Monday, 27 March 2017
Tuesday, 7 March 2017
துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை: இலங்கை கடற்படை மறுப்பு

இலங்கை வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்தி: மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக இந்திய அரசு நடத்தும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவோம். தமிழக மீனவர்கள் மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்படுவர். மீனவர் கொல்லப்பட்டது கவலை அளிக்கிறது. இவ்வாறு செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வர மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் மீனவர் பிரிட்ஜோ பலியானார். இதன் காரணமாக இப்பகுதியில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இலங்கை அரசு தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary:
Colombo: Sri Lankan Navy opened fire on fishermen in Rameswaram as the country's navy spokesman Commander Chaminda has mounted. This press release issued by the Sri Lankan Navy, Tamil Nadu fishermen allegedly by the Sri Lankan navy shot dead wrong. Preliminary investigation revealed that the fisherman was shot and killed. GPS., Facility was conducted to investigate the incident. Sri Lanka Navy has not held a firearm. Thus, the story said.
Monday, 6 March 2017
வெளிநாட்டு நீதிபதிகளை ஏற்க இலங்கை மறுப்பு

மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரணை நடத்துவதில் இலங்கை காலதாமதம் செய்கிறது. விசாரணைக்காக கலப்பு கோர்ட் அமைக்கப்பட வேண்டும். இந்த கோர்ட்டில் உள்ளூர் மற்றும் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என ஐ.நா., மனித உரிமை கவுன்சில் கூறியிருந்தது.
இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியதாவது: கலப்பு கோர்ட் அமைக்க வேண்டும் என்ற ஐ.நாவின் கோரிக்கை சாத்தியமில்லாதது. இலங்கையின் நீதித்துறை மீது சர்வதேச அளவில் நம்பிக்கையில்லாத நேரத்தில் இந்த கோரிக்கை வந்துள்ளது. அதிபர் ஸ்ரீசேன தலைமையிலான அரசு தலைமையில் விசாரணை குழு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கலப்பு கோர்ட் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
Colombo: The war against the LTTE in the final stages of the Committee to investigate human rights abuses overseas UN judges to take place, Sri Lanka has refused to accept the request.
Sunday, 5 February 2017
தமிழர்களுடன் நல்லிணக்கம் ஏற்படுத்த அரசு உறுதி :சிறிசேனா

இலங்கை சுதந்திர தினவிழாவில் உரையாற்றிய அதிபர் சிறிசேனா, நாட்டில் வாழும் தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது.சில சந்தர்ப்பவாதிகளின் குறுக்கீடுகள் இருந்த போதிலும், இந்த உறுதிக்காக நாங்கள் தீர்மானமாக அர்ப்பணிக்கப்பட்டு உள்ளோம். அறிவு மற்றும் புதுமை அடிப்படையிலான பொருளாதாரத்தை நோக்கி அரசு செயல்படும்' என்றார்.
இலங்கை அரசு உறுதி:
இலங்கையில் உள்நாட்டுப்போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகளை அதிபர் சிறிசேனா தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ராணுவ பயன்பாட்டுக்காக கைப்பற்றப்பட்ட தமிழர்களின் நிலங்களை திருப்பி அளிக்கவும், முன்னாள் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் சிலரை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தமிழர்களின் அரசியல் விருப்பங்களை நிறைவேற்ற வழிசெய்யும் வகையில் புதிய அரசியல் சாசனம் உருவாக்கும் பணிகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு உள்ளது.
English Summary:
Colombo: Sri Lanka Freedom day festival ciricena Addressing the President, the Government is determined to bring about reconciliation with Tamils living in the country said.
Monday, 9 January 2017
அரசு கவிழும் என்ற ராஜபக்சேவின் கனவு நிறைவேறாது : இலங்கை அதிபர் சிறிசேனா திட்டவட்டம்

முயற்சி பலிக்காது:
இலங்கை அதிபர் ராஜபக்சே இது குறித்து கூறியதாவது:-
"இந்த அரசு கவிழும் என சிலர் கனவு காண்கிறார்கள். ஆனால், 2020-க்கு முன்பாக இந்த அரசு கவிழ்க்கப்படாது. தேர்தல் வழியாக மக்களால் மட்டுமே இந்த அரசு மாற்றப்படும். அரசியலமைப்பை மீறும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது. அதிகாரத்தைப் பயன்படுத்தி சலுகைகள் அடைந்தவர்களே அரசைக் கவிழ்க்க ஆர்வமாகப் பார்த்திருப்பார்கள். நான் ஒன்றை அவர்களுக்கு தெளிவாகக் கூறுகிறேன். மக்களது ஒப்புதல் இல்லாமல் எதற்கும் இங்கு இடமில்லை”
இவ்வாறு அவர் கூறினார்.
ரணில் சவால்:
கடந்த வாரம் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே,"நான் அடுத்த வாரம் சுவிட்சர்லாந்து செல்கிறேன். அதற்குள் அரசாங்கத்தைக் கவிழ்த்து காட்டுங்கள்" என்று ராஜ பக்சேவிற்கு சவால் விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary:
Colombo - Sri Lanka's government is toppled soon realized the dream of Rajapaksa has said that Sri Lankan President Maithripala ciricena bridge.
Thursday, 5 January 2017
போரின்போது சரணடைந்த தமிழர்களின் பட்டியலை தாக்கல் செய்ய இலங்கை ராணுவத்துக்கு கோர்ட் உத்தரவு

உச்சகட்ட போர்;
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற உச்சகட்ட போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் ராணுவத்திடம் சரண் அடைந்தனர். இவர்களில் பலர் உரிய விசாரணையின்றி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்து பின்னர் சரண் அடைந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இவர்களில் சுமார் 6 ஆயிரம் பேர் சீர்திருத்த முகாம்களில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக அரசு கூறி வருகிறது.
கொடுமையின் உச்சம்:
இவர்களை தவிர மேலும் சில ஆயிரம் பேர் மாயமானதாக குற்றச்சாட்டுகள் பெருகி வருகின்றன. இலங்கையில் ’உச்சக்கட்ட போர்’ என்ற பெயரில் அப்பாவி தமிழ் பெண்களையும், குழந்தைகளையும் கொன்று குவித்து சர்வதேச போர் நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட ராஜபக்சே அரசு, முள்ளிவாய்க்கால் முகாம் என்ற அடையாளத்துடன் ஆயிரக்கணக்கான தமிழர் குடும்பங்களை ஆடு, மாடுகளை அடைத்து வைப்பது போல் குறுகிய முள்வேலிகளுக்கு இடையில் அடைத்து வைத்து மனித உரிமைகளை மீறிய வகையில் அவர்களை சொல்லொண்ணா துன்பத்துக்கும், துயரத்துக்கும் உள்ளாக்கியது.
இளைஞர்கள் கொன்று குவிப்பு:
இங்கு தங்கியிருந்த கன்னிப்பெண்களின் கற்பினை சூறையாடிய சிங்கள ராணுவ வீரர்கள், தமிழ் இளைஞர்கர் பலரை முகாமில் இருந்து வெளியேற்றினர். ராணுவத்தின் ரகசிய விசாரணை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்களில் சரிபாதி பேர் கொல்லப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மாயமாகி விட்டதாகவும் சில இலங்கை ஊடகங்களே கூட குற்றம் சாட்டுகின்றன. ’தங்களின் குலக்கொழுந்துகளை குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்’ என வயது முதிர்ந்த தமிழ்த் தாய்மார்கள் எழுப்பிய கூக்குரலுக்கும், வடித்த சோகக் கண்ணீருக்கும் ராஜபக்சே தலைமையிலான இலங்கை மசியவில்லை.
ராணுவத்திற்கு உத்தரவு;
இந்நிலையில், உச்சகட்ட போரின்போது சரணடைந்து காணாமல் போனவர்களின் நிலை என்னவானது? அவர்களை உடனடியாக ஆஜர்படுத்த வேண்டும் என முல்லைத்தீவு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின்மீது இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் எம்.எஸ்.எம். சம்சுதீன், உச்சகட்ட போரின்போது சரணடைந்தவர்களின் பட்டியலை வரும் 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு தாக்கல் செய்ய இலங்கை ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
இம்மனு மீதான முந்தைய விசாரணையின்போது, சரணடைந்த விடுதலைப் புலிகள் என்றொரு பெயர் பட்டியலை இலங்கை ராணுவம் அளித்திருந்தது. அந்தப் பட்டியலில் சீர்திருத்த முகாம்களில் பயிற்சி பெற்ற தமிழர்களின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தது. காணாமல் போனதாக குடும்பத்தினரால் தேடப்படும் நபர்களின் பெயர் விபரங்கள் அந்தப் பட்டியலில் இல்லாமல் போனதால், ஒட்டுமொத்தமாக இலங்கை ராணுவத்திடம் சரண் அடைந்தவர்களின் பட்டியலை கோர்ட் கேட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
English summary:
Colombo, Sri Lanka, the last peak in 2009 during the war with the LTTE to file a list of surrendered before the 30th Court of Sri Lanka mullai places army.
Sunday, 25 December 2016
கிறிஸ்துமஸை முன்னிட்டு தமிழக மீனவர்கள் விடுதலை: இலங்கை அமைச்சர்

ஏற்று, இலங்கை அரசு இந்த முடிவு எடுத்துள்ளது.
English summary:
Colombo: Sri Lanka to mark Christmas in prison, has decided to release 36 Indian fishermen, said the country's Minister Mahinda Mahavira. We had decided to release the fishermen and the boats had to be freed. Christmas festival of the Indian Government's request for the release of the fishermen, the Sri Lankan government has taken this decision.
Saturday, 24 December 2016
இளம் இந்தியா 'ஆசிய சாம்பியன்'
கொழும்பு: ஆசிய கோப்பை (19 வயது) தொடரில் இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பைனலில் இலங்கை அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இலங்கையில், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. கொழும்புவில் நடந்த பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி, 'பேட்டிங்' தேர்வு செய்தது.
ராணா அபாரம்:
இந்திய அணிக்கு பிரித்வி ஷா, ஹிமான்சு ராணா ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்த போது பிரித்வி ஷா (39) அவுட்டானார். அபாரமாக ஆடிய ராணா (71) அரைசதம் கடந்தார். கேப்டன் அபிஷேக் சர்மா (29), சல்மான் கான் (26) ஓரளவு கைகொடுத்தனர். பொறுப்பாக ஆடிய சுபம் கில் (70) அரைசதமடித்தார்.
பிரியம் கார்க் (5), ஹெட் படேல் (0) ஏமாற்றினர். கடைசி நேரத்தில் காம்லேஷ் (23) கைகொடுக்க, இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்தது.
அபிஷேக் அசத்தல்:
பின் சவாலான இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு விஷ்வா சதுரங்கா (13) ஏமாற்றினார். கேப்டன் அபிஷேக் சர்மா 'சுழலில்' ஹசிதா (37) சிக்கினார். அரைசதம் கடந்து ஆறுதல் தந்த கெல்லி (62), கேப்டன் கமிண்டு மெண்டிஸ் (53), அபிஷேக் பந்தில் அவுட்டாகினர். பண்டாரா (2) 'ரன்-அவுட்' ஆனார்.
ராகுல் சாகர் 'சுழலில்' கிருஷ்ணன் (14), டேனியல் (15), வீரசிங்கா (7) ஆட்டமிழந்தனர். ஜெயவிக்ரமா (6) 'ரன்-அவுட்டாக', இந்தியாவின் வெற்றி உறுதியானது.
இலங்கை அணி 48.4 ஓவரில் 239 ரன்களுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வி அடைந்தது. இந்தியா சார்பில் கேப்டன் அபிஷேக் 4, ராகுல் சாகர் 3 விக்கெட் கைப்பற்றினர்.
மூன்றாவது முறை:
இந்த வெற்றியின்மூலம் இந்திய அணி, தொடர்ந்து மூன்றாவது முறையாக (2012, 2014, 2016) ஆசிய கோப்பை வென்றது. கடந்த 2012ல் பாகிஸ்தானுடன் கோப்பையை பகிர்ந்து கொண்ட இந்தியா, 2014ல் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
English Summary:
Colombo: The Asian Cup (19 years old) of the Indian team for the third time in the series, won the title of champion. The Sri Lankan team was defeated by a margin of 34 runs in the final.
இலங்கையில், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. கொழும்புவில் நடந்த பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி, 'பேட்டிங்' தேர்வு செய்தது.
ராணா அபாரம்:
இந்திய அணிக்கு பிரித்வி ஷா, ஹிமான்சு ராணா ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்த போது பிரித்வி ஷா (39) அவுட்டானார். அபாரமாக ஆடிய ராணா (71) அரைசதம் கடந்தார். கேப்டன் அபிஷேக் சர்மா (29), சல்மான் கான் (26) ஓரளவு கைகொடுத்தனர். பொறுப்பாக ஆடிய சுபம் கில் (70) அரைசதமடித்தார்.
பிரியம் கார்க் (5), ஹெட் படேல் (0) ஏமாற்றினர். கடைசி நேரத்தில் காம்லேஷ் (23) கைகொடுக்க, இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்தது.
அபிஷேக் அசத்தல்:
பின் சவாலான இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு விஷ்வா சதுரங்கா (13) ஏமாற்றினார். கேப்டன் அபிஷேக் சர்மா 'சுழலில்' ஹசிதா (37) சிக்கினார். அரைசதம் கடந்து ஆறுதல் தந்த கெல்லி (62), கேப்டன் கமிண்டு மெண்டிஸ் (53), அபிஷேக் பந்தில் அவுட்டாகினர். பண்டாரா (2) 'ரன்-அவுட்' ஆனார்.
ராகுல் சாகர் 'சுழலில்' கிருஷ்ணன் (14), டேனியல் (15), வீரசிங்கா (7) ஆட்டமிழந்தனர். ஜெயவிக்ரமா (6) 'ரன்-அவுட்டாக', இந்தியாவின் வெற்றி உறுதியானது.
இலங்கை அணி 48.4 ஓவரில் 239 ரன்களுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வி அடைந்தது. இந்தியா சார்பில் கேப்டன் அபிஷேக் 4, ராகுல் சாகர் 3 விக்கெட் கைப்பற்றினர்.
மூன்றாவது முறை:
இந்த வெற்றியின்மூலம் இந்திய அணி, தொடர்ந்து மூன்றாவது முறையாக (2012, 2014, 2016) ஆசிய கோப்பை வென்றது. கடந்த 2012ல் பாகிஸ்தானுடன் கோப்பையை பகிர்ந்து கொண்ட இந்தியா, 2014ல் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
English Summary:
Colombo: The Asian Cup (19 years old) of the Indian team for the third time in the series, won the title of champion. The Sri Lankan team was defeated by a margin of 34 runs in the final.
Saturday, 3 December 2016
இலங்கை மீனவர்கள் 3 பேருக்கு காவல் நீட்டிப்பு

English Summary:
Colombo: Sri Lankan fishermen arrested three people in Rameswaram Dec., 16, extended custody until a judge ordered Ramanathapuram.