
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களான அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அவை தலைவர் மதுசூதனன், அமைப்பு செயலாளர் பொன்னையன், எம்.பி., மைத்ரேயன், எம்.எல்.ஏ., சரவணன் உள்ளிட்டோருடன் இன்று (பிப்.,15) இரவு 8.45 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு சென்றார். கவர்னர் வித்யாசாகர் ராவுடனான ஓ.பி.எஸ்., அணியினரின் சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நடந்தது.
முன்னதாக, எடப்பாடி பழனிச்சாமி அணியினர் இன்று (பிப்.,15) இரவு 8 மணிக்கு கவர்னரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
English Summary:
Chennai: Chief o pannirselvam governor met with his supporters.