கேரளா மாநிலம் கோட்டயத்தில் இருக்கிறது மகாத்மா காந்தி பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் சிறப்பு விடுமுறையை அறிவித்து இருக்கிறது. அதாவது இப்பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகளுக்கு மகப்பேறு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
படிக்கும் மாணவிகள் சிலர் படிக்கும்போதே திருமணம் செய்து கொள்வதுண்டு. அவர்கள் படிப்பு முடிந்த பிறகுதான் குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டிய சூழ்நிலையில் இருந்தனர். ஆனால் கோட்டையம் பல்கலைக்கழகம் மாணவிகளுக்கு அந்த சிக்கலை நீக்கும் விதமாக இளங்கலை மற்றும் முதுகலைப்பட்டம் படிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகள் 60 நாள்கள் பேறுகால விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்து இருக்கிறது.மகாத்மா காந்தி பல்கலைக்கழகம்
இந்த விடுமுறையை படிப்பு காலத்தில் ஒருமுறை மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். அதனை குழந்தை பெற்ற பிறகோ அல்லது குழந்தை பிறப்பதற்கு முன்போ எடுக்கலாம். முதல் குழந்தையாகவோ, இரண்டாவது குழந்தையாகவோ இருக்கலாம். ஆனால் படிப்புக் காலத்தில் பேறுகால விடுமுறை ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அர்விந்த குமார் தலைமையில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்தே இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
அதோடு மாணவிகளுக்கு கருச்சிதைவு ஏற்பட்டாலோ, குடும்ப கட்டுப்பாடு செய்துகொண்டாலோ அவர்களுக்கு 14 நாள்கள் விடுமுறை வழங்கப்படும். விடுமுறைக்காலத்தில் செமஸ்டர் தேர்வு வந்தால் அதனை அடுத்த செமஸ்டரில் எழுத அனுமதிக்கப்படும். pregnancy கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று வராமல் தடுப்பது எப்படி? மருத்துவர் கைடன்ஸ்!
அதே நேரம் பேறுகால விடுமுறை காலத்தில் இன்டர்னல் தேர்வு, வாய்மொழித்தேர்வு இருந்தால் அதனை சம்பந்தப்பட்ட துறையின் தலைவர்கள் மாணவிகளுக்கு வேறு தேதியில் நடத்திக்கொடுப்பார்கள் என்று பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேறுகால விடுமுறை எடுக்க டாக்டர் சான்றிதழுடன் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும். விடுமுறை தொடங்குவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பே விண்ணப்பம் கொடுக்கவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://dlvr.it/SfvzKZ
Sunday, 25 December 2022
Home »
» `கர்ப்பிணி மாணவிகளுக்கு 60 நாள்கள் பேறுகால விடுமுறை!’ - கேரள பல்கலைக்கழகம்
`கர்ப்பிணி மாணவிகளுக்கு 60 நாள்கள் பேறுகால விடுமுறை!’ - கேரள பல்கலைக்கழகம்
Related Posts:
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!