
Tuesday, 28 March 2017
போராட்டக்குழுவினரிடம் புதுக்கோட்டை கலெக்டர் உறுதி

Monday, 27 March 2017
Friday, 24 March 2017
சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது

Friday, 10 March 2017
நெடுவாசல்: 22 நாள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹை ட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்ட குழுவினர் 22 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வரும் 15-ம் தேதி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்ய உள்ளதாக உறுதி அளித்த கூறப்படுகிறது இதனையடுத்து மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பொதுத்தேர்வு:
மேலும் தற்போது 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெறுவதால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கும் பொருட்டு போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary:
Pudukkottai: the federal government's carbon plan high figure, was held for 22 days in protest against the neduvasal temporarily.
Saturday, 4 March 2017
ஹைட்ரோ கார்பன் திட்டம்:கோட்டைக்காடு போராட்டம் வாபஸ்

போராட்டக்குழுவினர் தகவல்:
போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளதாக போராட்டக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
English Summary:
Pudukkottai: hydrocarbon project in the fight against the Pudukkottai district kottaikkadu temporarily withdrawn. The fight was temporarily withdrawn after discussions with the district collector struggle reports are obtained.
தஞ்சை, புதுக்கோட்டையில் லேசான மழை

சில ஆண்டுகளாக மழை இல்லாமல் வறட்சியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை ராமநாதபுரம் மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. ராமேஸ்வரத்தில் இந்த மழையின் தாக்கம் இருந்ததது.
மனதை குளிர்வித்தது:
இது போல் தஞ்சாவூரில் மதியம் ஒரு மணியளவில் பட்டுக்கோட்டை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. புதுக்கோட்டையில் லேசான சாரல் மழை பெய்தது. மதுரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. லேசான தூறல் மழை விழுந்தது. வறட்சி நிலவி வந்த நேரத்தில் இந்த லேசான மழை மக்களுக்கு சற்று மனம் குளிர்வை தந்துள்ளது.
Wednesday, 1 March 2017
சென்னை புறப்பட்டது நெடுவாசல் போராட்டக்குழு

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வரும் நிலையில் போராட்டக்காரர்களுக்கு மாணவர்களும் ஆதரவளித்துள்ளனர்.
சென்னை புறப்பட்டனர்:
இந்நிலையில் போரட்டக்குழுவை சேர்ந்த ஒன்பது பேர் இன்று(மார்ச் -1) காலை 10 மணியளவில் முதல்வரை சந்தித்து பேச உள்ளனர். முன்னதாக ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கணேஷ் மற்றும் மாவட்ட எஸ்.பி, மற்றும் போராட்ட குழு உறுப்பினர் ஒன்பது பேர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர், போராட்டக்குழுவினர் சென்னை புறப்பட்டனர்.
Sunday, 22 January 2017
ஜல்லிக்கட்டுக்கு மாடு முட்டி ஒருவர் பலி

எதிர்ப்பு போராட்டம்:
ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் மறியல் போராட்டம் நடத்தினர். அவசர சட்டம் இயற்றப்பட்டாலும் நிரந்தர தீர்வு வரும் வரை ஜல்லிக்கட்டு நடத்த மாட்டோம் என போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் காலையில் புதுக்கோட்டை ராப்பூசல் பகுதியில் ஜல்லிக்கட்டு நடந்தது. அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். ஆனால் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து இலுப்பூரில் மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தினால் பதட்டம் நீடித்தது.
இதற்கிடையில் மாடு பிடி வீரர் மோகன் ( வயது 30 ) மாடு முட்டியதில் படுகாயமுற்றார். ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் இவர் உயிரிழந்தார்.
English summary:
Pudukkottai: jallikattu in Pudukkottai soldier who participated in the offering. Another 12 people were wounded.
திருச்சியில் ஜல்லிக்கட்டு; 10க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன

ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நிரந்தர சட்டம் கொண்டு வந்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என மெரினா, அலங்காநல்லூர் மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே புதுப்பட்டியில் காளைகளை அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 10க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. புதுக்கோட்டையில் ராப்பூசல் கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
English summary:
Trichy: hold jallikattu ordinance was issued, followed SANDSTONE near Trichy and jallikattu held in Pudukkottai.
Tuesday, 17 January 2017
கோர்ட்டுக்கு கட்டுப்பட அவசியமில்லை : எச்.ராஜா

தடையை மீறி ஜல்லிக்கட்டு :
புதுக்கோட்டை மாவட்டம் சீலாநிலைக்கோட்டை பகுதியில் கண்மாய் பகுதியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா, துண்டை அசைத்து காளைகளை அவிழ்த்து விட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.
இதே போன்று சுப்ரீம் கோர்ட் தடையை மீறி புதுக்கோட்டை மாவட்டத்தில் மனம்பட்டி, வடசேரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இருப்பினும் இது தொடர்பாக போலீசார் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.
கட்டுப்பட அவசியமில்லை :
ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ள நிலையில், பா.ஜ.,வை சேர்ந்த ராஜா தடையை மீறி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டை துவக்கி வைத்தது பலரையும் ஆச்சரியம் அடைய வைத்தது. இது பற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு தனி மனிதன் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. மத்திய, மாநில அரசுகள் தான் கட்டுப்பட வேண்டும். சுப்ரீம் கோர்ட், ஜல்லிக்கட்டுக்கு தான் தடை விதித்துள்ளது. மஞ்சுவிரட்டுக்கு இல்லை என பதிலளித்தார்.
English Summary:
Pudukkottai: Bulls loose off jallikattu near Pudukkottai BJP national secretary h.raja, the Supreme Court stated that individuals are not required to abide by.
Tuesday, 20 December 2016
நெடுந்தீவு அருகே புதுக்கோட்டை மீனவர்கள் 7 பேர் கைது
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கோத்தைபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 7 பேர் இலங்கை அருகே நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். அவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்திய 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுவரை மீனவர்கள் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
English Summary:
Pudukkottai district kottaipattinattai 7 people Lankan fishermen who were fishing near the vicinity of Delft.Then came the Sri Lankan Navy for fishing across the border to arrest them was taken.
English Summary:
Pudukkottai district kottaipattinattai 7 people Lankan fishermen who were fishing near the vicinity of Delft.Then came the Sri Lankan Navy for fishing across the border to arrest them was taken.