்கத்து வீட்டில் இழவு விழுந்ததற்காக நம் வீட்டில் திருமணம் நடத்தாமல் இருக்க முடியுமா?, எறும்புகள் போகும் பாதை என்பதற்காக யானைதான் நடக்காமல் இருக்க முடியுமா? என்று கேள்வி கேட்டு சர்ச்சையை கிளப்பினார்.
பதவியை பறித்தார்:
இதைத் தொடர்ந்து அவருக்கு வழங்கிய கட்சிப் பதவியை ஜெயலலிதா பறித்துக் கொண்டார். கிட்டத்தட்ட கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில் இருந்தார். இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா தலைமையை ஏற்க மறுத்து கடந்த ஜனவரி 3-ந் தேதி கடுமையாக விமர்சித்தார் சம்பத், இன்னோவா காரை திருப்பி அனுப்பினார். அந்த நேரத்தில் சசிகலா பக்கம் அனைத்து அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் ,நிர்வாகிகள் சாயந்த நிலையில் ஒரு மானஸ்தனாவது அந்தக் கட்சியில் இருக்காரே என்று தமிழக மக்கள் பெருமை கொண்டனர்.
தனது சுய நிறத்தை வெளிப்படுத்தினார் :
கட்சியிலிருந்து விலகிய 3 நாள்களில் சின்னம்மாவை தவிர வேறு யாராலும் கட்சியை சிறப்பாக நடத்த முடியாது, அவரது பெருமையை பறைசாற்ற தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்து அந்தர் பல்டி அடித்தார் சம்பத். அதிமுக தலைமை அலுவலகத்தில் கொடுத்த இன்னோவாவையும் திரும்ப பெற்றுக்கொண்டார். இதுதான் தாமதம், நெட்டிசன்கள் அவரை கலாய்த்துவிட்டனர். சிலர் அவருக்கு போன் செய்து நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்றும் கேட்டனர்.
துடைச்சுக்குவேன் :
அண்மையில் அதிமுக இணைப்பு குறித்து சன் நியூஸ் சேனலுக்கு பேட்டி கொடுத்த சம்பத், தினகரனுக்கு ஆதரவு தருவதால் மக்கள் காறி துப்பினால் துடைச்சுக்குவேன் என்றார். ஒரு வேளை ஓபிஎஸ்ஸை அண்டி பிழைக்கும் நிலை ஏற்பட்டால் செத்துவிடுவேன்... தற்கொலை செய்து கொள்வேன் என்றும் தெரிவித்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் , தினகரன் ஜெயிலுக்கு போனால் தற்கொலை செய்து கொள்வேன் என்கிறார்.
சட்டப்படி குற்றம் :
இந்திய சட்டப்படி கொலை செய்வது எப்படி குற்றமோ? தற்கொலை செய்து கொள்வது அதை விட குற்றம். தினகரன் சுதந்திர போராட்டத்தில் பாடுபட்டு ஜெயிலுக்கு போகிறாரா என்ன? தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில்தான் சிறைக்கு செல்லவுள்ளார். இதற்கு உயிரை மாய்த்து கொள்வேன் என்பதா?. இவர் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்ய வேண்டாமா? இவ்வாறு கூவினால் தினகரன் வெளியே வந்தவுடன் இன்னும் சற்று கூடுதலாக எலும்புத் துண்டுகளை வீசுவார் என்ற விசுவாசம் இருந்தாலும் இவரது பேச்சு அடுத்தவர்களை தற்கொலைக்கு தூண்டிவிடும் படி உள்ளது. எனவே இவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுடாமா? என்பதுதான் பொதுமக்களின் கேள்வி.
English Summary:
Strict Action against Nanjil Sampath for stating if TTV Dinakaran will be put in jail, he will do suicide.
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்

அதிமுகவில் எதிர்ப்பு கோஷத்தை கையில் எடுத்து ஓ.பன்னீர்செல்வம் பிப்ரவரி 7-ம் தேதி நடத்திய 45 நிமிட தியானத்தில் தொடங்கிய தமிழக அரசியல் அனல் 2 மாதங்களைக் கடந்தும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சசிகலா,தினகரனை சிறைக்கு அனுப்பியது வரை அனுமார் வாலாக நீண்டு கொண்டே வருகிறது.
அதிமுக அம்மா அணி(இபிஎஸ்), மற்றும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி எப்போது வேண்டுமானாலும் இணையும் நாங்களெல்லாம் அண்ணன் தம்பிகள், இரு அணி பேச்சுவார்த்தை விரைவில் நடக்கும் என்று இரு அணியினரும் புதிர் போட்டு வருகின்றனர்.
கடிவாளம் :
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தங்கள் அணியினர் மீடியாக்களிடம் பேச கடிவாளம் போட்டுள்ளார். அதனை மீடியாக்களை சந்திக்கும் அனைத்து அமைச்சர்களுமே இரு அணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடப்பதாக சொல்லி வைத்தார் போல ஒரே மாவை அரைத்து வருகின்றனர்.
குற்றச்சாட்டு ;
இந்நிலையில் அதிமுக இரு அணிகள் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றியும் கட்சியை இணைப்பது பற்றி மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் அரசு முற்றிலும் செயல்படாமல் முடங்கியிருப்பதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சுயநலம்:
இந்த வரிசையில் அதிமுக இணைப்பு பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள நடிகரும் பாஜக மூத்தத் தலைவருமான எஸ்.வி.சேகர் இப்போது அதிமுகவின் இரு அணிகளும் இணைந்திருப்பதற்கு சுயநலம் ஒன்றே ஒன்று தான் காரணம் என்று கூறியுள்ளார்.
ஆபத்து :
அதுமட்டுமில்லையாம் இந்த சுயநல முடிவால் அதிமுகவின் எதிர்காலத்துக்கும் தமிழகத்தின் நிகழ்காலத்துக்கும் ஆபத்தாக இருக்கலாம் என்றும் எஸ்.வி சேகர் தெரிவித்துள்ளார்.
டவுட் :
2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்ட எஸ்.வி.சேகர் 2009ம் ஆண்டு அ.தி.மு.க-விலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து தற்போது பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார் என்பது நோட் பண்ணப்பட வேண்டிய விஷயமாக உள்ளதால், இவர் தரப்பு கருத்தை எப்படி எடுத்துக்கொள்வது என்று டவுட்டாக உள்ளது.
English Summary:
Film actor and bjp's senior leader s.ve.shekher tweeted that admk merger is not good for admk's future and tn's current situation
ஐபிஎல் வரலாற்றில் டாப் 10 வெளிநாட்டு வீரர்கள் இவர்கள்தான்

ஐபிஎல் தொடர் தொடங்கி பத்து வருடங்கள் ஆகிவிட்டன. இங்கு பேட்ஸ்மேன்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். உள்நாட்டு வீரர்கள் வெளிநாட்டு டாப் பிளேயர்களுடன் ஆடி பழக இது ஒரு வாய்ப்பு.
இதற்காக பல கோடி கொடுத்து வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுகிறார்கள். பாகிஸ்தானை தவிர்த்து பிற அனைத்து கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் இருந்தும் வீரர்கள் இங்கு இறக்குமதி செய்யப்படுகிறார்கள். இப்படிப்பட்ட வெளிநாட்டை சேர்ந்த அதிரடி நாயகர்களில் டாப் 10 பேட்ஸ்மேன் இவர்கள்தான்.
முதலிடத்தில் கெய்ல்:
இதில் முதலில் கொல்கத்தாவுக்கும், தற்போது பெங்களூர் அணிக்காகவும் ஆடிவரும் கிறிஸ் கெயில் டாப் இடத்திலுள்ளார் 97 ஐபிஎல் போட்டிளில் பங்கேற்றுள்ள கெய்ல், 3570 ரன்களை குவித்துள்ளார். 42.50 என்ற சராசரி ரன் குவிப்பு இதுவாகும். 21 அரை சதங்கள், 5 சதங்கள் விளாசியுள்ளார். 262 சிக்சர்களை விளாசி அதிக சிக்சர் விளாசிய தனி நபர் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
டேவிட் வார்னர்:
2வது இடத்தில் உள்ளவர் டேவிட் வார்னர். ஆஸி.யை சேர்ந்த இவர் 107 போட்டிகளில் 3655 ரன்களை விளாசியுள்ளார். சராசரி 39.30. இவர் 2009ம் ஆண்டு சீசனில் இருந்துதான் ஆடத் தொடங்கியுள்ளார். 2 சதங்கள், 34 அரை சதங்கள் இவருடையது. 144 சிக்சர்கள் விளாசியுளார்.
மிஸ்டர் 360 டிகிரி:
மூன்றாவது இடம் 360 டிகிரி பேட்ஸ்மேன் டிவில்லியர்சுக்கு. 124 போட்டிகளில் ஆடி 3402 ரன்களை குவித்த டிவில்லியர்ஸ் சராசரி 39.55 ரன்கள். 133 இவரது உச்சபட்ச ஸ்கோர். 3 சதங்கள், 22 அரை சதங்கள் இவருடையது. 152 சிக்சர்களை பறக்கவிட்டவர் டிவில்லியர்ஸ்.
ஆல்ரவுண்டர் ஆஸி
. ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன், 99 போட்டிகளில் ஆடி, 2612 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 31.85 ரன்கள். 2 சதங்கள், 14 அரை சதங்கள் விளாசியுள்ளார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், தற்போது பெங்களூருக்காக ஆடிவரும் அவருடைய ஆட்டம் ஏனோ சொதப்பியுள்ளது.
அதிரடி சரவெடி :
பிரெண்டன் மெக்கல்லம். பெயரை கேட்டதுமே ச்சும்மா அதிருதில்ல.. என்ற வசனத்திற்கு பொறுத்தமான அதிரடி வீரர் இவர். மெக்கல்லம் 158 ரன்களை விளாசி ஐபிஎல் தொடரையை ஆரம்பித்த பெருமைக்குரியவர். 99 போட்டிகள் ஆடி 2698 ரன்கள் குகவித்துள்ளார். 13 அரை சதங்கள், 2 சதங்ககள் விளாசியுள்ளார்.
கலங்கடிக்கும் பவுலிங்:
இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, 2009 முதல் மும்பை அணிக்காக ஆடி வருகிறார். 102 போட்டிகளில் 147 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2015 ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்.
அசரடித்த ஆல்ரவுண்டர் :
தென் ஆப்பிரிக்க முன்னாள் ஆல்ரவுண்டர் ஜாக் கல்லீஸ், 2008-2014 வரையிலான காலகட்டத்தில் ஐபிஎல் தொடரில் 98 போட்டிகளில் ஆடி 2427 ரன்களை குவித்தவர். 89 இவரது பெஸ்ட். 17 அரை சதங்ள் விளாசியுள்ளார். 65 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது உள்ளார்.
சிஎஸ்கே செல்ல பிள்ளை ;
மே.இ.தீவுகளின் ட்வைன் பிராவோ, சிஎஸ்கே அணிக்காக ஆடியவர். பிறகு குஜராத்துக்காக ஆடியவர். தற்போது காயத்தால் விலகியுள்ள இவர், 106 போட்டிகளில் 1262 ரன்கள் குவித்ததோடு, 122 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆல்ரவுண்டரான இவருக்கு எப்போதுமே சிஎஸ்கே வாய்ப்பு வழங்கி வந்தது.
பலே பாண்டியா :
மர்மமான ஸ்பின்னர் என்றழைக்கப்படும் மே.இ.தீவுகள் வீரர் சுனில் நரைன் தற்போது ஓப்பனிங் பேட்ஸ்மேனாகவும் களம் கண்டுள்ளார். 2012ல்தான் ஐபிஎல் தொடரில் காலடி எடுத்து வைத்தார். அந்த வருடமும், 2014லும் அவர் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 74 போட்டிகளில் 90 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அவர். எக்கனாமி ரேட் வெறும், 6.23தான்.
English Summary:
With the Indian Premier League (IPL) entering its 10th edition this year, let us look at most valuable overseas players in the history of the tournament.
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்

அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதற்கு முன்னரே இரு அணியினரும் முரண்பாடான கருத்துகளை தெரிவித்து அவர்களும் குழம்பி மக்களை குழப்பி வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு அணியினர் மீது மற்றொரு அணியினர் குறை கூறுவதும் என தொடர்ந்து நடைபெற்றுகத் கொண்டே வருகிறது.
நேற்று பேச்சுவார்த்தை :
இந்நிலையில் நேற்று நிறைந்த அமாவாசை தினம் என்பதால் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் அதிமுகவின் தலைமை கழகத்தில் கடந்த 3 நாள்களாக மாவட்ட செயலாளர்களுடன் முதல்வரும், மூத்த அமைச்சர்களும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
நல்ல நாள் என்பதால் :
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நேற்று வந்த அமைச்சர் சிவி சண்முகம் மிகவும் பிரஸ்ஸான முகத்துடன் இன்று நல்ல நாள் என்பதால் பேச்சுவார்த்தை நடக்கலாம் என்றார். மேலும் தினகரன் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, அவரை கட்சியிலிருந்து ஒதுக்கி விட்டோம். எங்களுக்கும், அவருக்கும் சம்பந்தமில்லை என்றார்.
சுயமுடிவு :
ஓ.பன்னீர் செல்வத்தின் கோரிக்கையை ஏற்று கட்சி அலுவலகத்தில் இருந்த சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டதாக கூறும் தகவல்கள் தவறு. இது எங்களது சொந்த முடிவு. அவர்கள் சொன்னதற்காக நாங்க செய்யவில்லை என்றார்.
எனக்கு தெரியாது:
இந்நிலையில் கட்சி அலுவலகத்துக்கு காட்டமாக வந்திருந்த சிவி சண்முகத்திடம், பே்ச்சுவார்த்தை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எனக்கு எதுவும் தெரியாது. நாங்க பேச்சுவார்த்தைக்கு தயார்னு சொல்லிட்டோம். ஆனால் அவர்கள் தினம் ஒரு பேச்சு பேசுகிறார்கள் என்றார்.
பதில் சொல்ல முடியாது :
கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை தொடர்பாக கருத்து தெரிவித்த ஓபிஎஸ், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கெட்டுள்ளது என்றார். இதுகுறித்த கேள்விக்கு சிவி சண்முகம் பதிலளிக்கையில், ஆங்.. அவர் எல்லாத்தையும் சொல்வாரு... அதுக்கெல்லாம் நாங்க பதில் சொல்ல முடியாது என்று காட்டமாக தெரிவித்துவிட்டார்.
English summary:
ADMK Merger talks are going to start soon. Minister CV Shanmugam condemns O.Panneer selvam on his Kodanad Estate Security guard murder comment.
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!

ஆட்சிக்கு வந்த உடனும், ஒப்பந்தத்தை மதிக்கப் போவதில்லை, அமல் படுத்தப் போவதில்லை என்று கூறிவந்தார்.
சிலம்பாட்டம் விளையாடிய கனடா பிரதமர்.. 01:26 பீட்டா அமைப்புக்கு எதிராக போராட்டம்.. 01:23 தமிழ்முறைப்படி திருமணம்..
நேற்று யு டர்ன் அடித்த ட்ரம்ப், கனடா மற்றும் மெக்சிகோ அதிபர்களுடன் தொலைபேசியில் உரையாடி உள்ளார்.
அப்போது, "நாஃப்தா ஒப்பந்தத்தை தற்போது ரத்து செய்யப் போவதில்லை. மூன்று நாடுகளுக்கும் நன்மை ஏற்படும் வகையில் மாற்றங்கள் செய்வோம்.இணைந்து பேச்சு வார்த்தை நடத்துவோம்," என்று கூறியுள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் மெக்சிகோ அதிபர் என்ரிக் ப்னே நீட்டோவுடன் தனித்தனியாக தொலைபேசியில் பேசியுள்ளார்.
கடந்த வாரம் விஸ்கான்சினில் கூட இந்த ஒப்பந்தம் அமெரிக்க உற்பத்தியாளர்களுக்கு எதிரானது. வாபஸ் பெற்றே தீருவேன் என்று கூறியிருந்தார்.
அதை நிறைவேற்ற அதிபரின் உத்தரவு ஒன்றும் பிறப்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்தது. கட்சிக்குள் எதிர்ப்பும் கிளம்பியது. நாஃப்தா ஒப்பந்தத்திலிருந்து வாபஸ் பெற்றே தீருவேன் என்ற ட்ரம்ப், நேற்று மென்மையான போக்கைக் கடைப்பிடித்துள்ளார்.
ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினால், அமெரிக்கர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் பொருட்களின் விலை அதிகரிக்கும். அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் போன்ற புள்ளி விவரங்கள் ட்ரம்புக்கு தெரியப்படுத்தப்பட்டன.
அரிசோனா செனட்டர் ஜான் மெக்கெய்ன் மற்றும் நெப்ராஸ்கா செனட்டர் பென் சாசே ஆகிய இரண்டு குடியரசுக் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
ஆட்சியில் அமர்ந்து 100 வது நாளைத் தொட இருக்கும் நிலையில், நாஃப்தா ஒப்பந்தத்தில் மறு சீர்திருத்தம் செய்வோம் என்ற அறிவிப்புடன், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதாக காட்டியுள்ளார்.
ஒபாமா முன்னேற்பாடுகளைச் செய்து கையெழுத்திட தயார் நிலையில் விட்டுச்சென்ற பசிபிக் வணிக ஒப்பந்தத்தை ட்ரம்ப் கைவிட்டு விட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
English Summary:
President Trump called Canadian Prime Minister Justin Trudeau and President Enrique Peña Nieto over telephone and assured them that he is not going to cancel NAFTA at this time. He further told them that all three parties to renegotiate for the benefit of all three nations. Even last week, he was speaking in Wisconsin against this trade agreement. His party colleagues Sen.
Tuesday, 25 April 2017
முடக்கப்பட்ட ரேஷன் கார்டு: புதுப்பிக்க வாய்ப்பு

தமிழகத்தில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுக்காக, ஏற்கனவே உள்ள கார்டுதாரரிடம் இருந்து, ஆதார் எண், மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் வாங்கப்பட்டன. நேற்றைய நிலவரப்படி, 1.90 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில், 1.31 கோடி கார்டுதாரர்கள், அனைவரின் ஆதார் விபரத்தையும் பதிவு செய்துள்ளனர். 56 லட்சம் பேர், பாதி பேரின் ஆதார் விபரங்களை பதிந்துள்ளனர்.
எஞ்சிய, 2.21 லட்சம் பேர், ஒருவரின் ஆதார் விபரத்தையும் பதிவு செய்யாததால், அவற்றை, உணவு துறை அதிகாரிகள் முடக்கி வைத்தனர். அவர்களால் ரேஷன் பொருட்களை வாங்க முடியவில்லை. இந்நிலையில், முடக்கிய கார்டுகளை புதுப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒரு ஆதார் விபரம் கூட பதியாத ரேஷன் கார்டுதாரர், பொது வினியோக திட்ட இணையதளம் அல்லது, 'மொபைல் ஆப்' பகுதிக்கு செல்ல வேண்டும்; அதில், ஸ்மார்ட் அட்டை விண்ணப்பம் என்ற பகுதியில், 'க்ளிக்' செய்தால், புதிய அட்டை விண்ணப்பம், பழைய குடும்ப அட்டை பதிவு என இருக்கும்.
அதில், பழைய அட்டை பதிவு பிரிவுக்கு சென்று, தங்களின் காகித ரேஷன் கார்டு விபரங்களை பதிவு செய்ய வேண்டும். காகித ரேஷன் கார்டின் நகல், குடும்ப தலைவரின் புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும். அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கிய பின், இறுதியாக, முடக்கப்பட்ட கார்டுதாரருக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தினகரன் மீண்டும் இன்று(ஏப்.,25) மாலை ஆஜராக உத்தரவு

4வது நாளாக...
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, தினகரன் சார்பில் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டில்லியில் தினகரனிடம் டில்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 3வது நாளாக நேற்று(ஏப்.,24) நடந்த விசாரணை 9 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த நிலையில், நள்ளிரவு 12.45 மணிக்கு விசாரணை முடிந்தது. இந்நிலையில், இன்று(ஏப்.,25) மாலை 5 மணிக்கு விசாரணைக்காக மீண்டும் ஆஜராகும்படி, தினகரனுக்கு போலீசார் உத்தவிட்டுள்ளனர். ஜனார்த்தனன், மல்லிகார்ஜுனா ஆகியோர் மதியம் 2 மணிக்கு ஆஜராக
நக்சல்கள் தாக்குதல்: காயமடைந்த வீரர்களுக்கு முதல்வர் ஆறுதல்

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பேஜி கிராமத்தை, தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் அமைக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தும் நோக்கில், நேற்று பிற்பகல், பயங்கர ஆயுதங்களுடன் வந்த 300 நக்சலைட்டுகள், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தியதில், 26 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். தகவலறிந்த சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங், நேற்று டில்லி பயணத்தை ரத்த செய்துவிட்டு காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீரர்கள் அம்மாநில முதல்வர் ரமண்சிங் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். விரைவி
ல் குணமடைய பிரார்த்திப்பதாக கூறினார்.
மானியம் குறித்த விபரங்கள் ரேஷன் கடையில் எழுத உத்தரவு

மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சரும், லோக் ஜனசக்தி
மூத்த தலைவருமான, ராம்விலாஸ் பஸ்வான், டில்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:ரேஷன் கடைகளில், உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மானிய விலையில்
கிடைக்கும் கோதுமை, கிலோ, 2 ரூபாய்க்கும்; அரிசி, கிலோ, 3 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.
இவ்வாறு, மிக மலிவு விலையில் பொருட்கள் விற்கப்படும்போது, அதில் கிடைக்கும் நற்பெயரை, மாநில அரசுகள் மட்டுமே சம்பாதித்துக் கொள்வது துரதிருஷ்டவசமானது.
விவரங்கள்எனவே, அனைத்து மாநிலங்களிலும், ரேஷன் கடைகளில், பொருட்களுக்கு அளிக்கப்படும் மானிய தொகை, மானியம் யாரால் அளிக்கப்படுகிறது என்பன போன்ற விபரங்களை எழுதி வைக்கும்படி, மாநில அரசுகளிடம் கூறியுள்ளோம்.
இலவசம்:
ரேஷன் பொருட்களில், 1 கிலோ கோதுமைக்கு, 22 ரூபாயும்; 1 கிலோ அரிசிக்கு, 29.64 ரூபாயும், மத்திய அரசு மானியமாக அளிக்கிறது.
தமிழகம் போன்ற ஒரு சில மாநிலங்களில் கூடுதல் மானியம் அளிக்கப்பட்டு, இப் பொருட்கள் இலவசமாக அளிக்கப்பட்டு வருகின்றன. பிற மாநிலங்களைச் சேர்ந்த அரசுகள், ரேஷன் பொருட்களுக்கென எந்த செலவும் செய்வதில்லை. உணவுப் பொருட்களுக்காக வழங்கப்படும் மானியங்களுக்காக, மத்திய அரசு, ஆண்டுக்கு, ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவு செய்கிறது.
பரிந்துரை:
விவசாயிகளின் நலன் கருதி, துவரம் பருப்பு இறக்குமதி மீதான வரியை, 10 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக உயர்த்தலாம். இதற்கு, உணவுத்துறை அமைச்சகம் ஆதரவு தெரிவிக்கிறது. இது தொடர்பாக, மத்திய நிதியமைச்சகத்துக்கு பரிந்துரை செய்வோம்.
இவ்வாறு பஸ்வான் கூறினார்.
English summary:
The Central Government has said, "New Delhi should keep a record of subsidies on ration shops and foodstuffs.
சுகேஷை தெரியும்: தினகரன் ஒப்புதல்

அ.தி.மு.க., இரு அணிகளாக பிரிந்ததால், தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ள, இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, தினகரன் சார்பில் லஞ்சம் கொடுக்க முயன்றது தெரிய வந்தது.
மூன்றாவது நாளாக இன்று(ஏப்-24)மாலை, 4:00 மணிக்கு, தினகரன், அவரது உதவியாளர் ஜனார்த்தனன், நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
டில்லி போலீஸ் இணை கமிஷனர் பிரபிர் ரஞ்சன், துணை கமிஷனர் மதுர் வர்மா, உதவி கமிஷனர் சஞ்சய் ஷெராவத் ஆகியோர், மாறி மாறி விசாரணை நடத்தினர். இந்நிலையில், சுகேஷின் கோர்ட் காவல், இன்றுடன் முடிவடைகிறது. அவனை, இன்று மீண்டும் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், 8.50 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை நடத்துள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், விசாரணையில் அது உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.தினகரன் மற்றும் அவரது உதவியாளர், நண்பர் மற்றும் இடைத்தரகர் சுகேஷ் சந்திராவுக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள், பகிர்ந்து கொள்ளப்பட்ட செய்திகள் உள்ளிட்ட ஆதாரங்கள் உள்ளதாகவும், போலீசார் தெரிவித்து உள்ளனர்.
தினகரன் ஒப்புதல்:
விசாரணைக்கு, தினகரன் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. ஆனாலும், நேற்றையை விசாரணையின்போது, இடைத் தரகர் சுகேஷ் சந்தரை, தனக்கு தெரியும் என, தினகரன் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது.அவருக்கு எதிராக மிகவும் வலுவான ஆதாரங்கள் உள்ளதால், அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என, டில்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
9 மணி நேரம் விசாரணை:
தினகரனிடம் 3வது நாளாக விசாரணை நடத்தி வரும் டில்லி குற்றப்பிரிவு போலீசார், நள்ளிரவிலும் தொடர்ந்து 9 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர். இரவு 12.30 மணிக்கு தினகரன் கிளம்பி சென்றார். மீண்டும் அவர் இன்று (25ம்தேதி) மாலை 5 மணிக்கு மீண்டும் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.
Monday, 24 April 2017
அமெரிக்க கப்பல் மீது தாக்குதல்:வடகொரியா மிரட்டலால் பதற்றம்

கிழக்கு ஆசிய நாடான வடகொரியா, சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா.,வின் எதிர்ப்பை மீறி, அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.வடகொரியாவின் தந்தை என்றழைக்கப்படும் கிம் இல் சங்கின், பிறந்த தின கொண்டாட்டத்தையொட்டி, தலைநகர், பியாங்கியாங்கில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பை நடத்தி, உலக நாடுகளை அச்சுறுத்தியது.
இதை தொடர்ந்து, வடகொரியாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்க, அமெரிக்காவின் போர்க்கப்பல், கொரிய தீபகற்பம் விரைந்துள்ளது; அமெரிக்க போர் விமானங்களும் தென்கொரியாவில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஜப்பானின் இரண்டு போர் கப்பல்கள் அப்பகுதிக்கு விரைந்துள்ளன. இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.இந்நிலையில் அமெரிக்க போர் கப்பலை, குண்டு வீசி அழிக்க போவதாக வடகொரியா நேற்று மிரட்டல் விடுத்துள்ளது.
இதுகுறித்து வடகொரிய ராணுவ வட்டாரங்கள் கூறியுள்ளதாவது:வட கொரியாவை அச்சுறுத்தும் போர் கப்பலை, குண்டு வீசி, ஒரே தாக்குதலில் எங்களால் அழிக்க முடியும்; அதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். அதன் மூலம் வட கொரியாவின் ராணுவ பலத்தை உலகம் புரிந்து கொள்ளும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்கர் கைது
தென் கொரிய வம்சாவளியைச் சேர்ந்த, அமெரிக்க நாட்டினர் இருவரை, வட கொரியா சமீபத்தில் அடுத்தடுத்து, கைது செய்தது; அவர்கள் வட கொரியா சென்று, அமெரிக்க திரும்ப முயன்ற போது, வட கொரிய தலைநகர் பியாங்கியாங் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
உளவு பார்க்க வந்ததாக கூறி அவர்களை,வட கொரியா சிறையில் அடைத்துள்ளது. இந்நிலையில், மேலும் ஒரு அமெரிக்க நபர், நேற்று, வட கொரியாவில் கைது செய்யப்பட்டார். இதனால், அமெரிக்கா - வட கொரியா இடையே, மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
டில்லியில் பா.ஜ., மாநில முதல்வர்கள் கூட்டம்

புதுடில்லியில் இன்று(ஏப்23) பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் பா.ஜ.,ஆளும் மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மாலையில் பா.ஜ., கட்சி தலைமையகத்தில் பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டனர்.
English Summary:
New Delhi: Prime Minister Narendra Modi today met Chief Minister Narendra Modi,
டில்லி மாநகராட்சி தேர்தல்: பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்பு

டில்லி மாநகராட்சி தேர்தல் இன்று (ஏப்-23) நடந்தது. டில்லி கிழக்கு, வடக்கு, தெற்கு என 3 மாநகராட்சிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.மொத்தம் உள்ள 272 இடங்களில் பா.ஜ., 195 இடங்கள் கிடைக்கும் என்றும், ஆம் ஆத்மி கட்சிக்கு 55 இடங்களும், காங்கிரசுக்கு 5 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 7இடங்களும் கிடைக்கும் என்று 'டைம்ஸ் நவ்' கருத்து கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
ஏ.பி.பி. நியூஸ் எடுத்த கருத்து கணிப்பில் பா.ஜ.,வுக்கு 179 இடங்களும், ஆம் ஆத்மி.,க்கு 45 இடங்களும், காங்கிரசுக்கு 26 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 22 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
English summary:
NEW DELHI: The poll results show that the BJP is likely to win in the Delhi civic polls.
மழை வந்தது: மதுரை மண் குளிர்ந்தது

இந்நிலையில், இன்று 23 ம் தேதி மாலை திடீரென பலத்த இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மதுரையின் கோரிப்பாளையம், பெரியார் பஸ் நிலையம் பகுதி, தெப்பக்குளம், அண்ணா நகர், கேகே நகர், பைபாஸ் ரோடு, தினமலர் அவின்யூ உள்ளிட்ட பல பகுதிகளில் நல்ல மழை பெய்தது. மழை காரணமாக வெயிலால் அவதிப்பட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மழை தொடர வேண்டும் என கடவுளை வேண்டுவதாக கூறினர்.
English Summary:
Madurai: The summer heat in Madurai is gaining people. So people have been suffering from children and adults. People were afraid to come out. People who were waiting for the rain would get disappointed.
ஆண்டுக்கு 12 செயற்கைகோள்கள்: இஸ்ரோ முயற்சி

விண்வெளி நிலையம் அமைக்க ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். சந்திராயன் 2 திட்டம் முழுக்க முழுக்க இந்தியாவை சார்ந்ததாக இருக்கும். இதில் ரஷ்யாவின் பங்களிப்பு இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
Hyderabad: Indian Space Research Organization (ISRO) chairman Kiran Kumar has said that it is trying to launch 12 satellites annually.
4 வருடங்களில்வெயில் கொடுமைக்கு 4,620 பேர் பலி

மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின்படி, கடந்த 2016ம் ஆண்டில் மோசமான வானிலை காரணமாக 1,600 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில், வெயில் கொடுமைக்கு 557 பேர் பலியாகியுள்ளனர். 2015ல் 2,081 பேரும், 2014ல் 549 பேரும், 2013ல் ஒருங்கிணைந்த ஆந்திராவில் 1,443 பேரும் பலியாகியுள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த 2010ல் வெயிலுக்கு ஆமதாபாத் நகரில் 65 பேர் உட்பட, நாடு முழுதும் 800பேர் பலியாகியிருந்தனர்.
English summary:
4,620 people have died in the past four years. In Andhra Pradesh and Telengana, 4,246 victims were killed.
இலையை சாப்பிட்டு வாழும் அதிசய மனிதர்

இது குறித்து அவர் கூறியதாவது: 25 வயதில் வறுமையில் வாடிய போது பட்டினியாக கிடந்தேன். அன்று எனது பசியை போக்க இலை, தழைகளை சாப்பிட்டேன். அது முதல், இது எனக்கு பழக்கமாகிவிட்டது. எவ்வித நோயும் என்னை தாக்கியதில்லை. டாக்டரிடமும் சென்றதில்லை. இவ்வாறு மெஹ்முத் கூறினார்.
English summary:
ISLAMABAD: Mehmood Bhat from Pakistan's Gujranwala Command He has lived only the leaves of the trees for the past 25 years. Thus, he was not affected by any disease.
பொது நுழைவுத்தேர்வு: தமிழகம் எதிர்ப்பு

English summary:
New Delhi: Chief Minister Palanisamy said at a meeting of the finance minister that the farmers should consider the reasonable demand of the Central Government.
தமிழகத்திற்கு ரூ.17 ஆயிரம் கோடி நிதி: முதல்வர் கோரிக்கை

English Summary:
New Delhi: Prime Minister Narendra Modi met Prime Minister Narendra Modi at a meeting of the Naidu Ayodh meeting in New Delhi, which will give him Rs 17,000 crore immediately.
டில்லி உள்ளாட்சி தேர்தல்: ஓட்டுப்பதிவு மந்தம்

English Summary:
Local body elections in Delhi The three cities started this morning. Governor, Chief Minister Kejriwal and former Delhi Chief Minister Sheila Dikshit have recorded their dowry
முதல்வர்கள் இணைந்து செயல்படுங்கள்:பிரதமர்
புதுடில்லி:அனைத்து முதல்வர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் புது இந்தியா சாத்தியமாகும் என பிரதமர் மோடி கூறினார்.
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடந்தது. 3வது முறையாக இந்த கூட்டம் நடந்தது. இதில் பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார், கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: புது இந்தியா உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை நிதி ஆயோக் எடுத்துள்ளது. அரசின் உத்தரவுகளை மட்டும் பின்பற்றி நிதி ஆயோக் செயல்படவில்லை. நிபுணர்கள், வல்லுநர்கள் இதில் உள்ளனர். மாநில அரசு கொள்கை முடிவில் தங்களது பங்களிப்பை அளிக்கின்றன. அனைத்து மாநிலங்கள் மற்றும் முதல்வர்கள் இணைந்து செயல்படுவதன் மூலம் புது இந்தியா சாத்தியமாகும்.
ஜிஎஸ்டி மசோதா, ஒரே நாடு, ஒரே நம்பிக்கை, ஒரே இலக்கு ஆகியவற்றை பிரதிபலிக்கிறது. ஒரே நேரத்தில் லோக்சபா, சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: புது இந்தியா உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை நிதி ஆயோக் எடுத்துள்ளது. அரசின் உத்தரவுகளை மட்டும் பின்பற்றி நிதி ஆயோக் செயல்படவில்லை. நிபுணர்கள், வல்லுநர்கள் இதில் உள்ளனர். மாநில அரசு கொள்கை முடிவில் தங்களது பங்களிப்பை அளிக்கின்றன. அனைத்து மாநிலங்கள் மற்றும் முதல்வர்கள் இணைந்து செயல்படுவதன் மூலம் புது இந்தியா சாத்தியமாகும்.
ஜிஎஸ்டி மசோதா, ஒரே நாடு, ஒரே நம்பிக்கை, ஒரே இலக்கு ஆகியவற்றை பிரதிபலிக்கிறது. ஒரே நேரத்தில் லோக்சபா, சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.
பிரிட்டனை விட்டு வெளியேறும் இந்தியர்கள்

வெளிநாட்டு வேலை என்றால், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியர்களுக்கு சொர்க்கபூமியாக இருப்பது பிரிட்டன் தான். ஆனால், சமீபகாலமாக, சட்டவிரோதமாக அங்கு குடியேறிய இந்தியர்கள், விசா காலம் முடிந்த பிறகு பல ஆண்டுகளாக அங்கு தங்கி இருக்கும் இந்தியர்கள், இனிமேல் அங்கு காலம் தள்ள முடியாது என்ற முடிவுக்கு வந்து, தானாகவே அங்கிருந்து சொந்த நாட்டுக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். கடந்த, 2016ம் ஆண்டில், 5,365 இந்தியர்கள் அங்கிருந்து வெளியேறி உள்ளனர். அந்த ஆண்டில் அங்கிருந்து வெளியேறியவர்களின் மொத்த எண்ணிக்கையில், இது, 22 சதவீதமாகும்.
இதற்கு மேல் அங்கு தங்கினால், வேலை கிடைக்காது, வங்கி கணக்கு துவக்க முடியாது, டிரைவிங் லைசென்ஸ் கிடைக்காத நிலை உள்ளிட்ட பல சேவை வசதிகள் கிடைக்காது என்பதால் தான் இந்தியர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர் என, இந்தியர்கள் அதிகம் வசிக்கும், இயாலிங் சவுதால் என்ற தொகுதியின் தொழிலாளர் கட்சி எம்.பி., வீரேந்திர சர்மா கூறினார்.
English summary:
London: The number of Indians staying in Britain has set a new turn.
மும்பையில் பெட்ரோல் விலை அதிகம்

வரி உயர்வு:
நாடு முழுதும், பெட்ரோல் விலை சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதனுடன் வாட் வரி உள்ளிட்ட சில வரி விதிக்கப்படுகிறது. தற்போது மகாராஷ்டிரா மாநில அரசு வாட் வரியுடன் இணைந்து வசூலிக்கும் வறட்சி வரியை ரூ.3 ஆக உயர்த்தியுள்ளது. இதனால், மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.45 ஆகவும், நாக்பூரில் ரூ.77.14 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரத்தில் டில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.68.26 ஆக உள்ளது. கடந்த வருடம் வறட்சி இல்லாத போது, இந்த வறட்சி வரியை மாநில அரசு ரூ. 6 லிருந்து ரூ.9 ஆக உயர்த்தியது.
வேறெங்கும் இல்லை:
தற்போது வரியை உயர்த்தியுள்ளதன் மூலம், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகள் மற்றும் பார்கள் மூடுவதினால் ஏற்படும் இழப்பை சரி செய்ய முடியும் என பெயர் வெளியி விரும்பாத அதிகாரி ஒருவர் கூறினார்.
பெட்ரோல் விற்பனை டீலர் ஒருவர் கூறுகையில், கடந்த ஒரு வருடத்தில் வரி யுடன் சேர்த்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7 முதல் 8 வரை உயர்ந்துள்ளது. வறட்சி வரி மற்ற மாநிலங்களில் வசூல் செய்யப்படுவதில்லை. இந்த வரியை அரசு விலக்கி கொண்டால், மற்ற மாநிலங்களை விட பெட்ரோல் விலை இங்கு குறைவாக இருக்கும் என்றார்.
கடந்த ஏப்ரல் 1 ல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3.77 எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தபோது, அதன் பலனை மக்களுக்கு மாநில அரசு கொடுக்கவில்லை. டீலர்கள் கமிஷன் உயர்த்தி தரக்கோரி போராட்டம் நடத்துகின்றனர். இது ஏற்கப்பட்டால், விலை இன்னும் அதிகரிக்கும் என பொது மக்கள் ஒருவர் கவலையுடன் கூறினார்.
English summary:
MUMBAI: Mumbai Indians have bought petrol at a higher price.
ரயில்கள் பற்றி தகவல் அறிய மெகா ஆப்

ஏராளமான ஆப் வசதிகள்:
ரயில்கள் இயக்கம் தொடர்பாக தகவல் அறிய தற்போது ஏராளமான ஆப் வசதிகள் உள்ளன. சி.எம்.எஸ்., ஆப் எனப்படும் புகார் நிர்வாக சிஸ்டம் ஆப் வசதி; தேவைப்படும் தகவல்கள தரும் தேசிய ரயில் விசாரணை சிஸ்டம் எனப்படம் என்.டி.இ.எஸ்., ஆப் வசதி; முன்பதிவு டிக்கெட் மற்றும் முன்பதிவு வசதி இல்லாத டிக்கெட் பெறுவதற்கான ஆப் வசதி; இணைய தளம் மூலம் உணவுக்கு முன்பதிவு செய்யும் ஐ.ஆர்.சி.டி.சி., ஆப் வசதி என பல ஆப் வசதிகள் உள்ளன. இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து மெகா ஆப் வசதியை தான் ரயில்வே துறை தற்போது உருவாக்கி வருகிறது. இந்த ஆப் வசதிக்கு, ' மெரிரயில், இரயில், மைரயில், ரயில் அனுபூதி' என, பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
இது குறித்து, ரயில்வே வாரிய உறுப்பினர்( போக்குவரத்து) முகமது ஜம்ஷெத் கூறியதாவது:
ரயில்கள் தாமதமாகும் போது, சரியான தகவல்களை பெறுவதில் சிக்கல் இருப்பது உண்மை தான். இப்பிரச்னையை தீர்க்க தான் புதிய மெகா ஆப் வசதி உருவாக்கப்படுகிறது. ஜூன் மாதம் முதல் இது செயல்பாட்டுக்கு வரும். ரயில் வரும் நேரம், புறப்படும் நேரம், தாமதம், ரத்து அறவிப்பு, பிளாட்பாரம் எண், ரயில் எத்தனை மணி நேரம் இயக்கப்படும், படுக்கை வசதி இருக்கிறதா, டாக்சி புக்கிங், போர்டர் வசதிக்கு உதவுவது, ஓய்வு அறை, ஓட்டம், சுற்றுலா வசதி, இணைய தளம் மூலம் உணவுக்கு ஆர்டர் கொடுப்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும், உதவிகளையும் இந்த ஆப் வசதி மூலம் பெற முடியும். இந்த புதிய ஆப் வசதிக்கு,'ஹிந்த்ரயில்' என, பெயரிடப்படலாம். ஆனால், அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
English Summary:
New Delhi: The Railways has created a new mega supermarket to respond to all the doubts of the train. The new App facility comes in from June. It is reported that the name of this facility is 'Hindhirai'.
3வது நாளாக இன்றும் தினகரன் ஆஜராக உத்தரவு

போன் அழைப்புகள் ஆய்வு:
சில நாட்களுக்கு முன்னர் டில்லியில் சிக்கிய தரகர் சுகேஷ் சந்திரா அளித்த தகவலின்படி போலீசார் தினகரன் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, உதவியாளர் ஜனார்த்தனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தினகரனின் செல்போன் அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
ஒரே வரியில் பதில்:
தினகரன், தரகர் சுகேஷ் சந்திரா, நண்பர் மல்லிகார்ஜூனா, ஜனார்த்தனன் ஆகிய நால்வரிடமும் விசாரணை நடக்கிறது. விசாரணையில் அனைத்து கேள்விகளுக்கும் தினகரன் ஒரே வரியில் பதில் கூறுவதால் விசாரணை தொடர்ந்து நீடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றும் ஆஜராக உத்தரவு:
சுமார் 10 மணி நேரம் தொடர்ந்த விசாரணை நள்ளிரவு 12.30 மணிக்கு நிறைவடைந்தது. விசாரணைக்கு பின்னர் இன்று (24ம்தேதி) மாலை 4 மணிக்கு மீண்டும் தினகரன் ஆஜராக வேண்டும் என டில்லி போலீசார் உத்தரவிட்டுள்ளனர். மல்லிகார்ஜூனா, ஜனார்த்தனன் ஆகியோர் மதியம் 2 மணிக்கு ஆஜராக வேண்டும் எனவும் உத்தவிடப்பட்டுள்ளது. இரவு 1.30 மணியளவில் தினகரன் விசாரணை முடிந்து புறப்பட்டார்.
English summary:
NEW DELHI: The Delhi Criminal Court today ordered prosecution for bin Laden's bribe to get a bribe to get a double leaf symbol. The investigating agency has been ordered to appear for the second day at 4 pm on Tuesday (24th May).
இரு அணிகள் இணைந்தால் நல்லாட்சி: நட்ராஜ் எம்.எல்.ஏ.,

English summary:
Chennai: Mylapore MLA in Kindi, Natraj's interview: Both teams of the High Command have to work together. The BJP is not responsible for the internal party's internal problem.
காஷ்மீர் போட்டோகிராபரின் மனிதாபிமானம்

சிரியாவில் நடந்த சம்பவம்:
கலவர பகுதியில், வன்முறை நடக்கும் பகுதியில், போர்கள பகுதியில் எடுக்கப்படும் படங்கள் உலகளவில் பேசப்படும். ஆனால், கடந்த வாரம் சிரியாவில் பஸ்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, படுகாயம் அடைந்த குழந்தைகளை காப்பாற்ற அப்த் அல்காதர் ஹபாக் என்ற போராட்டோகிராபர் காப்பாற்ற முயற்சி எடுத்தது உலகளவில் பெரும் பாராட்டை பெற்றது. இதே போன்ற ஒரு சம்பவம், சில நாட்களுக்கு முன் காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் நடந்துள்ளது.
ஸ்ரீநகரின் நவாக்தால் பகுதியில் கடந்த வியாழக்கிழமை உயர்நிலைப்பள்ளி மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் அவர்களை தவிர அந்த இடத்தில், சொற்ப எண்ணிக்கையில் போலீசாரும், பத்திரிகையாளர்கள், போட்டோகிராபர்கள் இருந்தனர். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு கல், குஷ்பூ ஜன் என்ற மாணவியை தாக்கி அவரது மண்டையை பிளந்தது. ரத்தம் சொட்ட சொட்ட கீழே விழுந்த குஷ்பு ஜன்னை கண்டு மற்ற மாணவியர் அலறினர். அந்த பகுதியே திடீரென பதட்டமானது. அப்போது அசோசியேடட் பிரஸ் என்ற வெளிநாட்டு பத்திரிகை ஏஜன்சியின் போட்டோகிராபர் தர் யாசின் என்பவர் தன்னிடம் இருந்த கேமராவை தூக்கி எறிந்து விட்டு, காயமடைந்த மாணவியை இரு கைகளிலும் ஏந்தியபடி மருத்துவமனையை நோக்கி ஓடினார். மற்ற மாணவியரும் கதறி அழுதபடி அவரை பின் தொடர்ந்து ஓடினர்.
வழியில் வந்த காரை நிறுத்தி, காயமடைந்த மாணவியை அதில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். சரியான நேரத்தில் அழைத்து செல்லப்பட்டதால், தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த மாணவி உயிர் பிழைத்தார்.
போட்டோகிராபர் தர் யாசின், காயமடைந்த மாணவியை கைகளில் சுமந்து செல்லும் காட்சியை உள்ளூர் போராட்டோகிராபர் ஒருவர் படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இணையத்தில் இந்த படம் வைரலாக பரவி வருகிறது. போட்டோகிராபர் தர் யாசினை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மாணவியர் மீது கற்களை வீசியது விஷமிகளும், மாணவர்களும் தான் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை உள்ளூர் மக்கள் மறுத்துள்ளனர்.
English summary:
Srinagar: Srinagar, in Srinagar, has not been interested in catching a picture of a wounded girl who has been praising the photographer for trying to save him.
பந்த்: பெருகும் ஆதரவு; வணிகர்கள் சங்கம் கடை அடைக்க முடிவு

வணிகர் சங்கம் ஆதரவு:
இதனிடையே, இந்த பந்திற்கு தமிழக வணிகர் சங்க பேரவையும் ஆதரவு தெரிவித்துள்ளது. 60 லட்சத்திற்கு மேற்பட்ட வணிகர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் எனவும், மாவட்ட தலைநகரங்களில் நடக்கும் போராட்டங்களிலும் அவர்கள் கலந்து கொள்வர் என வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் கூறினார்.
புதுச்சேரியில் ஆதரவு:
பந்திற்கு புதுச்சேரி தொழில் வர்த்தக சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. போராட்டத்திற்கு ஆதரவாக கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary:
Chennai: In Tamil Nadu in favor of farmers In this struggle, DMK leader Stalin is attending Tiruvarur.
ரயில் கட்டண சலுகையில் மாற்றம் வருகிறது

53 வகையான சலுகைகள்:
ரயில்வே துறையில், பல்வேறு பிரிவுகளின் கீழ், 53 வகையான கட்டண சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், மாற்றுதிறனாளிகள், மூத்த குடிமகன்கள், மாணவர்கள், ராணுவ வீரர்கள், நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் ஆகியோர் பலன் அடைந்து வருகின்றனர். இதற்காக, ஆண்டுதோறும், 1,600 கோடி ரூபாய் செலவாகிறது. இதில் சில கட்டண சலுகைகள், 1950 ஆண்டு முதல் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது, மூத்த குடிமகன்களின், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு பயண கட்டணத்தில், 40 சதவீதமும்; 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு பயண கட்டணத்தில், 50 சதவீதமும் தள்ளுபடி சலுகையாக அளிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், நஷ்டத்தை ஈடுபட்ட கட்டண சலுகையில் கை வைக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி மூத்த குடிமகன்கள் என்பது, 60 வயதில் இருந்து, 70 வயதாக உயர்த்தப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர, மூத்த குடிமகன்களுக்கு அளிக்கப்படும் கட்டண சலுகைக்கான தொகையை, சமூக நீதி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும்; மாணவர்களுக்கான கட்டண சலுகை தொகையை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும்; ராணுவ வீரர்களுக்கான கட்டண சலுகை தொகையை, பாதுகாப்பு அமைச்சகமும் ரயில்வே துறைக்கு தர வேண்டும் என கோரிக்கை விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary:
Railway Ministry has decided to reduce the loss of Rs 34,000 crore annually in the railways, with a fee offering. As a step, senior citizens are planning to increase the age limit from 60 to 70.
ஜார்கண்ட்டில் ஆதார் விவரங்கள் 'லீக்'

தோனிக்கு வந்த சிக்கல்:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஆதாருக்காக, தன் கைரேகை விவரங்களை பதிவு செய்த போது அது குறித்த புகைப்படங்கள் இணைய தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது அவர் சார்ந்த ஜார்கண்ட் மாநிலத்தில் மேலும் ஒரு சர்ச்சை உருவாகி உள்ளது. ஜார்கண்ட் மாநில அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் மற்றும் சமூக பாதுகாப்பு துறை சார்பில், 16 லட்சம் பென்ஷன்தாரர்களின் விவரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவர்களில், 15 லட்சம் பேர் தங்களின் ஆதார் விவரங்களை அளித்துள்ளனர். இந்த துறையின் இணைய தளம் ஜார்கண்டில் உள்ள தேசிய தகவல் மையம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணைய தளத்தில் பென்ஷன்தாரர்களின் வங்கி கணக்கு விவரங்கள், ஆதார் எண் மற்றும் கைரேகை விவரங்கள் திடீரென வெளியாகின.
இதையடுத்து ராஞ்சியில் உள்ள ஆதார் எண் அலுவலகம் சார்பில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசப்பட்டது, அந்த இணையதளம் உடனடியாக முடக்கப்பட்டது. இதுகுறித்து துறை இயக்குனர் ராம் பர்வேஷ் கூறுகையில், '' ஆதார் எண் அலுவலகத்தில் எங்களுக்கு போன் வந்தது. அவர்கள் கூறிய பிறகே, இணைய தள குழப்பம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த விவகாரத்தின் முக்கியத்துவத்தை நாங்கள் அறிந்துள்ளோம். இந்த தவறு யாரால் நிகழ்த்தப்பட்டது என்பதை விசாரித்து வருகிறோம்,'' என்றார்.
English summary:
Ranchi: The Jharkhand state government website has released a huge controversy over the millions of pensioners'
பெண்களுக்கு அதிகாரம்: மோடி மனைவி அறிவுரை

யசோதா பென், சில காலமாக, நாடு முழுதுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். உ.பி., மாநிலம், மதுராவில் உள்ள கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்தார். கடந்த வாரம் தெலுங்கானா சென்று, அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார். அங்குள்ள நாக கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.
சிறப்பான வரவேற்பு:
இதன் தொடர்ச்சியாக, நேற்று பீகார் மாநிலத்திற்கு சென்றார். பெகுசராய் என்ற இடத்தில், மேவார் மன்னர் மகாராணா பிரதாப்பின் அமைச்சர் பாபா ஷாவின் பிறந்த நாள் விழா நடந்தது. இதில் பங்கேற்க செல்லும் வழியில், பீகார் தலைநகர் பாட்னாவிற்கு சென்ற யசோதா பென்னிற்கு, ராஜ்ய தைலிக் - சாகு இனத்தவர் சார்பில், சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது சிறிய சொற்பொழிவு ஆற்றிய யசோதா பென், சமூகத்தை ஒட்டுமொத்தமாக மேம்படுத்த வேண்டும் என்றால், பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்த இனத்தை சேர்ந்த பெண்கள் முன்வந்து சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் அளிக்க சமூகம் முன்வர வேண்டும். பீகார் மாநிலமும், அதன் மக்களும் சிறப்பானவர்கள் என்றார்.
யசோதா பென்னின் சகோதரர் பிரவீன் சந்திர மோடி என்ற அசோக் மோடி கூறுகையில், தியாகம் மற்றும் சிக்கனத்தின் மறுவடிவமே என் சகோதரி. இந்த நாட்டிற்காக பிரதமர் மோடி பணியாற்றுகிறார். மக்கள் அவருடன் உள்ளனர் என்றார்.
English summary:
Patna: Prime Minister Narendra Modi's wife Yashoda Ben, who has traveled for the first time in Bihar, said, "The country should take the initiative to give women power."
60 ஆயிரம் ரூபாய் நாற்காலி: துணைவேந்தர் அடம்

ிதி பிரிவு மறுப்பு:
உத்தரகாண்ட் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருப்பவர் பியூஸ் காண்ட் திக் ஷித். இவர், அலுவலகத்தில் பயன்படுத்தி வரும் நாற்காலி உடைந்து விட்டது. எனவே, புதிதாக, 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு நாற்காலி வாங்கி தரும்படி துணைவேந்தர் திக் ஷித் கூறியுள்ளார். ஆனால், பல்கலையின் நிதி பிரிவு, இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. பல்கலையில் நிதி பற்றாக்குறை உள்ளதால், குறைந்த விலை கொண்ட நாற்காலியை பயன்படுத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளது.ஆனால், துணைவேந்தர் திக் ஷித் இதை கேட்க மறுத்து விட்டார். சொகுசு நாற்காலி வரும்வரை, தரையில் அமர்ந்து பணி புரிவேன் கூறி, அதன்படியே சிலநாட்களாக செயல்பட்டு வருகிறார்.
இது குறித்து,அவர் கூறுகையில், துணைவேந்தர் பதவி என்பது கவுரவமிக்கது. அதற்கு ற்றவாறு தான் அதன் இருக்கையும் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதுகுறித்து, பல்கலையின் நிதிபிரிவு உயர் அதிகாரி தான்ஜிம் அலி கூறுகையில், பல்கலையின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு தான், அது போல் கூறினோம். ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே திணறி வருகிறோம். இத்தனை விலை உயர்வு உள்ள நாற்காலியை, தலைமை செயலக அதிகாரிகள் கூட பயன்படுத்துவதில்லை. எனினும், துணைவேந்தர் உத்தரவை தொடர்ந்து, புதிய நாற்காலிக்கு ஆர்டர் கொடுத்துள்ளோம். விரைவில் அந்த நாற்காலி வந்து விடும் என்றார்.
English summary:
Haridwar: A Vice Chancellor of Uttarakhand Sanskrit University in Haridwar, who has bought a chair worth 60,000 rupees. Until that chair is coming, I will sit on the floor and work.
Tuesday, 28 March 2017
தேச விரோத கோஷம் போட்டால் அடி

நாட்டிற்கு எதிராக பேசினால், வாய் மூடி பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். இந்தியாவிற்கு எதிராக கோஷமிட்டால், அவர்களை அடித்து உதைப்போம். இவ்வாறு அவர் கூறினார். அவரது பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு டிரம்ப் வாழ்த்து

உ.பி., கோவா, பஞ்சாப், மணிப்பூர் மற்றும் உத்திரகண்ட் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், பஞ்சாப் தவிர்த்து 4 மாநிலங்களில் வெற்றி பெற்ற பா.ஜ., ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்காக, அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இத்தகவலை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
மனநல மருத்துவ மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்

தினகரன் மீது புகார் அளிக்க முடிவு: மைத்ரேயன்

பணப்பட்டுவாடா:
இதுதொடர்பாக பன்னீர் அணியை சேர்ந்த மைத்ரேயன் தெரிவிக்கையில், ஆர்.கே.நகரில் அமைச்சர்கள் மூலம் டி.டி.வி.தினகரன் பணப்பட்டுவாடா செய்கிறார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம். டில்லியில் இன்று (மார்ச்,28) மதியம் 12 மணி அளவில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இடைத்தேர்தல்:
ஏப்ரல் 12 ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் சசிகலா அணியிலிருந்து, அ.தி.மு.க., அம்மா கட்சி சார்பில் டி.டி.வி.தினகரனும், பன்னீர் அணியிலிருந்து அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா கட்சி சார்பில் மதுசூதனன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தேர்தல் அறிக்கை

வாக்குறுதிகள்:
மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச ஐஏஎஸ் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். கொருக்குப்பேட்டையில் புதிதாக சுரங்க வழிப்பாதை ஏற்படுத்தி தரப்படும், பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட்டு இலவச தையல் மிஷின்கள் வழங்கப்படும். மீனவர்களுக்கு மானிய விலையில் படகுகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கப்படும். தண்டையார்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படும். இவ்வாறு எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது
மோகன் பாகவத்தை ஜனாதிபதி ஆக்க சிவசேனா விருப்பம்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் 2017- ஜூலை இறுதியில் நிறைவடைகிறது. அதற்கு முன்பாக அந்த பதவிக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த நிலையில், பா.ஜ., சார்பில் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்யவும், தேர்தல் குறித்து வியூகம் வகுப்பதில் பா.ஜ., மும்மரமாக உள்ளது. இதற்கான நடவடிக்கையில் பிரதமர் மோடி இறங்கி உள்ளார். இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் மோடி அடுத்த வாரம் டில்லியில் இரவு விருந்து அளிக்கிறார்.
உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பு:
இவ்விருந்தில், கலந்து கொள்ளுமாறு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதனை ஏற்று உத்தவ் தாக்கரே, இந்த விருந்தில் பங்கேற்பார் என்று சிவசேனா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி பதவிக்கு பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தை ஜனாதிபதி ஆக்கவேண்டும் என்பதை கருத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும் என சிவசேனா தெரிவித்துள்ளது.
2017-ல் குறைவாகவே தென்மேற்கு பருவ மழை பெய்யும் - ஸ்கைமெட் தகவல்

விவசாயம் பாதிப்பு:
கடந்த ஆண்டு (2016) நாட்டின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழை குறைவாக இருந்ததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த 1951 முதல் 2000 வரையிலான இடைப்பட்ட வருடங்களில் நாட்டில் சராசரி தென்மேற்கு மழை 89 செ.மீ., ஆக இருந்தது. இந்தாண்டு (2017) நாட்டின் தென்மாநிலங்களில் 89 செ.மீ,., க்கும் குறைவாகவே மழை பெய்யும் என்று ஸ்கைமெட் அறிவித்துள்ளது.
வடமாநிலங்களில் நல்ல மழை:
தென் மாநிலங்களான தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்றவற்றில் இந்தாண்டு சராசரிக்கும் குறைவாகவே தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும் மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத், மேற்கு வங்க மாநிலங்களில், நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது, இவவாறு ஸ்கைமெட் தனியார் வானிலை அறிவிப்பு மையம் மேலும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆர்.கே.நகர் வேட்பாளர்களுக்கு தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்
March 28, 2017bi-election, chennai, election commission of india, instruction, R.K.nagar, tamil nadu


150 மணி நேரத்தில் 50 முடிவுகள்: உ.பி., முதல்வரின் அதிரடி

அதிரடி முடிவுகள்:
சட்டவிரோதமாக செயல்படும் இறைச்சி கூடங்களுக்கு தடை விதிப்பு, மக்கள் அதிகமாக கூடும் சந்தை இடங்களில் சுகாதார நிலை குறித்து சோதனை, பெண்களுக்கு எந்தஒரு தொல்லையும் ஏற்பட்டுவிடாத வண்ணம் போலீஸ் கண்காணிப்பு, அலுவலங்களில் அதிகாரிகள், ஊழியர்கள் பான் மசாலா பயன்படுத்த கூடாது. அனைத்து துறைகளும் மாதம் தோறும் அறிக்கை தாக்கல் செய்தல் வேண்டும். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் சொத்து விபரங்களை தெரிவிக்க வேண்டும். ஆசிரியர்கள் பள்ளிகளில் டீசர்ட் அணிய கூடாது. பள்ளியில் தேவையில்லாமல் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த கூடாது. அரசு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு.அரசு அலுவலகம் தொடர்பான நடவடிக்கைகள் உள்ளிட்ட 50 முடிவுகளை எடுத்து உள்ளார்.
அதிகாரிகளுக்கு உத்தரவு:
மாநிலத்தில் அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக இல்லை என்பதை ஜூன் 15ம் தேதிக்குள் பொதுத்துறை உறுதிசெய்ய வேண்டும். கிரிமினல் பின்னணி கொண்ட ஒப்பந்ததார்களை அதிகாரிகள் உடனடியாக மாற்ற வேண்டும். மாநிலத்தில் அரசு அதிகாரிகள் அலுவலக ஆவணங்களை வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது என அமைச்சர்கள் அறிவுரை வழங்கவேண்டும்.
மாநிலம் முழுவதும் பெண் போலீஸ் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும், ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் வரவேற்பு அறையில் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் போலீஸ் இருக்க வேண்டும். உத்தரபிரதேசம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த, விழா காலங்களில் தடையில்லா மின்சார உறுதி. இவ்வாறு அதிகாரிகளுக்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.
போராட்டக்குழுவினரிடம் புதுக்கோட்டை கலெக்டர் உறுதி

விவசாயிகள் போராட்டம்: தமிழக அரசு ஏற்பாடு

உள்ளூர் விமானபோக்குவரத்தில் இந்தியா மூன்றாமிடம்

உள்ளூர் விமானச்சேவையை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருவதால் உலகளவில் இந்தியா 3ம் இடம் பெற்றுள்ளது. ஆசிய பசிபிக் விமான போக்குவரத்து மையம் வௌியிட்டுள்ள பட்டியலில் 2016ம் ஆண்டுக்கான சந்தையில் இந்தியா 100 மில்லியன் பயணிகளுடன் 3ம் இடமும், சீனா 490 மில்லியன் பயணிகளுடன் 2ம் இடமும், அமெரிக்கா 815 மில்லியன் பயணிகளுடன் முதலிடமும் பெற்றுள்ளது. ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா 3ம் இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் தீ விபத்து: குடிசை வீடுகள் எரிந்து நாசம்
