
விவாதம்:
சபாநாயகர் தனபால் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டிய தி.மு.க., சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் சபாநாயகரை நீக்கக் கோரும் கடிதத்தை, மு.க.ஸ்டாலின் கடந்த 9ம் தேதி சபாநாயகரிடம் அளித்தார். இதன் மீதான விவாதம் இன்று நடந்தது. சட்டசபையை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நடத்தினார்.
ஒரு தலைபட்சமாக:
தீர்மானத்தை முன்மொழிந்து ஸ்டாலின் பேசுகையில், சட்டசபை மரபுகளை காப்பாற்ற சநாநாயகர் தனபால் தவற விட்டார். 89 வயக்காட்டு பொம்மைகள் என தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பற்றி பேசியதை நீக்க மறுத்து விட்டார். அதிமுக உறுப்பினர்கள் எதை பேசினாலும் நீக்குவதில்லை. ஒருதலைபட்சமாக பேரவையை வழிநடத்துகிறார்.. முதல்வர் மீதானநம்பிக்கை ஓட்டெடுப்பின் போது மரபுகளை கடைப்பிடிக்காமல் செயல்பட்டார் . அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் ஆதாரம் இல்லாமல் அவதூறு கூறும்போது அதை கட்டுப்படுத்த தவறிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த தீர்மானத்தை ஓ.பி.எஸ்., ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரிக்கவில்லை . பின்னர் நடந்த குரல் ஓட்டெடுப்பில், தி.மு.க., கொண்டு வந்த தீர்மானம் தோல்வியில் முடிந்தது. பின்னர் ஸ்டாலின் கோரிக்கைப்படி பிரிவு வாரியாக ஓட்டெடுப்பு நடந்ததுதீர்மானத்திற்கு ஆதரவாக 97 ஓட்டுகளும், எதிராக 122 ஓட்டுகளும் பதிவாகின..