
Tuesday, 28 March 2017
மனநல மருத்துவ மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்

Friday, 10 March 2017
பேறு கால விடுப்பு 26 வாரங்களாக அதிகரிப்பு; நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது

மகப்பேறு சீர்திருத்த மசோதா 2016 மாநிலங்களவையில் கடந்த குளிர்கால கூட்டத்தொடரின்போது நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களாக அதிகரிப்பு
தமிழக அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு உயர்வுக்கு அரசு ஊழியர் சங்கங்கள் வரவேற்பு
மகப்பேறு சீர்திருத்த மசோதா 2016 - முக்கிய அம்சங்கள்
•பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கின்ற 12 வார மகப்பேறு விடுமுறை இனிமேல் முதல் இரண்டு குழந்தைகளுக்கு 26 வாரங்களாக அதிகரிப்பு.
•இரண்டு குழந்தைகளுக்கு மேலான மகப்பேறு விடுமுறை தற்போதைய 12 வாரங்களாகவே தொடரும்.
•3 மாதங்களுக்கு குறைந்த குழந்தையை தத்து எடுக்கின்ற
தாய்மாருக்கும், "உரிமை தாய்"-க்கும் மகப்பேறு விடுப்பு 12 வாரங்களாக இருக்கும். "உரிமை தாய்" என்பவர் தன்னுடைய கரு முட்டையை இன்னொரு பெண்ணின் கருப்பையில் வைத்து வளர்த்தெடுக்கும் உயிரியல் தாய் என வரையறுக்கப்படுகிறார்.
•50-க்கு மேலான தொழிலாளர்கள் பணிபுரியும் எல்லா நிறுவனங்களிலும், பணிபுரியும் தாய்மாருக்கு குழந்தைகள் பராமரிப்பு வசதிகள் வழங்கப்பட வேண்டும். தன்னுடைய குழந்தையை பராமரிக்கவும், குழந்தைகள் பராமரிப்பு இடத்தில் குழந்தைக்கு பாலூட்டவும் இத்தகைய தாய்மார்களுக்கு பணி நேரத்தின்போது நான்கு முறை அனுமதி வழங்கப்பட வேண்டும்.
இந்தியாவில் மகப்பேறு விடுப்பு இரட்டிப்பாகிறது
தமிழக அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு உயர்வுக்கு அரசு ஊழியர் சங்கங்கள் வரவேற்பு
•வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க முடியும் என்றால், வேலைக்கு அமர்த்துவோர் அவ்வாறு அனுமதி வழங்கலாம்.
•பணி நியமனம் வழங்கும் நேரத்தில் இருந்து எல்லா நிறுவனங்களும் இத்தகைய வசதிகளை பெண்களுக்கு உருவாக்கி கொடுக்க வேண்டும்.
இந்தியாவிலுள்ள இலட்சக்கணக்கான பெண்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, இந்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்றுள்ள மத்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை அமைச்சர் மேனகா காந்தி நன்றி தெரிவித்திருக்கிறார்.
பணிபுரியும் பெண்களுக்கு விடுத்த செய்தியில், குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடும் பெண்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கும் அவர், பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை அமைச்சகம் பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதற்கான பணிகளை தொடரும் என்று தெரிவித்திருக்கிறார்.
குழந்தை பெற்றுகொள்ளும் தாய்மார், மகப்பேற்றுக்கு பின்னர் 6 மாதங்கள் தாய் பாலூட்ட தேவையான அவகாசம் கிடைக்கும் வகையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம், பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை அமைச்சர் வைத்த வேண்டுகோளை தொடர்ந்து இந்த சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
செல்லா நோட்டு நெருக்கடியில் பிறந்த குழந்தை உ.பி பிரசார மையத்தில்
குழந்தை பெற்றெடுத்த தாய் பணிக்கு மீண்டும் திரும்புவதற்கு முன்னால், தன்னை முழுமையாக பழைய இயல்பு நிலைமைக்கு மீட்டெடுக்கவும் இந்த கால அவகாசம் உதவும்.
உரிமைத் தாய் மற்றும் தத்து எடுக்கும் தாய்மாருக்கும் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுவது தேவை என்பதை பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை அமைச்சர் தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதியை உதறிய தந்தைக்கு பார்லிமென்டில் பாராட்டு

ம.பி.,யில், போபால் - உஜ்ஜயின் ரயிலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய, உ.பி.,யின் லக்னோவில் பதுங்கியிருந்த பயங்கரவாதி சயிபுல்லாவை, போலீசார் நேற்று முன்தினம் சுட்டுக் கொன்றனர்.
உ.பி.,யின் கான்பூரில் வசிக்கும், அவனது தந்தை முகமது சர்தாஸ், 'நான் ஒரு இந்தியன்; நாட்டுக்கு எதிராக செயல்பட்ட சயிபுல்லா ஒரு துரோகி; அவன் உடலை வாங்க மாட்டேன்' என்றார்.பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்திருந்த நிலையில், சர்தாஸின் நடவடிக்கைக்கு, பார்லிமென்டில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பட்ஜெட் கூட்டத்தொடரின், இரண்டாவது கட்டத்தின் முதல் நாளான நேற்று, லோக்சபாவில் இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:
ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்புடைய சயிபுல்லாவை உயிருடன் பிடிப்பதற்கு, அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அது பலனளிக்கவில்லை. கொல்லப்பட்டது, தன் மகனாக இருந்த போதும், நாட்டுப்பற்றுடன் செயல்பட்ட, சர்தாஸை பாராட்டுகிறேன்.
தேசத்துக்கு எதிராக செயல்பட்ட தன் மகனை துரோகி எனக்கூறி, உடலை கூட வாங்க மறுத்துள்ள சர்தாஜை, அனைத்து, எம்.பி.,க்களும் பாராட்டுவர் என,எதிர்பார்க்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
அதை தொடர்ந்து, அனைத்து, எம்.பி.,க்களும் மேஜையை தட்டி, ராஜ்நாத் சிங்கின் கருத்தை ஆமோதித்தனர்.
என்.ஐ.ஏ., விசாரணை:
லோக்சபாவில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மேலும் கூறியதாவது:ம.பி.,யில் நடந்த ரயில் குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் உ.பி.,யில் பயங்கரவாதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கும்.இந்த சம்பவத்தில், மத்திய புலனாய்வு அமைப்புகள் அளித்த தகவலின்படி, ம.பி., - உ.பி., அரசுகள் மிகச் சிறப்பாக செயல்பட்டு, ஆறு பயங்கரவாதிகளை கைது செய்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
ராஜ்யசபா நாள் முழுவதும் ஒத்திவைப்பு; லோக்சபாவில் அ.தி.மு.க., அமளி

லோக்சபாவில் தமிழக மீனவர்கள் பிரச்சனை:
லோக்சபா நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க., உறுப்பினர்கள் லோக்சபாவில் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை படையினரின் தாக்குதல் குறித்து விவாதிக்க வேண்டும் என குரல் எழுப்பினர்.கேள்வி நேரம் முடிந்த பின்னர் விவாதிக்கலாம் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறினார்.
இந்தியர்கள் மீது தாக்குதல்:
அமெரிக்காவில் இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல் நடப்பது குறித்து விவாதிக்க வேண்டும் என காங்., உறுப்பினர்கள் எழுப்பினர். முழு விவரம் பெற்று வருகிறோம். அடுத்த வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்வோம் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பதில் அளித்தார்.
Wednesday, 8 March 2017
மீனவர் பிரச்னை குறித்து பார்லி.,யில் குரல் எழுப்புவோம்: தம்பிதுரை

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ‛‛இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டு கொல்லப்பட்டது குறித்து பார்லிமெண்டில் குரல் எழுப்புவோம். கச்சத்தீவை மீட்பது மட்டுமே மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையும். ஜெ., மரணம் குறித்த மருத்துவ அறிக்கையை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அரசியலுக்கு அப்பார்பட்டு பார்க்க வேண்டும்'' என்றார்.
English Summary:
Chennai: Tamil Nadu fisherman was shot Lok Sabha Deputy Speaker of the Parliament to raise the voice said tampiturai
Friday, 3 March 2017
ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்கும் அமெரிக்கர்களுக்கு விசாவை கட்டாயமாக்க முயற்சி

ஐரோப்பிய ஆணையம், இரண்டு மாதங்களில் இந்த நடவடிக்கையை அமல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளாகிய பல்கேரியா, க்ரோஷியா, சிப்ரஸ், போலந்து மற்றும் ரூமானியா ஆகிய நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய விசா தேவை; ஆனால் அமெரிக்க குடிமக்கள் விசா இல்லாமல் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்ய முடியும்.
கடந்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குள் ஆனையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பரஸ்பர விசா ஏற்பாடுகளால் சில உறுப்பு நாடுகள் பயன் அடையவில்லை என்று தெரியவந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு இந்த கோரிக்கை விடப்பட்டது.
English summary:
US citizens traveling to EU countries, the need to obtain visas to the European Parliament, the European Commission has asked .
Tuesday, 31 January 2017
பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்: ஒருங்கிணைந்த பட்ஜெட் நாளை தாக்கல்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை (ஜன.31) தொடங்குகிறது. ஒருங்கிணைந்த பட்ஜெட் (பொது பட்ஜெட்டுடன் இணைந்த ரயில்வே பட்ஜெட்) புதன்கிழமை (பிப்.1) தாக்கல் செய்யப்படுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 2 அமர்வுகளாக நடைபெறுகிறது. இதில் முதல் அமர்வு செவ்வாய்க்கிழமை (ஜன.31) முதல் பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்பிறகு இரு அவைகளும் ஒத்திவைக்கப்படும்.
பின்னர், மார்ச் மாதம் 9-ஆம் தேதி 2-ஆவது அமர்வு தொடங்குகிறது. ஏப்ரல் 12-ஆம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைகிறது.
நிகழ் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இது என்பதால், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை உரை நிகழ்த்துகிறார். கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே பட்ஜெட்டுக்கு முந்தைய பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்யவுள்ளார்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக அமலில் இருந்த ரயில்வே பட்ஜெட்டை தனியாக தாக்கல் செய்யும் நடைமுறை நிகழ் ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக பொது பட்ஜெட்டுடன் சேர்ந்து ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது நாளான புதன்கிழமை ஒருங்கிணைந்த பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்யவிருக்கிறார்.
சரக்கு-சேவை வரி விதிப்புச் சட்டத்தை (ஜிஎஸ்டி) ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்தச் சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அட்டவணையை பட்ஜெட்டில் ஜேட்லி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு பிரிவினருக்கு வரிச் சலுகைகளையும், உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வேளாண் துறை, உற்பத்தி துறைகள் பயன்பெறும் வகையிலான புதிய திட்டங்களையும் பட்ஜெட்டில் அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே துறையை பொருத்தமட்டில், அதிவேக ரயில் தொடர்பான அறிவிப்புகளும், ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பான அறிவிப்புகளும் இடம்பெறும் எனத் தெரிகிறது. ரயில்வே கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படுமா? என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை.
முன்னதாக, பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து தில்லியில் திங்கள்கிழமை 2 அனைத்து கட்சிக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தில்லியில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற முதல் கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த் குமார் தலைமை வகித்தார்.
மாலையில் நடைபெற்ற 2-ஆவது கூட்டத்துக்கு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்கு மத்திய அரசுக்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
எனினும், உயர்மதிப்பு ரூபாய் நோட்டு விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டத் தொடரில் காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக எழுப்பலாம் எனத் தெரிகிறது.
குறிப்பாக, நிதி நிறுவன மோசடி வழக்குகளில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தை அக்கட்சியின் உறுப்பினர்கள் பிரச்னையாக்கலாம் என்று கூறப்படுகிறது.
Monday, 23 January 2017
பிப்ரவரி 2 பாலமேட்டில் ஜல்லிக்கட்டு

அலங்காநல்லூரில் பிப்ரவரி 1ம் தேதி ஜல்லிக்கட்டு நடக்கும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து பாலமேடு ஜல்லிக்கட்டு குழுவினரும், ஜல்லிக்கட்டு நடக்க உள்ள
தேதியை அறிவித்துள்ளனர்.
English summary:
Madurai district on February 2 parliament til jallikattu is held. This decision was taken at a meeting held in the village committee parliament jallikattu.
Friday, 13 January 2017
அ.தி.மு.க., எம்.பி., க்கள் எங்கே? கடைசி 10 நாள் ஆளையே காணோம்! : பொன். ராதாகிருஷ்ணன் 'சுருக்'
மதுரை : ''ஜல்லிக்கடடு குறித்து பார்லிமென்ட்டில் பேசாமல் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் எங்கே போனார்கள்?'' என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: 'ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது' என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை சரிசெய்யும் முயற்சிகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக பா.ஜ., அரசு மேற்கொண்டு வருகிறது. சாதகமான தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். இப்போது சிலர், 'மத்திய அரசு ஏன் சட்டம் கொண்டு வரக்கூடாது?' என பேசுகின்றனர்.
கடந்த மாதம் பார்லிமென்ட் கூட்டம் நடந்த போது அ.தி.மு.க., எம்.பி.,க்கள் எங்கே சென்றனர்; கடைசி 10 நாட்கள் ஏன் வரவில்லை; எது அவர்களை தடுத்தது. மற்ற கட்சி உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்; தற்போது ஞானோதயம் பெற்றதற்கு என்ன காரணம்? தி.மு.க.,- அ.தி.மு.க.,- காங்., கட்சிகளை துடைத்தெறிந்து விட்டு, மக்கள் பொங்கல் கொண்டாடினால், 50 ஆண்டுகள் அவலநிலை மாறி ஒரு நல்ல நிலை தமிழகத்திற்கு பிறக்கும். ஜல்லிக்கட்டு கட்டாயமாக நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
Madurai : '' jallikkatatu silent about the AIADMK in Parliament, MPs, where did it go? '' The Federal Minister for gold. Radhakrishnan asked.
மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: 'ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது' என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை சரிசெய்யும் முயற்சிகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக பா.ஜ., அரசு மேற்கொண்டு வருகிறது. சாதகமான தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். இப்போது சிலர், 'மத்திய அரசு ஏன் சட்டம் கொண்டு வரக்கூடாது?' என பேசுகின்றனர்.
கடந்த மாதம் பார்லிமென்ட் கூட்டம் நடந்த போது அ.தி.மு.க., எம்.பி.,க்கள் எங்கே சென்றனர்; கடைசி 10 நாட்கள் ஏன் வரவில்லை; எது அவர்களை தடுத்தது. மற்ற கட்சி உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்; தற்போது ஞானோதயம் பெற்றதற்கு என்ன காரணம்? தி.மு.க.,- அ.தி.மு.க.,- காங்., கட்சிகளை துடைத்தெறிந்து விட்டு, மக்கள் பொங்கல் கொண்டாடினால், 50 ஆண்டுகள் அவலநிலை மாறி ஒரு நல்ல நிலை தமிழகத்திற்கு பிறக்கும். ஜல்லிக்கட்டு கட்டாயமாக நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
Madurai : '' jallikkatatu silent about the AIADMK in Parliament, MPs, where did it go? '' The Federal Minister for gold. Radhakrishnan asked.
Thursday, 12 January 2017
ரோபோக்களிடமிருந்து மனிதர்களுக்கு பாதுகாப்பு - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு

ரோபோக்களுக்கு மின்னணு நபர்கள் என்ற சட்ட ரீதியான தகுதியை அளிப்பது மற்றும் ரோபோக்களிடம் இருந்து மனிதர்களைப் பாதுகாப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவை இந்தச் சட்டத்தின் கீழ் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
ரோபோக்களை தயாரிப்பவர்கள், 'கில் -சுவிட்ச்' என்று சொல்லப்படும் ரோபோவை அழிக்கும் அம்சத்தைச் சேர்த்து தான் வடிவமைக்க வேண்டும் என்பதும் ஒரு திட்டத்தின் கீழ் தேவைப்படுகிறது.
இது போன்ற பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய ஒரு அறிக்கை ஐரோப்பிய நாடாளுமன்ற சட்ட கமிட்டியின் முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாகரீக வளர்ச்சியின் கடைசி நிகழ்வுதான் செயற்கை அறிவு வளர்ச்சி:
ஸ்டீஃபன் ஹாகிங்
கிளிக் - தொழில் நுட்ப காணொளி
English summary:
EU law on the basics of artificial intelligence to create a vote of the members of the European Parliament is set to vote today.
Thursday, 5 January 2017
பாராளுமன்றம் ஒப்புதலோடு துருக்கியில் அவசரநிலை சட்டம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு

ராணுவ புரட்சி:
துருக்கி நாட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற ராணுவ புரட்சிக்கான முயற்சி, பொதுமக்களால் முறியடிக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற மோதல்களில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தனர். ராணுவ புரட்சி முறியடிக்கப்பட்ட நிலையில், அரசுக்கு எதிராக செயல்பட்ட ராணுவ அதிகாரிகள், வீரர்கள் மற்றும் நீதிபதிகளை சுற்றி வளைக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டது. அதற்கு வசதியாக 3 மாதங்களுக்கு நாடு முழுவதும் அவசரநிலை சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
அவசரநிலை சட்டம்:
பத்திரிகை மற்றும் இதர ஊடகங்களின் செய்திகளை தணிக்கை செய்யவும், தேவை ஏற்பட்டால் பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெறாமலேயே சில முக்கிய சட்டங்களை இயற்றவும் இந்த அவசரநிலை சட்டம் பிரதமருக்கு தனிஅதிகாரத்தை வழங்கியுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் இந்த சட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
மேலும் 3 மாதங்களுக்கு....:
பிரதமர் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்கும் புரட்சிக்கு சதி திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்பட்ட ராணுவ துணை தளபதிகள், நீதிபதிகள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை தொடர்ந்துவரும் நிலையில் இதற்கு வசதியாக அவசரநிலை சட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க அரசு தீர்மானித்துள்ளது.
பாராளுமன்றம் ஒப்புதல்:
இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக நேற்று துருக்கி பாராளுமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. பாராளுமன்றமும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் வரும் 19-ம் தேதியுடன் முடிவடையை இருந்த இந்த அவசரநிலை பிரகடன உத்தரவு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
English summary:
Ankara, Turkey in the wake of the rebellion to topple the elected government, imposed emergency in the country last July, the parliament has approved legislation to extend for a further 3 months.