ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக வெறிச்சோடிய மதுரை சாலைகளில் சிறுவர்கள் ஸ்கேட்டிங் விளையாடி மகிழ்ந்தனர்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக் கிழமையான இன்று முழு ஊடங்கு அமல்படுத்தபட்ட நிலையில், மதுரை நகர் பகுதிகளில் உள்ள சாலைகளில் பொதுமக்கள் மற்றும் வாகன நடமாட்டமின்றி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்நிலையில் மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள நகைகடை பஜார் பகுதி சாலை முழுவதிலும் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி இருந்ததால் அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் சாலையில் ஸ்கேட்டிங் விளையாடி மகிழ்ந்தனர்.
அதை பார்த்த காவல்துறையினர் அவர்களுடைய விளையாட்டு திறமையை கண்டு பாராட்டியதோடு கொரோனா பரவல் இருப்பதால் இது போன்று வெளிப்புறங்களில் விளையாட அனுமதி இல்லை எனக்கூறி சிறுவர்களின் பெற்றோர்களை அழைத்து ஊரடங்கு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி சிறுவர்களை வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.
http://dlvr.it/SGpN3H
Sunday, 9 January 2022
Home »
» மதுரை: வெறிச்சோடிய சாலைகளில் ஸ்கேட்டிங் விளையாடிய சிறுவர்கள்.. திருப்பி அனுப்பிய போலீசார்
மதுரை: வெறிச்சோடிய சாலைகளில் ஸ்கேட்டிங் விளையாடிய சிறுவர்கள்.. திருப்பி அனுப்பிய போலீசார்
Related Posts:
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!