Friday, 24 March 2017
Friday, 10 March 2017
3 லோக்சபா, 12 சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகம் உட்பட, 10 மாநிலங்களில் காலியாகவுள்ள, லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை, தேர்தல் கமிஷன், நேற்று அறிவித்தது. அதன்படி, கேரளாவில், முஸ்லிம் லீக் தலைவர் அகமது, சமீபத்தில் மாரடைப்பால் காலமானதை தொடர்ந்து, காலியாகவுள்ள மலப்புரம் லோக்சபா தொகுதியில், ஏப்ரல், 12ல் இடைத்தேர்தல் நடக்கிறது.
ஜம்மு - காஷ்மீரில், மக்கள் ஜனநாயகபல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள, மூன்று லோக்சபா தொகுதிகளுக்கும், 12 சட்டசபை தொகுதிகளுக்கும், ஏப்ரலில் இடைத்தேர்தல் நடக்கிறது.
'புதிய சட்டம் தேவை' :
உத்தர பிரதேச உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில், இதுகுறித்து, தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி கூறியதாவது: தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடப்பதை உறுதி செய்யும் வகையில், சட்டத்திற்கு உட்பட்டு, தேர்தல் கமிஷன் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் தற்போதைய அரசியல் சூழலில், புதுப்புது பிரச்னைகள் உருவாகின்றன. அவற்றை சந்தித்து, உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டம் தேவை. அப்போதுதான், முழுமையான தேர்தல் சீர்திருத்தத்தை மேற்கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
Wednesday, 8 March 2017
ஓரிரு நாளில் ஆர்.கே., நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு?

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த டிச., 5ம் தேதி மறைந்ததையடுத்து சென்னை ஆர்.கே நகர் தொகுதி காலியானது. இது போல் இந்தியா முழுவதும் 12 சட்டமன்ற தொகுதிகளும், 3 பார்லிமெண்ட் தொகுதிகளும் காலியாக உள்ளன.
ஓரிரு நாளில்..
ஒரு தொகுதி காலியாகிவிட்டால் 6 மாத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும், அதன்படி ஆர்.கே., நகர் உள்ளிட்ட நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற மற்றும் பார்லிமெண்ட் தொகுதிகளுக்கு இடைதேர்தல் நடத்த தேர்தல்ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இதற்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என தெரிகிறது. மேலும் இடை தேர்தல்கள் ஏப்., மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும் எனவும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தல்:
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் வரும் ஜுலை மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கான தேர்தலில் இந்தியாவில் உள்ள 776 எம்.பி.,க்களும், 4,120 எம்.எல்.ஏ.,க்களும் ஓட்டு போட தகுதியுடையவராகிறார்கள், இதனால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்காக இடைதேர்தல் பணிகள் அவசர வேகத்தில் முடுக்கி விடப்பட்டுள்ளது.
English Summary:
Chennai: RK, the city is expected to be announced within days of the election for the seat. Before the presidential election to fill vacant jobs reported being made to accelerate.
உ.பி., மணிப்பூரில் இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு துவக்கம்

இறுதி கட்ட தேர்தல்:
உ.பி.,யில் ஏழு கட்டங்களாகவும், மணிப்பூரில் இரு கட்டங்களாகவும் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. உ.பி.,யில் முதல் ஆறு கட்ட தேர்தல்களும், மணிப்பூரில் முதல்கட்ட தேர்தலும் முடிவடைந்த நிலையில், இன்று(மார்ச் 8) இரு மாநிலத்திற்கும் இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. உ.பி.,யில் பிரதமர் மோடியின் வாரணாசி பார்லி., தொகுதி, மற்றும் காஜிப்பூர், ஜான்பூர் உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 22 தொகுதிகளுக்கும் இறுதிகட்ட ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது.
பலத்த பாதுகாப்பு:
உ.பி., இன்று தேர்தல் நடைபெற உள்ள 40 தொகுதிகளில் பல, மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் என்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் ஒரு லட்சம் போலீசார் மற்றும் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் ஒத்திவைப்பு:
இந்நிலையில் உ.பி., மாநிலம் ஆலாப்பூர் தொகுதி வேட்பாளர் ஒருவர் இறந்ததை தொடரந்து, அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, நாளை(மார்ச், 9) ஓட்டுப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிசல்ட்:
சட்டசபை தேர்தல் நடைபெற்ற உ.பி., மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களிலும் பதிவான ஓட்டுகள், வருகிற 11ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
English summary:
Varanasi, Uttar Pradesh, Manipur State Assembly for final election voting began at 7 am.
Monday, 6 March 2017
உ.பி. தேர்தல்: 3ல் 1 வேட்பாளர் மீது கிரிமினல் வழக்கு

ஆய்வு:
உ.பி., தேர்தலில் வேட்புமனு தாக்கலின் போது, வேட்பாளர்கள் அளித்த விவரங்களை கொண்டு, உத்தரப் பிரதேச தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் நடத்திய ஆய்வு முடிவில் தெரியவந்ததாவது:
கிரிமினல் வழக்கு:
உ.பி., சட்டசபைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த 4,853 பேரில், ஆய்வு செய்யப்பட்ட 4,823 வேட்பாளர்களில், 859 பேர்(18%) மீது கிரிமினல் வழக்கு உள்ளது. மேலும் 704 பேர் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது. இவர்களில் 62 பேர் மீது கொலை வழக்கும், 148 பேர் மீது கொலை முயற்சி வழக்கும், 38 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களும், அவர்களில் 10 பேர் மீது பாலியல் வன்முறை வழக்கும் பதிவாகி உள்ளது.
மொத்த வேட்பாளர்களில் 1,457 பேர்(30%) கோடீஸ்வர வேட்பாளர்களாகவும் உள்ளனர். இவ்வாறு அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
Saturday, 4 March 2017
ராகுல் தாய்லாந்துக்கு ஓட கூடாது; என்னுடன் கங்கைக்கு வரவேண்டும்: உமாபாரதி

இறுதிகட்ட பிரசாரம்:
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உ.த்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஆளும்கட்சியான சமாஜ்வாதி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பா.ஜ., தனித்து போட்டியிடுகிறது. இறுதிகட்ட பிரசாரத்தில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
ராகுல் குற்றசாட்டு:
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை காங்., துணைத் தலைர்வ ராகுல், பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ‛நான் உ.பி.,யின் மகன். கங்கை தாய் என்னை குஜராத்திலிருந்து இங்கு அழைத்தார் என பிரதமர் மோடி பேசி வருகிறார். அவர் உ.பி., மாநிலத்துக்கும் கங்கை நதிக்கும் எந்த உதவி செய்யவில்லை. கங்கையை துாய்மையாக்க அவர் நடவடிக்கை எடுக்க வில்லை' என்று குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், ராகுலின் குற்றசாட்டிற்கு மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.
உமாபாரதி பதிலடி:
இதுகுறித்து, உமாபாரதி கூறியதாவது:
ஐந்து மாநில தேர்தல் முடிவானது மார்ச் 11-ம் தேதி வெளியாகிறது. தேர்தல் முடிவுகள் வெளியானதும் ராகுல் தாய்லாந்துக்கு ஓட கூடாது. அவர் என்னுடன் கங்கை நதிக்கு வர வேண்டும். அப்போது, கங்கை நதியை துாய்மையாக்கும் பணிகள் துவங்கப்படாவிட்டால், நான் கங்கையில் குதிப்பேன். பணிகள் துவக்கப்பட்டால் ராகுல் கங்கையில் குதிக்க வேண்டும்.
கங்கை நதியை துாய்மையாக்கும் மத்திய அரசின் பணிகளுக்கு 6 ல் 5 மாநிலங்கள் தடையில்லா சான்று வழங்கின. ஆனால், ராகுல் கூட்டணி அமைத்துள்ள அகிலேசின் அரசு கங்கையை துாய்மையாக்க ஒப்புதல் வழங்கவில்லை.
இந்தியாவில் மகாத்மா காந்திக்கு பிறகு, மிகப்பெரிய துாய்மை விழிப்புணர்வை பிரதமர் மோடி ஏற்படுத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் பதிலடி கொடுத்தார்.
English Summary:
NEW DELHI: 'upi., While releasing the election results should not run for Rahul Thailand. Ganga come with me, "said the Central Water Resources Minister Uma Bharti.
Friday, 3 March 2017
உ.பி., தேர்தலில்160 கோடீஸ்வரர், 126 கிரிமினல்கள்

கோடீஸ்வர வேட்பாளர்கள் :
பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 35 பேரும், பா.ஜ.,வை சேர்ந்த 33 பேரும், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த 28 பேரும், காங்கிரசை சேர்ந்த 6 பேரும், ராஷ்டிரிய லோக்தள் கட்சியைச் சேர்ந்த 8 பேரும், சுயேட்சைகள் 23 பேரும் தங்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
கிரிமினல் பின்னணி கொண்ட 126 பேரில் 109 பேர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கிரிமினல் வேட்பாளர்கள் :
பா.ஜ.,வை சேர்ந்த 18 பேர் மீதும், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 24 பேர் மீதும், ராஷ்டிரிய லோக்தள் கட்சியைச் சேர்ந்த 5 பேர் மீதும், சமாஜ்வாதியை சேர்ந்த 15 பேர் மீதும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 4 பேர் மீதும், சுயேட்சைகள் 22 பேர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன.
மொத்தமுள்ள 635 வேட்பாளர்களில் 229 பேர் 5 முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்கள். 338 பேர் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 205 வேட்பாளர்கள் 51 முதல் 80 வயதுடையவர்கள் ஆகும்.
English summary:
Lucknow: Uttar Pradesh Assembly elections for the 6th stage tomorrow (March 03) will be held. 635 candidates contesting the 160 billionaires. 126 people accused in a criminal case.
Wednesday, 1 March 2017
ராகுல் தொகுதியில் மறக்கப்பட்ட கிராமம்: கோபத்தில் தேர்தலை புறக்கணித்த மக்கள்

வெறிச்சோடி...:
உ.பி.,யில் உள்ள அமேதி தொகுதி எம்.பி.,யாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் உள்ளார். இந்த தொகுதியில் பார்சவூலி கிராமம் உள்ளது. இங்கு 339 ஆண்கள், 310 பெண்கள் என மொத்தம் 649 ஓட்டுக்கள் உள்ளன. இந்த கிராம மக்கள், நேற்று(பிப்., 27) நடந்த தேர்தலை புறக்கணித்தனர். ஒருவர் கூட தங்களது ஓட்டை பதிவு செய்யவில்லை. இதனால் காலை முதல் மாலை வரை ஓட்டுச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது. தங்கள் கிராமத்திலிருந்து, அமேதி - துர்காப்பூர் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலை சரி செய்து தரப்படாததை கண்டித்து ஓட்டுப்போடவில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர்.
கோபம்:
ரயில்வே ஊழியர் ஒருவர் கூறுகையில், சஞ்சய் எம்.பி.,யாக இருந்த போது அமைக்கப்பட்ட சாலை தற்போது சேதமடைந்துள்ளது. இதனை சரி செய்ய யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.மற்றொரு முதியவர் கூறுகையில், இதனை நாங்கள் சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. எம்.பி.,க்கள் எம்.எல்.ஏ.,க்கள் வருகிறார்கள் செல்கிறார்கள் ஒன்றும் செய்யவில்லை. மக்களை பார்வையற்றவர்கள் என அவர்கள் நினைக்கின்றனரா என கோபமாககேட்டார். இந்த தொகுதியில் சரியாக பாசன வசதி இல்லை. நல்ல பள்ளி, கல்லூரிகள் இங்கு இல்லை. இங்கு கர்ப்பிணி பெண்கள், பிரசவத்தின் போது மரணமடைவதும் தொடர்கிறது. என, மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சமாளிப்பு:
இது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறுகையில், அமேதி தொகுதி வளர்ச்சியடையவில்லை எனக்கூற முடியாது. எந்த தொகுதியும் 100 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது என யாரும் கூற முடியாது. ஆனால், இதனை செய்ய நாங்கள் முயற்சி செய்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
Amethi: Congress Vice President Rahul's Amethi constituency on a rural road, which was not exactly boycotted the elections in protest.
Friday, 24 February 2017
உ.பி., 4-ம் கட்ட தேர்தல்: 61 சதவீதம் ஓட்டுப்பதிவு

61% ஓட்டுப்பதிவு:
உ.பி.,யில் சட்டசபை
தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று(23ம் தேதி) 12 மாவட்டங்களில் 4-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் மாலை 5 மணி நிலவரப்படி 61 சதவீதம் அளவிற்கு ஓட்டுப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 63 சதவீதம் வரையில் ஓட்டுப்பதிவு அதிகரிக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
7 கட்டங்களாக..
உ.பி.,யில் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், ஆட்சியை பிடிக்க பா.ஜ., சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் முட்டி மோதுகின்றன. அடுத்த கட்ட ஓட்டுப்பதிவுகள் பிப்.,27, மார்ச் 4 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. மார்ச் 11ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
20 ஆண்டு வரலாறு காணாத தோல்வி; மகாராஷ்ட்டிர தேர்தலில் காங்கிரசுக்கு அடி
மும்பை: மகாராஷ்ட்டிர மாநில உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு பலத்த அடி கிடைத்துள்ளது. 10 மாநகராட்சிகள் கொண்ட இம்மாநிலத்தில் ஒரு மாநகராட்சியை கூட பிடிக்க முடியாத அதல பாதாளத்திற்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பா.ஜ.,வும், சிவசேனாவும், கடந்த கால வெற்றியை விட கூடுதல் இடங்களை பிடித்துள்ளது. மேலும் முக்கிய கட்சிகளான சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், ராஜ்தாக்ரேயின் நவநிர்மாண் சேனாவும் சில சொற்ப இடங்களையே பெற்றுள்ளது. அனைத்து கட்சிகளும் பெரும் கூட்டணி எதுவும் அமைக்காமல் தேர்தலை சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தம் 227 வார்டுகளில் சிவ சேனாவும் , பா.ஜ., வும் வெற்றிகளை குவித்து வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் வெறும் 20 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. நாசிக்கில் மொத்தம் உள்ள 151 வார்டுகளில் காங்கிரஸ் 2 இடங்களை மட்டுமே பிடிக்கிறது. புனே, தானேயில் காங்கிரஸ் ஒரு வார்டாவது பிடிக்குமா என்ற நிலையே நிலவுகிறது.
பொய்யாகிப்போனது:
மோடியின் சமீபத்திய 500 1000 ரூபாய் நோட்டுகள் அழிப்பு, புதிய ரூபாய் அறிமுகம் பா.ஜ.,வுக்கு மக்கள் ஓட்டளிக்க மாட்டார்கள் என்ற காங்கிரஸ் பிரசாரம் பொய்யாகிப்போனதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். அதே மகாராஷ்ட்டிராவில் பல முறை ஆட்சியை பிடித்த காங்கிரஸ் இது வரை கடந்த 20 ஆண்டுகால வரலாற்றில் பெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது. இது காங்கிரஸ் தன் நிலையை சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்கின்றன மீடியாக்கள்.
அதே நேரத்தில் பா.ஜ.,வும், சிவசேனாவும், கடந்த கால வெற்றியை விட கூடுதல் இடங்களை பிடித்துள்ளது. மேலும் முக்கிய கட்சிகளான சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், ராஜ்தாக்ரேயின் நவநிர்மாண் சேனாவும் சில சொற்ப இடங்களையே பெற்றுள்ளது. அனைத்து கட்சிகளும் பெரும் கூட்டணி எதுவும் அமைக்காமல் தேர்தலை சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தம் 227 வார்டுகளில் சிவ சேனாவும் , பா.ஜ., வும் வெற்றிகளை குவித்து வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் வெறும் 20 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. நாசிக்கில் மொத்தம் உள்ள 151 வார்டுகளில் காங்கிரஸ் 2 இடங்களை மட்டுமே பிடிக்கிறது. புனே, தானேயில் காங்கிரஸ் ஒரு வார்டாவது பிடிக்குமா என்ற நிலையே நிலவுகிறது.
பொய்யாகிப்போனது:
மோடியின் சமீபத்திய 500 1000 ரூபாய் நோட்டுகள் அழிப்பு, புதிய ரூபாய் அறிமுகம் பா.ஜ.,வுக்கு மக்கள் ஓட்டளிக்க மாட்டார்கள் என்ற காங்கிரஸ் பிரசாரம் பொய்யாகிப்போனதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். அதே மகாராஷ்ட்டிராவில் பல முறை ஆட்சியை பிடித்த காங்கிரஸ் இது வரை கடந்த 20 ஆண்டுகால வரலாற்றில் பெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது. இது காங்கிரஸ் தன் நிலையை சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்கின்றன மீடியாக்கள்.
மும்பை மாநகராட்சியில் சிவசேனா முன்னிலை

இந்த தேர்தலில் சிவசேனா, பா.ஜ., காங்கிரஸ் தனித்தனியாக போட்டியிட்டன. மும்பையில் மேயர் பதவிக்கு 114 பேர் வெற்றி பெற வேண்டும். பா.ஜ.க., 7 மாநகராட்சிகளையும், சிவசேனா 3 மாநகராட்சிகளையும் கைப்பற்றின. காங்கிரஸ் ஒரு மாநகராட்சியை கூட கைப்பற்றவில்லை.
மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை
மும்பை: மும்பை மாநகராட்சி உள்ளிட்ட மகாராஷ்டிரா மாநில உள்ளாட்சி தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை, இன்று காலை துவங்கியது. அனைவரும் மும்பை மாநகராட்சி முடிவுகளை எதிர்பார்த்து உள்ளனர்.
மகாராஷ்டிராவில் பாஜ., சிவசேனா கூட்டணி கட்சிகளாக உள்ளன. இருப்பினும், உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டன.மும்பை உள்ளிட்ட, 10 மாநகராட்சிகள், 25 ஜில்லா பரிஷத், 283 பஞ்சாயத்து சமிதிகளுக்கு கடந்த செவ்வாய்கிழமை ஓட்டுப்பதிவு நடந்தது. சராசரியாக, 56 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. மும்பை மாநகராட்சியில், 227 வார்டுகள் உள்ளன. மொத்தம், 5,777 இடங்களுக்கு 21 ஆயிரத்து 620 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மும்பையில், 2,275 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
சிவசேனா கட்சி அமோகம் :
தற்போதைய நிலவரப்படி சிவசேனா, பா.ஜ., கட்சியினர் அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். காங்கிரஸ் 3 வது இடத்திலும், தேசியவாத காங்கிரஸ் 4 வது இடத்திலும், நவநிர்மாண் கட்சி 5 வது இடத்திலும் இருந்து வருகிறது. மும்பை மாநகராட்சியை சிவசேனா கைப்பற்றும் என தெரிகிறது.
மகாராஷ்டிராவில் பாஜ., சிவசேனா கூட்டணி கட்சிகளாக உள்ளன. இருப்பினும், உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டன.மும்பை உள்ளிட்ட, 10 மாநகராட்சிகள், 25 ஜில்லா பரிஷத், 283 பஞ்சாயத்து சமிதிகளுக்கு கடந்த செவ்வாய்கிழமை ஓட்டுப்பதிவு நடந்தது. சராசரியாக, 56 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. மும்பை மாநகராட்சியில், 227 வார்டுகள் உள்ளன. மொத்தம், 5,777 இடங்களுக்கு 21 ஆயிரத்து 620 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மும்பையில், 2,275 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
சிவசேனா கட்சி அமோகம் :
தற்போதைய நிலவரப்படி சிவசேனா, பா.ஜ., கட்சியினர் அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். காங்கிரஸ் 3 வது இடத்திலும், தேசியவாத காங்கிரஸ் 4 வது இடத்திலும், நவநிர்மாண் கட்சி 5 வது இடத்திலும் இருந்து வருகிறது. மும்பை மாநகராட்சியை சிவசேனா கைப்பற்றும் என தெரிகிறது.
Tuesday, 21 February 2017
மே 15க்குள் உள்ளாட்சி தேர்தல் ?

தேர்தல் அறிவிப்பு முறைப்படி இல்லை:
தமிழகத்தில், 2016 அக்டோபரில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.'உள்ளாட்சி அமைப்புகளில், பழங்குடியினருக்கான ஒதுக்கீடு முறையாக இல்லை' என, உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த, உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், 'பழங்குடியினருக்கான ஒதுக்கீடு செல்லும்; ஆனால், தேர்தல் அறிவிப்பு, முறைப்படி இல்லை என்பதால், அதை ரத்து செய்கிறேன்; டிசம்பருக்குள், புதிய அறிவிப்பு வெளியிட்டு, தேர்தல் நடத்த வேண்டும்' என உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கு நீதிபதிகள் நூட்டி ராமமோகன ராவ், எஸ்.எம்.சுப்ரமணியம் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.அப்போது, உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை தெரிவிக்கும்படி, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டிருந்தது.இதையடுத்து, கடந்த மாத இறுதியில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் திட்டவட்டம்:
மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குமார், அவகாசம் கோரினார். பாரதி சார்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜரானார். விசாரணையை, பிப்., 10க்கு(இன்று), டிவிஷன் பெஞ்ச் தள்ளிவைத்தது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, மே மாதம், 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ‛உத்தேச தேதியை கூறாமல், சரியான தேதியை தெரிவிக்க வேண்டும்' என, நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
Monday, 20 February 2017
பழனிச்சாமிக்கு ஓட்டளித்தது ஏன்? யதார்த்தத்தை சொன்னார் எம்.எல்.ஏ.,
மிகுந்த பரபரப்புக்கு இடையில், தமிழக சட்டசபையில், முதல்வர் பழனிச்சாமி, தனது பெரும்பான்மை பலத்தை நிரூபித்திருப்பதாக, சட்டசபை சபாநாயகர் அறிவித்திருக்கிறார்.
இதில், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 பேர் ஓட்டளித்துள்ளதாகவும்; எதிர்ப்பாக 11 பேர் ஓட்டளித்துள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்திருக்கிறார். சபையில் இருந்தவர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது, இந்த எண்ணிக்கையில் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், பழனிச்சாமிக்கு ஓட்டளித்தவர்களாக காட்டப்படும் எம்.எல்.ஏ.,க்களில் பாதிக்கும் அதிகமானோர், மனது மயக்கப்பட்ட நிலையில் சபைக்கு வந்து ஓட்டளித்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, பழனிச்சாமிக்கு ஆதரவாக ஓட்டளித்த எம்.எல்.ஏ., ஒருவரிடம் கேட்டபோது, அவர் யதார்த்தத்தைக் கூறியதாவது:
எல்லோரும் எங்கள் நிலை புரியாமல் எங்களை தாறுமாறாக விமர்சிக்கின்றனர். எங்கள் மனநிலையில் அல்லது, எங்களுக்கு அமைந்த சூழ்நிலையில் யார் இருந்திருந்தாலும் அப்படித்தான் செய்திருப்பர். ஜெயலலிதா மறைந்ததும், பன்னீர்செல்வம் முதல்வராக நியமிக்கப்பட்டதற்காக சந்தோஷப்பட்டது என் போன்ற எம்.எல்.ஏ.,க்கள்தான். இதற்காகவே, அவர் இல்லம் சென்று, அவருக்கு எங்களுடைய தனிப்பட்ட வாழ்த்துக்களையும்; பாராட்டுதல்களையும் சொல்லி வந்தோம். என்றைக்கும் உங்கள் பின்னால், பக்கபலமாக இருந்து செயல்படுவோம் என்றும் கூறி வந்தோம்.
அதற்கு தகுந்தார் போல, அவரும், ஒரு முதல்வராக மிகச் சிறப்பாக செயல்பட்டார். சில விஷயங்களில், மறைந்த ஜெயலலிதாவை விட சிறப்பாகவும்; சாதுர்யமாகவும் செயல்பட்டார். மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்காமல், தமிழக நலன் களுக்கு ஏற்ற வகையில் அவர் செயல்பட்டது ரொம்பவே பிடித்திருந்தது. பொதுமக்களாலும் பாராட்டப்பட்டது.
ஆனால், என்னதான் சசிகலா தரப்பு நெருக்கடி என்றாலும், அவர், தனது முதல்வர் பதவியை பொசுக்கென்று ராஜினாமா செய்தது எங்களுக்கெல்லாம் பிடிக்கவில்லை. அதுமட்டுமல்ல, மிரட்டி ராஜினாமா எழுதி வாங்கி இருந்தால், போயஸ் தோட்டத்தில் இருந்து வெளிவந்த மறு நொடியே, அவர் கவர்னரை நேரில் சென்று சந்தித்து, என்னுடைய முழு சம்மதத்தோடு, ராஜினாமா கடிதம் அளிக்கப்படவில்லை; மிரட்டி எழுதி வாங்கி, கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது என்று சொல்லியிருக்க வேண்டும்.
பத்திரிகையாளர்களையும் அழைத்து நடந்ததையெல்லாம் விவரித்திருக்க வேண்டும். இப்படி எதையும் செய்யாத பன்னீர்செல்வம், போயஸ் தோட்டத்தில், ராஜினாமா கடிதத்தை எழுதிக் கொடுத்த கையோடு, தலைமைக் கழகத்துக்கு வந்து, சட்டசபை கட்சித் தலைவராக சின்னம்மாவை முன்மொழிகிறேன் என்று சொல்லி, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரின் ஆதரவையும் கோரியபோது, எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சி.
இந்த சூழ்நிலையில் நாங்கள் என்ன செய்ய முடியும்? பன்னீர்செல்வமே, விருப்பப்பட்டுத்தான், சசிகலாவுக்கு தன் பதவியை விட்டுக் கொடுத்துவிட்டார் என நாங்கள் இருந்து விட்டோம். ஆனால், அடுத்த இரண்டு நாட்கள் கழித்து, சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று, அங்கு தியானம் செய்த பின்னால், பத்திரிகையாளர்களிடம், நடந்ததையெல்லாம் சொல்கிறார்.
அதற்கு, தமிழக மக்கள் மத்தியில் பன்னீர்செல்வம் மீது ஒருவித பரிதாபம் ஏற்பட்டதே தவிர, கவர்னர் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டது ஏற்றுக் கொண்டதுதானே. ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல; அடுத்த முதல்வர் பதவி ஏற்கும் வரை, காபந்து முதல்வராகவும் செயல்பட கேட்டுக் கொண்டு விட்டார்.
இந்த சூழ்நிலையில் கவர்னராலோ, ஊர் உலகமெல்லாம் பேசும் பன்னீருக்கு ஆதரவான மத்திய அரசாலோ என்ன செய்து விட முடியும். பன்னீர்செல்வம் தனக்கு ஆதரவாக கூடுதல் எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.,க்களை திரட்டி வந்து, ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என நிலைத்து, காலம் கடத்தினார் கவர்னர் வித்யாசாகர் ராவ். ஆனால், 10 எம்.எல்.ஏ.,க்களை தன் பக்கம் திருப்ப முடிந்ததே தவிர, பன்னீர்செல்வத்தால், சசிகலா தரப்பு எம்.எல்.ஏ.,க்களை தன் பக்கம் திருப்பும் முயற்சியில், சிறு துரும்பையும் அசைக்க முடியவில்லை.
ஆனால், பன்னீர்செல்வம், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை தங்கள் பக்கம் திருப்பும் முயற்சியில் தீவிரமாக இருக்கின்றனர் என்றதும், சசிகலா தரப்பினர் எவ்வளவு வேகமாக செயல்பட்டனர் என்பதெல்லாம் எங்களுக்குத்தான் தெரியும்.
கிட்டத்தட்ட 127 எம்.எல்.ஏ.,க்களை குண்டுகட்டாக, கூவத்தூர் ரிசார்ட்டுக்குக் கொண்டு சென்றனர். அங்கு எங்களை பதினோரு நாட்கள் தங்க வைத்தனர். அங்கு, எங்களுக்கு எல்லாமே கிடைத்தது. அதெல்லாம், விவரமாக பட்டியல் போட முடியாது; வெளியிலும் சொல்ல முடியாது. துவக்கத்தில் எங்களுடைய சுதந்திரம் பறிபோவதாகத்தான் நினைத்தோம்.
ஆனால், நாட்கள் நகர நகர அவர்கள் தரப்பில் இருந்து வந்த செங்கோட்டையன், தினகரன், திவாகரன், பழனிச்சாமி, ஜெயக்குமார், செல்லூர் ராஜு என மூத்த தலைவர்களெல்லாம் கொடுத்த தகவல்களும்; அளித்த உறுதி மொழிகளும், அது நிறைவேற்றப்படும் வேகமும் எங்களை முழுமையாக அவர்கள் பக்கம் திருப்பியது.
முக்கியமாக அவர்கள் சொன்ன ஒரு விஷயம் எங்களையெல்லாம் ரொம்பவும் யோசிக்க வைத்தது. பழனிச்சாமிக்கு கிட்டதட்ட 125 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது என்பது நிஜம் என்று சொல்லி, அங்கு கூடியிருந்த ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்களின் பெயரையும் வாசித்து, அதை நிஜம் என நம்ப வைத்தனர்.
இப்படி ஒருபக்கம் 125 எம்.எல்.ஏ.,க்கள் உறுதியாக இருக்கும்போது, அவர்களை விடுத்து வேறு யாரால் ஆட்சி அமைக்க முடியும்? வேறு யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்கிற போது, ஜனாதிபதி ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வந்து, சில மாதங்களிலேயே தேர்தலை கொண்டு வருவதில் எங்களுக்கு என்ன பிரயோஜனம்?
ஆக, இந்த இக்கட்டைப் பயன்படுத்தி, எங்கள் தரப்பிலிருந்தும் பணம், தங்கம், வாகனம், அமைச்சர் பொறுப்பு உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதில், சிலவற்றை யாராலும், செய்து கொடுக்க முடியாது என்பது எங்களுக்கும் தெரியும். அதனால், சில விஷயங்களில் நாங்களும் கெடுபிடி காட்டவில்லை.
இப்படிப்பட்ட சூழலில்தான், பொதுமக்களில் பலரும் எங்களுக்கு போன் செய்து, அவர்கள் விருப்பத்தைக் கூறினர். மனசாட்சிப் படி, சட்டசபையில் ஓட்டளிக்கவில்லை என்றால், ஊர் பக்கம் வர முடியாது என, அன்போடு மிரட்டல் விடுத்தனர். அது பொதுமக்களின் எதிர்பார்ப்புதான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், இந்த ஆட்சி கவிழ்ந்தால், இன்னோரு தேர்தலை சந்திப்பது, எங்களைப் போன்ற எம்.எல்.ஏ.,க்களுக்குத்தான் நெருக்கடி என்பது, அவர்களுக்கு தெரியாது; அது பற்றிய அக்கறையும் அவர்களுக்கு தேவையில்லை.
எட்டு மாதங்களுக்கு முன், கிட்டதட்ட ஐந்து கோடிக்கும் மேல் செலவு செய்து எம்.எல்.ஏ., ஆன என்னைப் போன்றவர்கள், இன்னும் விதைத்த பணத்தை எடுக்கவே இல்லை. அதற்குள் இன்னொரு தேர்தல் என்றால், பணத்துக்கு எங்கே செல்வது? யார் கொடுப்பர்? இந்த இடத்தில் இன்னொரு கேள்வி கேட்கப்படும்…
இத்தனையையும் மீறி, ஐந்து வருடம் சென்று, நீங்கள் தொகுதிக்குச் சென்று, தேர்தலில் போட்டியிட்டால், மக்கள் ஓட்டளிப்பரா என்று. அதெல்லாம், இன்னும் நான்கு ஆண்டுகளுக்குப் பின் தானே… அதற்குள் இன்னும் என்னவெல்லாம் அரசியல் ரீதியில் நடக்குமோ. நான் கு ஆண்டுகளுக்குப் பின் நடக்கப் போவதை, இப்போது கணிக்கவும் முடியாது. அதற்காக, இப்போதிலிருந்தே கவலைப்படவும் முடியாது.
எப்படியோ, ஓ.பன்னீர்செல்வம் புண்ணியத்தில், பழனிச்சாமி ஆதரவு நிலைப்பாடு எடுத்த எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறோம். அந்த வகையில், பன்னீருக்காக உதவி செய்ய முடியவில்லை என்றாலும், அவருக்கு கட்டாயம் நன்றி சொல்லவே கடமைபட்டிருக்கிறோம்.
எதற்கெடுத்தாலும், பொதுமக்கள் எதிர்ப்பு இருக்கிறது என்று சொல்கிறவர்களுக்கு, ஒரே ஒரு கேள்வியையும் இந்த நேரத்தில் கேட்க ஆசைப்படுகிறேன். இப்படியெல்லாம், கேள்வி கேட்க முற்படும் பொதுமக்கள், ஒவ்வொரு தேர்தலின்போதும், கூடுதலாக யார் பணம் கொடுப்பார் என எதிர்பார்த்து, ஏங்கி, அது கிடைத்ததும் தானே ஓட்டு போடுகின்றனர். அவர்கள் தரப்பில் இருந்து, நாங்கள் செய்வதை நியாயமா… தர்மமா என்று எப்படி கேட்க முடியும்.
இவ்வாறு நடந்த நிகழ்வுகள் குறித்து கூறினார்.
இதில், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 பேர் ஓட்டளித்துள்ளதாகவும்; எதிர்ப்பாக 11 பேர் ஓட்டளித்துள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்திருக்கிறார். சபையில் இருந்தவர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது, இந்த எண்ணிக்கையில் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், பழனிச்சாமிக்கு ஓட்டளித்தவர்களாக காட்டப்படும் எம்.எல்.ஏ.,க்களில் பாதிக்கும் அதிகமானோர், மனது மயக்கப்பட்ட நிலையில் சபைக்கு வந்து ஓட்டளித்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, பழனிச்சாமிக்கு ஆதரவாக ஓட்டளித்த எம்.எல்.ஏ., ஒருவரிடம் கேட்டபோது, அவர் யதார்த்தத்தைக் கூறியதாவது:
எல்லோரும் எங்கள் நிலை புரியாமல் எங்களை தாறுமாறாக விமர்சிக்கின்றனர். எங்கள் மனநிலையில் அல்லது, எங்களுக்கு அமைந்த சூழ்நிலையில் யார் இருந்திருந்தாலும் அப்படித்தான் செய்திருப்பர். ஜெயலலிதா மறைந்ததும், பன்னீர்செல்வம் முதல்வராக நியமிக்கப்பட்டதற்காக சந்தோஷப்பட்டது என் போன்ற எம்.எல்.ஏ.,க்கள்தான். இதற்காகவே, அவர் இல்லம் சென்று, அவருக்கு எங்களுடைய தனிப்பட்ட வாழ்த்துக்களையும்; பாராட்டுதல்களையும் சொல்லி வந்தோம். என்றைக்கும் உங்கள் பின்னால், பக்கபலமாக இருந்து செயல்படுவோம் என்றும் கூறி வந்தோம்.
அதற்கு தகுந்தார் போல, அவரும், ஒரு முதல்வராக மிகச் சிறப்பாக செயல்பட்டார். சில விஷயங்களில், மறைந்த ஜெயலலிதாவை விட சிறப்பாகவும்; சாதுர்யமாகவும் செயல்பட்டார். மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்காமல், தமிழக நலன் களுக்கு ஏற்ற வகையில் அவர் செயல்பட்டது ரொம்பவே பிடித்திருந்தது. பொதுமக்களாலும் பாராட்டப்பட்டது.
ஆனால், என்னதான் சசிகலா தரப்பு நெருக்கடி என்றாலும், அவர், தனது முதல்வர் பதவியை பொசுக்கென்று ராஜினாமா செய்தது எங்களுக்கெல்லாம் பிடிக்கவில்லை. அதுமட்டுமல்ல, மிரட்டி ராஜினாமா எழுதி வாங்கி இருந்தால், போயஸ் தோட்டத்தில் இருந்து வெளிவந்த மறு நொடியே, அவர் கவர்னரை நேரில் சென்று சந்தித்து, என்னுடைய முழு சம்மதத்தோடு, ராஜினாமா கடிதம் அளிக்கப்படவில்லை; மிரட்டி எழுதி வாங்கி, கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது என்று சொல்லியிருக்க வேண்டும்.
பத்திரிகையாளர்களையும் அழைத்து நடந்ததையெல்லாம் விவரித்திருக்க வேண்டும். இப்படி எதையும் செய்யாத பன்னீர்செல்வம், போயஸ் தோட்டத்தில், ராஜினாமா கடிதத்தை எழுதிக் கொடுத்த கையோடு, தலைமைக் கழகத்துக்கு வந்து, சட்டசபை கட்சித் தலைவராக சின்னம்மாவை முன்மொழிகிறேன் என்று சொல்லி, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரின் ஆதரவையும் கோரியபோது, எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சி.
இந்த சூழ்நிலையில் நாங்கள் என்ன செய்ய முடியும்? பன்னீர்செல்வமே, விருப்பப்பட்டுத்தான், சசிகலாவுக்கு தன் பதவியை விட்டுக் கொடுத்துவிட்டார் என நாங்கள் இருந்து விட்டோம். ஆனால், அடுத்த இரண்டு நாட்கள் கழித்து, சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று, அங்கு தியானம் செய்த பின்னால், பத்திரிகையாளர்களிடம், நடந்ததையெல்லாம் சொல்கிறார்.
அதற்கு, தமிழக மக்கள் மத்தியில் பன்னீர்செல்வம் மீது ஒருவித பரிதாபம் ஏற்பட்டதே தவிர, கவர்னர் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டது ஏற்றுக் கொண்டதுதானே. ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல; அடுத்த முதல்வர் பதவி ஏற்கும் வரை, காபந்து முதல்வராகவும் செயல்பட கேட்டுக் கொண்டு விட்டார்.
இந்த சூழ்நிலையில் கவர்னராலோ, ஊர் உலகமெல்லாம் பேசும் பன்னீருக்கு ஆதரவான மத்திய அரசாலோ என்ன செய்து விட முடியும். பன்னீர்செல்வம் தனக்கு ஆதரவாக கூடுதல் எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.,க்களை திரட்டி வந்து, ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என நிலைத்து, காலம் கடத்தினார் கவர்னர் வித்யாசாகர் ராவ். ஆனால், 10 எம்.எல்.ஏ.,க்களை தன் பக்கம் திருப்ப முடிந்ததே தவிர, பன்னீர்செல்வத்தால், சசிகலா தரப்பு எம்.எல்.ஏ.,க்களை தன் பக்கம் திருப்பும் முயற்சியில், சிறு துரும்பையும் அசைக்க முடியவில்லை.
ஆனால், பன்னீர்செல்வம், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை தங்கள் பக்கம் திருப்பும் முயற்சியில் தீவிரமாக இருக்கின்றனர் என்றதும், சசிகலா தரப்பினர் எவ்வளவு வேகமாக செயல்பட்டனர் என்பதெல்லாம் எங்களுக்குத்தான் தெரியும்.
கிட்டத்தட்ட 127 எம்.எல்.ஏ.,க்களை குண்டுகட்டாக, கூவத்தூர் ரிசார்ட்டுக்குக் கொண்டு சென்றனர். அங்கு எங்களை பதினோரு நாட்கள் தங்க வைத்தனர். அங்கு, எங்களுக்கு எல்லாமே கிடைத்தது. அதெல்லாம், விவரமாக பட்டியல் போட முடியாது; வெளியிலும் சொல்ல முடியாது. துவக்கத்தில் எங்களுடைய சுதந்திரம் பறிபோவதாகத்தான் நினைத்தோம்.
ஆனால், நாட்கள் நகர நகர அவர்கள் தரப்பில் இருந்து வந்த செங்கோட்டையன், தினகரன், திவாகரன், பழனிச்சாமி, ஜெயக்குமார், செல்லூர் ராஜு என மூத்த தலைவர்களெல்லாம் கொடுத்த தகவல்களும்; அளித்த உறுதி மொழிகளும், அது நிறைவேற்றப்படும் வேகமும் எங்களை முழுமையாக அவர்கள் பக்கம் திருப்பியது.
முக்கியமாக அவர்கள் சொன்ன ஒரு விஷயம் எங்களையெல்லாம் ரொம்பவும் யோசிக்க வைத்தது. பழனிச்சாமிக்கு கிட்டதட்ட 125 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது என்பது நிஜம் என்று சொல்லி, அங்கு கூடியிருந்த ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்களின் பெயரையும் வாசித்து, அதை நிஜம் என நம்ப வைத்தனர்.
இப்படி ஒருபக்கம் 125 எம்.எல்.ஏ.,க்கள் உறுதியாக இருக்கும்போது, அவர்களை விடுத்து வேறு யாரால் ஆட்சி அமைக்க முடியும்? வேறு யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்கிற போது, ஜனாதிபதி ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வந்து, சில மாதங்களிலேயே தேர்தலை கொண்டு வருவதில் எங்களுக்கு என்ன பிரயோஜனம்?
ஆக, இந்த இக்கட்டைப் பயன்படுத்தி, எங்கள் தரப்பிலிருந்தும் பணம், தங்கம், வாகனம், அமைச்சர் பொறுப்பு உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதில், சிலவற்றை யாராலும், செய்து கொடுக்க முடியாது என்பது எங்களுக்கும் தெரியும். அதனால், சில விஷயங்களில் நாங்களும் கெடுபிடி காட்டவில்லை.
இப்படிப்பட்ட சூழலில்தான், பொதுமக்களில் பலரும் எங்களுக்கு போன் செய்து, அவர்கள் விருப்பத்தைக் கூறினர். மனசாட்சிப் படி, சட்டசபையில் ஓட்டளிக்கவில்லை என்றால், ஊர் பக்கம் வர முடியாது என, அன்போடு மிரட்டல் விடுத்தனர். அது பொதுமக்களின் எதிர்பார்ப்புதான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், இந்த ஆட்சி கவிழ்ந்தால், இன்னோரு தேர்தலை சந்திப்பது, எங்களைப் போன்ற எம்.எல்.ஏ.,க்களுக்குத்தான் நெருக்கடி என்பது, அவர்களுக்கு தெரியாது; அது பற்றிய அக்கறையும் அவர்களுக்கு தேவையில்லை.
எட்டு மாதங்களுக்கு முன், கிட்டதட்ட ஐந்து கோடிக்கும் மேல் செலவு செய்து எம்.எல்.ஏ., ஆன என்னைப் போன்றவர்கள், இன்னும் விதைத்த பணத்தை எடுக்கவே இல்லை. அதற்குள் இன்னொரு தேர்தல் என்றால், பணத்துக்கு எங்கே செல்வது? யார் கொடுப்பர்? இந்த இடத்தில் இன்னொரு கேள்வி கேட்கப்படும்…
இத்தனையையும் மீறி, ஐந்து வருடம் சென்று, நீங்கள் தொகுதிக்குச் சென்று, தேர்தலில் போட்டியிட்டால், மக்கள் ஓட்டளிப்பரா என்று. அதெல்லாம், இன்னும் நான்கு ஆண்டுகளுக்குப் பின் தானே… அதற்குள் இன்னும் என்னவெல்லாம் அரசியல் ரீதியில் நடக்குமோ. நான் கு ஆண்டுகளுக்குப் பின் நடக்கப் போவதை, இப்போது கணிக்கவும் முடியாது. அதற்காக, இப்போதிலிருந்தே கவலைப்படவும் முடியாது.
எப்படியோ, ஓ.பன்னீர்செல்வம் புண்ணியத்தில், பழனிச்சாமி ஆதரவு நிலைப்பாடு எடுத்த எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறோம். அந்த வகையில், பன்னீருக்காக உதவி செய்ய முடியவில்லை என்றாலும், அவருக்கு கட்டாயம் நன்றி சொல்லவே கடமைபட்டிருக்கிறோம்.
எதற்கெடுத்தாலும், பொதுமக்கள் எதிர்ப்பு இருக்கிறது என்று சொல்கிறவர்களுக்கு, ஒரே ஒரு கேள்வியையும் இந்த நேரத்தில் கேட்க ஆசைப்படுகிறேன். இப்படியெல்லாம், கேள்வி கேட்க முற்படும் பொதுமக்கள், ஒவ்வொரு தேர்தலின்போதும், கூடுதலாக யார் பணம் கொடுப்பார் என எதிர்பார்த்து, ஏங்கி, அது கிடைத்ததும் தானே ஓட்டு போடுகின்றனர். அவர்கள் தரப்பில் இருந்து, நாங்கள் செய்வதை நியாயமா… தர்மமா என்று எப்படி கேட்க முடியும்.
இவ்வாறு நடந்த நிகழ்வுகள் குறித்து கூறினார்.
உ.பி., 3-ம் கட்ட தேர்தல்: 61 சதவீத ஓட்டுப்பதிவு
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று(பிப்.,19) நடந்த 3வது கட்ட சட்டசபை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 61.16 சதவீத ஓட்டுப்பதிவு பதிவானது.

உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில், கடந்த பிப்., 11, 15-ம் தேதிகளில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் நடந்தது. மொத்தம் 140 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
61 சதவீத ஓட்டுப்பதிவு:
இந்நிலையில், 11 மாவட்டங்களில் 69 தொகுதிகளுக்கான 3வது கட்ட தேர்தல் இன்று (பிப்.,19) நடந்தது. இதில், 826 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாலை 5 மணி நிலவரப்படி 61.16 சதவீதம் ஓட்டுப்பதிவானதாக உ.பி., மாநில தலைமை தேர்தல் அதிகாரி வெங்கடேஷன் தெரிவித்தார். அமைதி முடிந்த தேர்தல், இறுதி நிலவரப்படி 63 சதவீதமாக உயரும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரவித்தார்.

உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில், கடந்த பிப்., 11, 15-ம் தேதிகளில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் நடந்தது. மொத்தம் 140 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
61 சதவீத ஓட்டுப்பதிவு:
இந்நிலையில், 11 மாவட்டங்களில் 69 தொகுதிகளுக்கான 3வது கட்ட தேர்தல் இன்று (பிப்.,19) நடந்தது. இதில், 826 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாலை 5 மணி நிலவரப்படி 61.16 சதவீதம் ஓட்டுப்பதிவானதாக உ.பி., மாநில தலைமை தேர்தல் அதிகாரி வெங்கடேஷன் தெரிவித்தார். அமைதி முடிந்த தேர்தல், இறுதி நிலவரப்படி 63 சதவீதமாக உயரும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரவித்தார்.
Friday, 17 February 2017
தேர்தலை விரும்பும் மக்கள்: ஆனந்த்ராஜ்

இது தொடர்பாக சென்னையில்அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என முன்னர் நான் கூறியதற்கு தற்போது அனைவரிடமும் ஆதரவு கிடைத்து வருகிறது. எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளிக்கும் முன்னர் முதலில் மனசாட்சியிடம் கருத்து கேட்க வேண்டும். அடுத்து உறவினர்களிடமும் பின்னர் தொகுதி மக்களிடமும் கருத்து கேட்க வேண்டும். ஜெயலலிதா தான் வேட்பாளர் என்ற கருதிஓட்டு போடுங்கள் என நான் கூறினேன். நாளை நீங்கள் அளிக்க போகும் வாக்கும் மக்களின் நம்பிக்கை பெற்றதாக இருக்க வேண்டும். நாளைக்கு நீங்கள் ஓட்டு போட்டு தொகுதிக்கு தான் செல்ல வேண்டுமே தவிர கூவத்தூர் செல்ல முடியாது. எம்.எல்.ஏ.,க்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும். ஒரு சிலர் போடுகின்ற பிச்சைக்காக எம்.எல்.ஏ.,க்கள் செயல்படக்கூடாது.
ஆதரவு கிடைக்காது:
நிரந்தர அரசியல்வாதியாக இருக்க வேண்டுமா அல்லது இடைப்பட்ட காலத்தில் அரசியல்வாதியாக இருந்துவிட்டு போய்விட வேண்டுமா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். தன்னிச்சையாக முடிவெடுத்தால், இந்த காலத்தை கடந்தால், மக்களின் ஆதரவு கிடைக்காது. எங்களுக்கு பதவி கிடைத்தால், இரண்டு நல்ல காரியத்தை செய்து விட்டு தப்பித்துவிடுவோம் மக்கள் மறந்துவிடுவார்கள் என எம்.எல்.ஏ.,க்கள் கருதுகிறார்கள். ஆனால் முன்னர் போல் மக்கள் கிடையாது. இளைஞர்கள் வீறு கொண்டு நடக்கிறார்கள். சமூக வலை தளத்தில் அனைத்து செய்திகளும் பரவுகினறன. இன்று உள்ள கொதிப்பு அனைவருக்கும் தெரிகிறது. செய்யக்கூடாத வற்றை அதிமு.க எம்.எல்.ஏ.,க்கள் செய்கிறார்கள்
உண்மையான அதிமுக யார் என மக்கள் தான் கூற வேண்டும். அதிக பெண்களுக்கு ஜெ., வாய்ப்பு கொடுத்தார்கள். அமைச்சர் வளர்மதி தைரியம் இருந்தால் ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் சந்திக்க தயாரா? அவரை எதிர்த்து நானும் நிற்கிறேன். அவர் வெற்றி பெற்றால், பதவியில் நீடிக்கட்டும். நானும் ஓட்டளித்தவன் என்ற முறையில், உங்களை ஒரு தினம் சிந்தித்து உங்கள் மனசாட்சிக்கு கேட்டு பொது மக்களைவாக்களித்த மக்களை கேட்டு வாக்களிக்க வேண்டும் என அன்புடன் கோருகிறேன் . நீங்கள் நல்ல அரசியல்வாதி என மக்கள் முடிவெடுக்கும் வகையில், நீங்கள் நல்ல முடிவெடுக்க வேண்டும்.
ஜனாதிபதி ஆட்சி:
இன்று அதிகாரத்தை யார் அனுபவிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சட்டசபையை கலைத்துவிட வேண்டும். சட்டம் ஒழுங்கு கெடும் சூழ்நிலை வந்து கொண்டுள்ளது. ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டால் மக்களுக்கு அமைதி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Monday, 6 February 2017
தமிழகத்துக்கு விரைவில் சட்டசபை தேர்தல்.. இளைஞர்களுக்கு அழைப்பு.. அஸ்வின் ஆவேசம்!
சென்னை: தமிழகத்துக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சூசகமாக தனது ட்விட்டில் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராக உள்ள சூழ்நிலையில், அவருக்கு எதிராக தமிழகம் முழுக்க ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் நடுவே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது பல தளங்களிலும் உள்ள பிரபலங்களையும் கூட சீண்டியுள்ளது. அதில் ஒரு எதிர்ப்பு யாரும் எதிர்பார்க்காத தளத்தில் இருந்து கூட வந்துள்ளது.
அஸ்வின் கோபம்
அந்த பிரபலம் வேறு யாருமல்ல, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின். சென்னையை சேர்ந்த இவர் சசிகலாவுக்கு எதிரான எதிர்ப்பை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
வேலைவாய்ப்புகள்
தமிழகத்திலுள்ள அனைத்து இளைஞர்களுக்கும், 234 வேலைவாய்ப்புகள் விரைவில் கிடைக்க உள்ளது' என்று அஸ்வின் டிவிட் செய்துள்ளார். 234 தொகுதிகள் தமிழகத்தில் இருப்பதையும், விரைவில் ஆட்சி கலைந்து தேர்தல் நடைபெறும், என்பதையும் அஸ்வின் பூடகமாக குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர்களுக்கு அழைப்பு
மேலும், 234 இடங்களிலும் இளைஞர்கள் போட்டியிட முன்வர வேண்டும் என்ற தனது ஆசையையும் பூடகமாக குறிப்பிட்டுள்ளார் அஸ்வின். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்கள் எழுச்சியுடன் போராடிய நிலையில் அஸ்வின் இளைஞர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமலும் கடுப்பு
இதனிடையே நடிகர் கமல், பீலிப்பேய் சாகாடும் அச்சு இறும் அப்பண்டஞ் சால மிகுத்து பெயின்.. என்னும் திருக்குறளை டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இது சசிகலாவை பற்றி மறைமுகமாக கமல்சாடுவதை போல உள்ளதாக நெட்டிசன்கள் பேசிக்கொள்வது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராக உள்ள சூழ்நிலையில், அவருக்கு எதிராக தமிழகம் முழுக்க ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் நடுவே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது பல தளங்களிலும் உள்ள பிரபலங்களையும் கூட சீண்டியுள்ளது. அதில் ஒரு எதிர்ப்பு யாரும் எதிர்பார்க்காத தளத்தில் இருந்து கூட வந்துள்ளது.
அஸ்வின் கோபம்
அந்த பிரபலம் வேறு யாருமல்ல, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின். சென்னையை சேர்ந்த இவர் சசிகலாவுக்கு எதிரான எதிர்ப்பை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
வேலைவாய்ப்புகள்
தமிழகத்திலுள்ள அனைத்து இளைஞர்களுக்கும், 234 வேலைவாய்ப்புகள் விரைவில் கிடைக்க உள்ளது' என்று அஸ்வின் டிவிட் செய்துள்ளார். 234 தொகுதிகள் தமிழகத்தில் இருப்பதையும், விரைவில் ஆட்சி கலைந்து தேர்தல் நடைபெறும், என்பதையும் அஸ்வின் பூடகமாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 234 இடங்களிலும் இளைஞர்கள் போட்டியிட முன்வர வேண்டும் என்ற தனது ஆசையையும் பூடகமாக குறிப்பிட்டுள்ளார் அஸ்வின். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்கள் எழுச்சியுடன் போராடிய நிலையில் அஸ்வின் இளைஞர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமலும் கடுப்பு
இதனிடையே நடிகர் கமல், பீலிப்பேய் சாகாடும் அச்சு இறும் அப்பண்டஞ் சால மிகுத்து பெயின்.. என்னும் திருக்குறளை டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இது சசிகலாவை பற்றி மறைமுகமாக கமல்சாடுவதை போல உள்ளதாக நெட்டிசன்கள் பேசிக்கொள்வது குறிப்பிடத்தக்கது.
Sunday, 5 February 2017
உ.பி.,யில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தோற்கடிக்கப்படனும்
பதாயூன்:சமாஜவாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் தோற்கடிக்கப்பட்டால்தான், உத்தரப் பிரதேசத்துக்கு நல்ல நாள்கள் வரும்' என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
உத்தரப் பிரதேச மாநிலம், பதாயூனில் சனிக்கிழமை நடைபெற்ற பா.ஜ..,பிரசாரக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:சமாஜ்வாதி தலைவர் அகிலேஷும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் நல்ல நாள்கள் எப்போது வரும்? என்று கேள்வியெழுப்பி வருகின்றனர். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில், சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் தோற்கடிக்கப்பட்டால்தான், இந்த மாநிலத்துக்கு நல்ல நாள்கள் வரும் என்று மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
ராகுல் மீது தாக்கு: ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் தன்னை பேச அனுமதித்தால் பூகம்பமே வரும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார். ஆனால், அவர் பேசினால் பூகம்பம் அல்ல, காற்றுகூட வராது. தன்னிடம் ஏதாவது உருப்படியான தகவல்கள் இருந்தால், ராகுல் தாராளமாகப் பேசலாம்.
பஞ்சரான சைக்கிள்: தனது கடின உழைப்பால் சமாஜ்வாதி கட்சியை நிறுவியவரான முலாயம் சிங், சமாஜ்வாதி - காங்கிரஸ் தேர்தல் கூட்டணியை எதிர்க்கிறார். ஆனால், அவரது மகன் அகிலேஷோ, பஞ்சரான "சைக்கிளில்' அமர்ந்து கொண்டு, காங்கிரஸுடன் கைகோத்துள்ளார்.பகுஜன் சமாஜ் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படாது. மாநிலத்தில் கூலிப்படையினரின் ஆதிக்கத்தை ஒடுக்க வேண்டுமெனில், பா.ஜ.க.,வுக்கு ஓட்டளியுங்கள் என்றார் .
English Summary:
Patayun: SP, BSP failed in both parties, Uttar Pradesh will have good days, "Union Home Minister Rajnath Singh said.
உத்தரப் பிரதேச மாநிலம், பதாயூனில் சனிக்கிழமை நடைபெற்ற பா.ஜ..,பிரசாரக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:சமாஜ்வாதி தலைவர் அகிலேஷும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் நல்ல நாள்கள் எப்போது வரும்? என்று கேள்வியெழுப்பி வருகின்றனர். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில், சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் தோற்கடிக்கப்பட்டால்தான், இந்த மாநிலத்துக்கு நல்ல நாள்கள் வரும் என்று மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
ராகுல் மீது தாக்கு: ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் தன்னை பேச அனுமதித்தால் பூகம்பமே வரும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார். ஆனால், அவர் பேசினால் பூகம்பம் அல்ல, காற்றுகூட வராது. தன்னிடம் ஏதாவது உருப்படியான தகவல்கள் இருந்தால், ராகுல் தாராளமாகப் பேசலாம்.
பஞ்சரான சைக்கிள்: தனது கடின உழைப்பால் சமாஜ்வாதி கட்சியை நிறுவியவரான முலாயம் சிங், சமாஜ்வாதி - காங்கிரஸ் தேர்தல் கூட்டணியை எதிர்க்கிறார். ஆனால், அவரது மகன் அகிலேஷோ, பஞ்சரான "சைக்கிளில்' அமர்ந்து கொண்டு, காங்கிரஸுடன் கைகோத்துள்ளார்.பகுஜன் சமாஜ் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படாது. மாநிலத்தில் கூலிப்படையினரின் ஆதிக்கத்தை ஒடுக்க வேண்டுமெனில், பா.ஜ.க.,வுக்கு ஓட்டளியுங்கள் என்றார் .
English Summary:
Patayun: SP, BSP failed in both parties, Uttar Pradesh will have good days, "Union Home Minister Rajnath Singh said.
வளர்ச்சிக்கு தடையாக உள்ள சமாஜ்வாடி அரசு: ஹேம மாலினி குற்றச்சாட்டு

பிரசாரக் கூட்டங்களில் ஹேம மாலினி பேசியதாவது:-ஏராளமான வளர்ச்சிப் பணிகளை கொண்டு வருவதற்கு நாங்கள் முன்வந்தோம். ஆனால், சமாஜ்வாடி அரசானது. எங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை. குறிப்பாக, மதுரா தொகுதிக்கான வளர்ச்சித் திட்டங்களை அனுப்பினோம். ஒன்று பணிகளை கிடப்பில் போடுகிறார்கள் அல்லது பணிகளை மிகவும் தாமதமாக மேற்கொள்கிறார்கள்.
ஒரே கட்சி ஆட்சி:
மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால், கூடுதல் ஒத்துழைப்பு கிடைப்பதுடன், வளர்ச்சித் திட்டப் பணிகளும் வேகமாக நடைபெறும்.பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணம் வைத்திருப்போருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது. சாமான்ய மனிதன் பாதிக்கப்படவில்லை என்றார்.
English summary:
Mathura: Mathura in Uttar Pradesh state government as an obstacle to the development of Samaj Wadi MP Hema Malini In the ongoing campaign for the legislative elections in the territory upcoming crime, Mathura constituency BJP MP Hema Malini, BJP is contesting in math and Baldev blocks In favor of the candidates campaigned yesterday.
Saturday, 4 February 2017
பஞ்சாப், கோவாவில் ஓட்டுப்பதிவு துவங்கியது

கோவா :
முதல்வர், லட்சுமிகாந்த் பர்சேகர் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும் கோவாவில், சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடக்கிறது. மொத்தமுள்ள, 40 தொகுதிகளில், பா.ஜ., - காங்., - ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சிகள், அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என, 250 வேட்பாளர்கள், களத்தில் உள்ளனர். பனாஜியில் மனோகர் பாரிக்கர் வரிசையில் நின்று ஓட்டளித்தார்.
பஞ்சாப்:
பஞ்சாபில், அகாலி தளத்தை சேர்ந்த, பிரகாஷ் சிங் பாதல் முதல்வராக உள்ளார். இங்கு, பா.ஜ., - அகாலிதளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், மொத்தமுள்ள, 117 தொகுதிகளிலும் இன்று, ஒரே கட்டமாக ஓட்டுப் பதிவு நடக்கிறது. கடந்த, 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அகாலிதளம் - பா.ஜ., கூட்டணி, மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் உள்ளது. கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், நான்கு இடங்களில் வெற்றி பெற்ற, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும், எதிர்க்கட்சியான காங்கிரசும், எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தீவிரமாக உள்ளன.
பலத்த பாதுகாப்பு:
மாநிலம் முழுவதும், போலீசார் மற்றும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மொத்தமுள்ள, 117 தொகுதிகளில், 1,145 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில், 81 பேர் பெண்கள்; ஒரு திருநங்கையும் களத்தில் உள்ளார். 1.98 கோடி வாக்காளர்கள், தேர்தலில் ஓட்டளிக்க உள்ளனர்.
அடுத்த மாதம் முடிவு:
இந்த தேர்தலில், 11 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள், இன்று ஓட்டளிக்கவுள்ளனர். இந்த ஓட்டுகள் அனைத்தும், அடுத்த மாதம், 11ல் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியாகும். மத்தியில் ஆளும், பா.ஜ., அரசின் மூன்றாண்டு கால சாதனை, சமீபத்தில் வெளியான மத்திய பட்ஜெட், மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு உள்ளிட்ட பல அம்சங்கள், இந்த தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English summary:
Chandigarh: 7 am today voting for the elections to the Goa Assembly, the voting started at 8 am in Punjab. Standing in a long line of people who are voting for the first morning. If an election is only one phase of the two states, strengthened security arrangements.