Wednesday, 22 March 2017
உத்தம பிரதேசமாக மாறும் உ.பி.,- யோகி

லோக்சபா எம்.பி.,யான ஆதித்யநாத், உ.பி., முதல்வராக பதவியேற்றுள்ளார். எம்.பி., பதவியை ராஜினாமா செய்யும் முன், லோக்சபாவில் இன்று அவர் பேசியதாவது: மோடி உலகம் அறிந்த தலைவராக உருவெடுத்துள்ளார். உ.பி.,யில் சாதி, மத கலவரத்தை அனுமதிக்க மாட்டோம். ஊழலுக்கு இடம் அளிக்க மாட்டோம். நான் தற்போது உ.பி., மாநில வளர்ச்சிக்காக பாடுபட போகிறேன்.
ராகுலை விட இளையவன் :
நான், அகிலேஷ்சை விட ஒரு வயது மூத்தவன்; ராகுலை விட வயதில் இளையவன். என்னால் நல்ல வளர்ச்சியை தர முடியும். உத்தரபிரதேசத்தை உத்தம பிரதேசமாக மாற்றப்போகிறேன். உ .பி., மக்கள் வளர்ச்சிக்காக ஓட்டு அளித்துள்ளனர். மோடியின் கனவை உ.பி.,யில் நிறைவேற்றுவோம். இங்கு அனைத்தும் வெளிப்படையாகவே இருக்கும். சிறந்த நிர்வாகமே எனது குறிக்கோள். ஏழை மக்களின் நலனுக்கே முதலிடம் கொடுப்போம். இவ்வாறு யோகி பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் யோசனை வரவேற்கத்தக்கது. இப்பிரச்னை நல்ல முறையில் முடிவுக்கு வர நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்றார்.
விவசாயிகள் கடன் தள்ளுபடி : எஸ்.பி.ஐ., அச்சம்

வாக்குறுதி:
உ.பி., சட்டசபை தேர்தலின் போது விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என பா.ஜ., அறிவித்தது. தொடர்ந்து, அக்கட்சி சட்டசபை தேர்தலி்ல அமோக வெற்றி பெற்று, முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றுள்ளார். இதனையடுத்து விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
ஆய்வறிக்கை:
இந்நிலையில் விவசாயிகள் கடன் தள்ளுபடி குறித்து எஸ்.பி.ஐ., ஆய்வு நடத்தியது.
அதில், கடந்த 2016ல் உத்தர பிரதேசத்தில் விவசாயிகளுக்கு சராசரியாக ஒரு விவசாயிக்கு ரூ.1.34 லட்சம் என்ற அளவில் மொத்தம் ரூ.86,241. 20 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 2.5 ஏக்கர் மற்றும் அதற்கு குறைவாக வைத்துள்ள சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு 31 சதவீதம் கடன் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மட்டும் ரூ.27,419.70 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கடன் தள்ளுபடி என மாநில அரசு அறிவித்தால், இத்தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும். இதற்காக மாநில அரசு அத்தொகையை வங்கிகளுக்கு திருப்ப செலுத்த வேண்டியிருக்கும். 2016-17 நிதியாண்டில் உ.பி., அரசின் வருமானம் ரூ.3,40,255.24 கோடியாகும். ரூ.27,419.70 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யும் போது, மாநிலத்தின் வருவாயில் இது 8 சதவீதமாகும். இதனால், மாநில அரசிற்கு சில நெருக்கடிகள் ஏற்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary:
NEW DELHI: Uttar Pradesh government Rs .27,429 crore farmers debt cancellation, if the bank has a loss.
Friday, 3 March 2017
உ.பி., தேர்தலில்160 கோடீஸ்வரர், 126 கிரிமினல்கள்

கோடீஸ்வர வேட்பாளர்கள் :
பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 35 பேரும், பா.ஜ.,வை சேர்ந்த 33 பேரும், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த 28 பேரும், காங்கிரசை சேர்ந்த 6 பேரும், ராஷ்டிரிய லோக்தள் கட்சியைச் சேர்ந்த 8 பேரும், சுயேட்சைகள் 23 பேரும் தங்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
கிரிமினல் பின்னணி கொண்ட 126 பேரில் 109 பேர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கிரிமினல் வேட்பாளர்கள் :
பா.ஜ.,வை சேர்ந்த 18 பேர் மீதும், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 24 பேர் மீதும், ராஷ்டிரிய லோக்தள் கட்சியைச் சேர்ந்த 5 பேர் மீதும், சமாஜ்வாதியை சேர்ந்த 15 பேர் மீதும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 4 பேர் மீதும், சுயேட்சைகள் 22 பேர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன.
மொத்தமுள்ள 635 வேட்பாளர்களில் 229 பேர் 5 முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்கள். 338 பேர் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 205 வேட்பாளர்கள் 51 முதல் 80 வயதுடையவர்கள் ஆகும்.
English summary:
Lucknow: Uttar Pradesh Assembly elections for the 6th stage tomorrow (March 03) will be held. 635 candidates contesting the 160 billionaires. 126 people accused in a criminal case.
Monday, 20 February 2017
உ.பி., 3-ம் கட்ட தேர்தல்: 61 சதவீத ஓட்டுப்பதிவு
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று(பிப்.,19) நடந்த 3வது கட்ட சட்டசபை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 61.16 சதவீத ஓட்டுப்பதிவு பதிவானது.

உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில், கடந்த பிப்., 11, 15-ம் தேதிகளில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் நடந்தது. மொத்தம் 140 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
61 சதவீத ஓட்டுப்பதிவு:
இந்நிலையில், 11 மாவட்டங்களில் 69 தொகுதிகளுக்கான 3வது கட்ட தேர்தல் இன்று (பிப்.,19) நடந்தது. இதில், 826 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாலை 5 மணி நிலவரப்படி 61.16 சதவீதம் ஓட்டுப்பதிவானதாக உ.பி., மாநில தலைமை தேர்தல் அதிகாரி வெங்கடேஷன் தெரிவித்தார். அமைதி முடிந்த தேர்தல், இறுதி நிலவரப்படி 63 சதவீதமாக உயரும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரவித்தார்.

உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில், கடந்த பிப்., 11, 15-ம் தேதிகளில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் நடந்தது. மொத்தம் 140 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
61 சதவீத ஓட்டுப்பதிவு:
இந்நிலையில், 11 மாவட்டங்களில் 69 தொகுதிகளுக்கான 3வது கட்ட தேர்தல் இன்று (பிப்.,19) நடந்தது. இதில், 826 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாலை 5 மணி நிலவரப்படி 61.16 சதவீதம் ஓட்டுப்பதிவானதாக உ.பி., மாநில தலைமை தேர்தல் அதிகாரி வெங்கடேஷன் தெரிவித்தார். அமைதி முடிந்த தேர்தல், இறுதி நிலவரப்படி 63 சதவீதமாக உயரும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரவித்தார்.
Sunday, 5 February 2017
உ.பி.,யில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தோற்கடிக்கப்படனும்
பதாயூன்:சமாஜவாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் தோற்கடிக்கப்பட்டால்தான், உத்தரப் பிரதேசத்துக்கு நல்ல நாள்கள் வரும்' என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
உத்தரப் பிரதேச மாநிலம், பதாயூனில் சனிக்கிழமை நடைபெற்ற பா.ஜ..,பிரசாரக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:சமாஜ்வாதி தலைவர் அகிலேஷும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் நல்ல நாள்கள் எப்போது வரும்? என்று கேள்வியெழுப்பி வருகின்றனர். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில், சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் தோற்கடிக்கப்பட்டால்தான், இந்த மாநிலத்துக்கு நல்ல நாள்கள் வரும் என்று மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
ராகுல் மீது தாக்கு: ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் தன்னை பேச அனுமதித்தால் பூகம்பமே வரும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார். ஆனால், அவர் பேசினால் பூகம்பம் அல்ல, காற்றுகூட வராது. தன்னிடம் ஏதாவது உருப்படியான தகவல்கள் இருந்தால், ராகுல் தாராளமாகப் பேசலாம்.
பஞ்சரான சைக்கிள்: தனது கடின உழைப்பால் சமாஜ்வாதி கட்சியை நிறுவியவரான முலாயம் சிங், சமாஜ்வாதி - காங்கிரஸ் தேர்தல் கூட்டணியை எதிர்க்கிறார். ஆனால், அவரது மகன் அகிலேஷோ, பஞ்சரான "சைக்கிளில்' அமர்ந்து கொண்டு, காங்கிரஸுடன் கைகோத்துள்ளார்.பகுஜன் சமாஜ் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படாது. மாநிலத்தில் கூலிப்படையினரின் ஆதிக்கத்தை ஒடுக்க வேண்டுமெனில், பா.ஜ.க.,வுக்கு ஓட்டளியுங்கள் என்றார் .
English Summary:
Patayun: SP, BSP failed in both parties, Uttar Pradesh will have good days, "Union Home Minister Rajnath Singh said.
உத்தரப் பிரதேச மாநிலம், பதாயூனில் சனிக்கிழமை நடைபெற்ற பா.ஜ..,பிரசாரக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:சமாஜ்வாதி தலைவர் அகிலேஷும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் நல்ல நாள்கள் எப்போது வரும்? என்று கேள்வியெழுப்பி வருகின்றனர். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில், சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் தோற்கடிக்கப்பட்டால்தான், இந்த மாநிலத்துக்கு நல்ல நாள்கள் வரும் என்று மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
ராகுல் மீது தாக்கு: ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் தன்னை பேச அனுமதித்தால் பூகம்பமே வரும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார். ஆனால், அவர் பேசினால் பூகம்பம் அல்ல, காற்றுகூட வராது. தன்னிடம் ஏதாவது உருப்படியான தகவல்கள் இருந்தால், ராகுல் தாராளமாகப் பேசலாம்.
பஞ்சரான சைக்கிள்: தனது கடின உழைப்பால் சமாஜ்வாதி கட்சியை நிறுவியவரான முலாயம் சிங், சமாஜ்வாதி - காங்கிரஸ் தேர்தல் கூட்டணியை எதிர்க்கிறார். ஆனால், அவரது மகன் அகிலேஷோ, பஞ்சரான "சைக்கிளில்' அமர்ந்து கொண்டு, காங்கிரஸுடன் கைகோத்துள்ளார்.பகுஜன் சமாஜ் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படாது. மாநிலத்தில் கூலிப்படையினரின் ஆதிக்கத்தை ஒடுக்க வேண்டுமெனில், பா.ஜ.க.,வுக்கு ஓட்டளியுங்கள் என்றார் .
English Summary:
Patayun: SP, BSP failed in both parties, Uttar Pradesh will have good days, "Union Home Minister Rajnath Singh said.
வளர்ச்சிக்கு தடையாக உள்ள சமாஜ்வாடி அரசு: ஹேம மாலினி குற்றச்சாட்டு

பிரசாரக் கூட்டங்களில் ஹேம மாலினி பேசியதாவது:-ஏராளமான வளர்ச்சிப் பணிகளை கொண்டு வருவதற்கு நாங்கள் முன்வந்தோம். ஆனால், சமாஜ்வாடி அரசானது. எங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை. குறிப்பாக, மதுரா தொகுதிக்கான வளர்ச்சித் திட்டங்களை அனுப்பினோம். ஒன்று பணிகளை கிடப்பில் போடுகிறார்கள் அல்லது பணிகளை மிகவும் தாமதமாக மேற்கொள்கிறார்கள்.
ஒரே கட்சி ஆட்சி:
மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால், கூடுதல் ஒத்துழைப்பு கிடைப்பதுடன், வளர்ச்சித் திட்டப் பணிகளும் வேகமாக நடைபெறும்.பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணம் வைத்திருப்போருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது. சாமான்ய மனிதன் பாதிக்கப்படவில்லை என்றார்.
English summary:
Mathura: Mathura in Uttar Pradesh state government as an obstacle to the development of Samaj Wadi MP Hema Malini In the ongoing campaign for the legislative elections in the territory upcoming crime, Mathura constituency BJP MP Hema Malini, BJP is contesting in math and Baldev blocks In favor of the candidates campaigned yesterday.
இந்தியாவுடன் பேச்சு: பாக்., நம்பிக்கை

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே நல்லுறவு சீர்கெட்டு, அமைதி பேச்சும் முடங்கியுள்ளது.
இந்நிலையில், 'இந்தியாவுடன் மீண்டும் பேச்சு துவங்கும்' என, பாகிஸ்தான் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, பாக்., அமைச்சர், அசன் இக்பால், இதுகுறித்து கூறியதாவது: இந்தியாவுடன் நல்லுறவை பேண வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அந்நாட்டுடன் நிலவி வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம். உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில், சட்டசபை தேர்தல் நடக்கிறது; அதன் பின், பேச்சுவார்த்தைக்கான சூழல் உருவாகும் என நம்புகிறோம். பாக்., - சீனா இடையே சரக்கு போக்குவரத்திற்கான சாலை அமைப்பதற்கு, இந்தியா எதிர்ப்பு தெரிவிப்பதை கண்டிக்கிறோம். பாகிஸ்தானின், பொருளாதார வளர்ச்சிக்காக, இந்த சாலை ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
NEW DELHI: Uttar Pradesh assembly elections, the country at the start of peace talks as "Pakistan hopes. Terrorists who are hiding in Pakistan-occupied Kashmir, Jammu - Kashmir are engaged in sabotage. Thus, India - Pakistan relations deteriorated and stalled peace talks.
Friday, 3 February 2017
உ.பி. சட்டசபை தேர்தல்: மீரட்டில் அமித்ஷா நாளை பிரசார பாதயாத்திரை

அமித்ஷா பாதயாத்திரை:
இது குறித்து மாநில பா.ஜ., பொது செயலாளர் விஜய் பகதூர் பதக் கூறியிருப்பதாவது: உ.பி.,மாநிலத்தில் சட்டசபைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. மீரட் தொகுதியில் முதல் கட்டமாக வரும் 11-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இறுதி கட்ட தேர்தல் மார்ச் மாதம் 8-ம் தேதி நடைபெற உள்ளது.
இதையடுத்து பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா நாளை தனது தேர்தல் பிரசார பாதயாத்திரையை துவக்குகிறார். புராணி சுங்கி பகுதியில் துவங்கும் இந்த பாதயாத்திரை டில்லி சாலை மற்றும் சார்தா சாலை வழியாக காந்தகார் பகுதியில் நிறைவடைகிறது.
English summary:
Lucknow: Uttar Pradesh State in Meerut BJP leader Amit Shah Tomorrow campaign undertakes a pilgrimage.
Saturday, 28 January 2017
உ.பி., கோவா, பஞ்சாப்பில் தொங்கு சட்டசபை : கருத்துகணிப்பில் தகவல்

3 ல் தொங்கு சட்டசபை :
ஐந்து மாநில சட்டசபை தேர்தல் பிப்ரவரி 4 ம் தேதி துவங்கி, மார்ச் 8 வரை நடக்க உள்ளது. மார்ச் 11 ம் தேதி தேர்தல் முடிவு வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், தி வீக் பத்திரிக்கை மற்றும் ஹன்சா ஆராய்ச்சி மையம் இணைந்த தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை நடத்தி, முடிவுகளை வெளியிட்டுள்ளன. இதன்படி, உத்தர பிரதேசம், கோவா, பஞ்சாப் மாநிலங்களில் தொங்கு சட்டசபை அமையும். உத்தரகாண்டில் தனிப்பெரும்பான்மை பெற்று பா.ஜ., ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம் 5 மாநில தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, முடிவுகளில் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு எத்தனை இடங்கள் :
உ.பி.,யில் மொத்தமுள்ள 403 இடங்களில் பா.ஜ., 192 முதல் 196 இடங்களில் வெற்றி பெறும். அதாவது பெரும்பான்மைக்கு சற்று குறைவான இடங்களையே பெறும். சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணி 178 முதல் 182 இடங்களை பிடிக்கும். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 20 முதல் 24 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும். பஞ்சாப்பை பொறுத்தவரை மொத்தமுள்ள 117 இடங்களில் காங்கிரஸ் 49 முதல் 51 இடங்களை பிடிக்கும். 33 முதல் 35 இடங்களை பிடித்து ஆம்ஆத்மி 2வது இடம் பிடிக்கும். பா.ஜ., கூட்டணி 28 முதல் 30 இடங்களை மட்டுமே பெறும். உத்த ரகாண்டில், தனிபெரும்பான்மையுடன் 70 ல் 37 முதல் 39 இடங்களில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சி அமைக்கும். காங்., 27 முதல் 29 இடங்களை பிடிக்கும். கோவாவில் 40 இடங்களில் பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக 17 முதல் 19 இடங்களை பிடிக்கும். ஆம்ஆத்மி 3 முதல் 5 இடங்களையும், காங்., 11 முதல் 13 இடங்களையும் பிடிக்கும். இவ்வாறு கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
English Summary:
India will be 5 next month's assembly elections in Uttar Pradesh, Goa and Punjab will be a hung assembly. Uttarakhand BJP regime that it will take before the election, a poll has revealed.
நாளை ஒரே மேடையில் ராகுல் - அகிலேஷ் பிரசாரம்
January 28, 2017Assembly election, congress, lucknow, rahul gandhi, samajwadi party, UP chief minister Akhilesh, uttar pradesh


ஒரே மேடையில் அகிலேஷ் -ராகுல் :
உ.பி., சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு பிப்ரவரி 11 ம் தேதி துவங்கி, 7 கட்டங்களாக நடக்க உள்ளது. உ.பி.,யில் காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணி உருவாகி உள்ளதால், நாளை (ஜனவரி 29) நடக்கும் பிரசார கூட்டத்தில் முதல் முறையாக ராகுலும், அகிலேசும் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய உள்ளனர். மேலும் இருவரும் இணைந்து கொடியசைத்து, கூட்டணி பிரசாத்தை துவக்கி வைக்க உள்ளனர்.
அகிலேஷ் நம்பிக்கை :
காங்கிரசுடன் கூட்டணி அமைத்து, தேர்தலை எதிர்கொள்வதால் நிச்சயம் தங்கள் கட்சி 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என அகிலேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராகுல், அகிலேஷ் பங்கேற்கும் இந்த பிரசார கூட்டத்தில் பிரியங்காவும், கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். அதே போல் சமாஜ்வாதி சார்பில் அகிலேஷின் மனைவி டிம்பிளும் இந்த கூட்டத்தில் பேச உள்ளார். உ.பி., தேர்தலில் இந்த பிரசார கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
English Summary:
Lucknow: Uttar Pradesh assembly election Cong., Vice President Rahul, UP Chief Minister and leader of the Samajwadi Party akhilesh, tomorrow are set to the same stage of the election campaign.
Sunday, 22 January 2017
உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி - காங்., கூட்டணி உறுதியானது
January 22, 2017congress, election commission of india, New delhi, samajwadi party, sonia gandhi, UP chief minister Akhilesh, uttar pradesh


English summary:
New Delhi: Samajwadi Party in Uttar Pradesh in the political arena - Congress is assured. Samajwadi Party joined the governing coalition 105 seats allocated to the Congress. SP leader Akhilesh Yadav and Congress President Sonia Gandhi held coalition talks after the firm
Friday, 20 January 2017
உத்தரப்பிரதேசத்தில் பயங்கரம்: பள்ளிப் பேருந்து மீது டிரக் மோதிய விபத்தில் 24 குழந்தைகள் பலி

பேருந்து மீது மோதல்:
உத்தர பிரதேச மாநிலம் எடா மாவட்டத்தில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில், 60 பள்ளிக்குழந்தைகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே தறிகெட்டு ஓடிய டிரக் பேருந்து மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
24 பேர் பலி:
இந்த கோர விபத்தில் பள்ளி குழைந்தைகள் 24 பேர் பலியாகினர். 25 பேர் குழைந்தைகள் படுகாயம் அடைந்தனர். பேருந்தில் பயணம் செய்த பள்ளிக்குழந்தைகள் அனைவரும் 10 முதல் 7 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர். மேலும், பல குழந்தைகள் படுகாயமடைந்ததால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிர விசாரணை:
இந்த கோர சம்பவம் குறித்து எடா நகர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த மாவட்டத்தில் கடும் குளிர் நிலவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால், பள்ளி நிர்வாகம் அந்த உத்தரவை மீறி பள்ளியை திறந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் இரங்கல்:
இதற்கிடையே, இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, “ உத்தர பிரதேச மாநிலம் எடா மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து அறிந்ததும் மிக துயரம் அடைந்தேன். குழந்தைகளை இழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் காயம் அடைந்த குழந்தைகள் விரைவில் குணம் அடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English summary:
Etah - truck collided on the school bus in the state of Uttar Pradesh, more than 24 children lost their lives miserable. Modi condoles the claim incident.
Wednesday, 18 January 2017
உ.பி.,யில் சமாஜ்வாதி - காங்., கூட்டணி

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியதாவது: உ.பி., சட்டசபை தேர்தலில் காங்கிரசும் சமாஜ்வாதியும் இணைந்து எதிர்கொள்ளும். கூட்டணி குறித்த விபரங்கள், தொகுதி பங்கீடு குறித்த தகவல்கள்
இன்னும் இரண்டொரு நாளில் வெளியிடப்படும் என்றார்.
சைக்கிள் சின்னத்தை பெற்ற மகிழ்ச்சியில் உள்ள சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது: காங்கிரசுடன் கூட்டணி தொடர்பான முடிவு இன்னும் இரண்டொரு நாளில் அறிவிக்கப்படும். மதவாத சக்திகளை எதிர்க்கவே காங்கிரசுடன் கூட்டணி வைப்பதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் அகிலேஷ் டில்லி வந்து ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது.
English Summary:
NEW DELHI: Uttar Pradesh assembly elections, with the ruling Samajwadi Party has decided to confront the Congress.
Tuesday, 17 January 2017
அகிலேசை எதிர்த்து களம் காண தயார் : முலாயம் மிரட்டல்
January 17, 2017India, lucknow, mulayam singh yadav, samajwadi party, UP chief minister Akhilesh, uttar pradesh


முலாயம் வேதனை :
சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் சின்னமான சைக்கிள் சின்னம் யாருக்கு என்பது தொடர்பான விசாரணையில் இன்று மாநில தேர்தல் கமிஷன் தீரிப்பளிக்க உள்ளது. இந்நிலையில், லக்னோவில் உள்ள கட்சியின் தலைமை அலுவலத்தில் தனது ஆதரவாளர்களிடையே முலாயம் சிங் பேசினார்.
அப்போது அவர், ராம் கோபால் யாதவின் தாளத்துக்கு எல்லாம் அகிலேஷ் ஆடி வருகிறார். என்னை சந்திக்க வருமாறு மூன்று முறை அழைப்பு விடுத்தும், வீட்டுக்கு வந்த அகிலேஷ் ஒரே ஒரு நிமிடம் காத்திருந்துவிட்டு, வெளியேறி விட்டார்.
போட்டியிட தயார் :
சைக்கிள் சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக தேர்தல் கமிஷன் என்ன தீர்ப்பு அளித்தாலும், என்னையும் தேர்தல் கமிஷன் அளிக்கும் சின்னத்தையும் நீங்கள் ஆதரிக்க வேண்டும். கட்சியையும், சைக்கிள் சின்னத்தையும் காப்பாற்ற என்னால் இயன்றதை எல்லாம் செய்து விட்டேன். ஆனால், எனது பேச்சுக்கு மதிப்பளிக்க அகிலேஷ் தவறிவிட்டால், அவருடன் மோதுவதை தவிர வேறு வழியில்லை. தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிடவும் நான் தயாராக உள்ளேன் என்றார்.
English Summary:
Lucknow: Uttar Pradesh Chief Minister in the Assembly elections, his son was ready to contest against akilecai Samajwadi Party chief Mulayam Singh publicly announced.
Monday, 16 January 2017
உத்தப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் தனித்துப்போட்டி - பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அறிவிப்பு

மோதல் :
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது, முலாயம் சிங் யாதவின் சமாஜ் வாடி கட்சி ஆட்சி செய்கிறது . முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். இந்த கட்சிக்குள் தற்போது கோஷ்டி பூசல் நிலவுகிறது. இதனால் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சமாஜ் வாடி கட்சி வெற்றி பெறுவது சந்தேகமாக உள்ளது.
இதனால் ஆட்சியை பிடிக்க மாயாவதியின் பகுஜன் சமாஜ் , காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள் ஆட்சியை பிடிக்க தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக உள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம் இந்தியாவிலேயே மிகப்பெரும் மாநிலம் ஆகும். அங்கு 403 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் தற்போது 229 எம்.எல்.ஏக்களுடன் சமாஜ் வாடி கட்சி ஆட்சி செய்கிறது.
7 கட்ட தேர்தல் :
உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதம் முதல் வாரம் வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மக்கள் செல்வாக்கு அதிகமுள்ள பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடுகிறது. இது குறித்து அந்த கட்சியின் தலைவர் மாயாவதி நேற்று கூறியதாவது,
பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே தேர்தலில் போட்டியிடுகிறது. சமாஜ் வாடி கட்சியுடன் பாஜ.க ரகசிய கூட்டு வைத்துள்ளது. அவர்கள் கெட்ட நாளை நோக்கியே செல்கிறார்கள்.
காங்கிரசை பற்றி பெரிதும் கவலைப்பட வேண்டாம் . அந்த கட்சி செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் உயிர் வாழுவதைப்போல போராடிக்கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது ஆட்சி செய்யும் சமாஜ் வாடி கட்சியில் தலைவர் முலாயம் சிங், அவரது தம்பி சிவ்பால் யாதவ், ராம் கோபால் யாதவ் முலாயமின் மகனும் முதல்வருமான அகிலேஷ் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் தர வேண்டும் என கடந்த சில நாட்களாக வெளிப்படையாக மோதிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் அந்த கட்சி முலாயம் அணி என்றும், அகிலேஷ் யாதவ் அணி என்றும் உடைந்துள்ளது. இதனால் இரு அணிகளும் கட்சியின் சைக்கிள் சின்னம் தங்களுக்கே அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் நேரில் சென்று கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்த முடிவை எடுக்காமல் தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளது.
English Summary:
Lucknow: Bahujan Samaj Party in Uttar Pradesh state assembly elections run separately. The coalition would not put anyone in that party's leader, Mayawati said emphatically.
Thursday, 5 January 2017
பிப்.,1 ல் பட்ஜெட் தாக்கல் : எதிர்க்கும் எதிர்க்கட்சிகள்

தேர்தலும் பட்ஜெட் தாக்கலும் :
எதிர்க்கட்சிகளின் கோரிக்கை மற்றும் ஜனாதிபதியின் பரிந்துரையை ஏற்று, பட்ஜெட் தாக்கல் தேதியை வழக்கமான பிப்ரவரி இறுதி நாளுக்கு பதிலாக பிப்ரவரி 1 ம் தேதிக்கு மத்திய அரசு மாற்றியது. பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி துவங்கும் எனவும், மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ம் தேதி தாக்கலாகும் எனவும் மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் உ.பி., பஞ்சாப், கோவா, உத்திரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் பிப்ரவரி 4 ம் தேதி துவங்கி, மார்ச் 8 வரை நடக்கும் எனவும், மார்ச் 11 ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படும் எனவும் தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது.
எதிர்க்கட்சிகள் போர்க்கொடி :
பிப்ரவரி 4 ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் 5 மாநில தேர்தலுக்கு முன் பட்ஜெட்டை தாக்கல் செய்யக் கூடாது எனவும், தேர்தல் முடிந்த பிறகே பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன. பிப்ரவரி 4 ம் தேதி தேர்தல் நடக்கும் நிலையில் பிப்ரவரி 1 ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டால் அது தேர்தல் முடிவுகளை பாதிக்கும் என கருத்து தெரிவித்துள்ளன. தேர்தலுக்கு முன் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம்ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக இன்று (ஜனவரி 05) காலை 11 மணிக்கு தலைமை தேர்தல் கமிஷனரை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளன.
English Summary:
NEW DELHI: Uttar Pradesh and Punjab states, including 5 in the first assembly elections will be held on February 4, the Election Commission yesterday (January 04) announced. The elections to be held before the federal budget, the budget and to file the opposition parties have protested on February 1.
Wednesday, 4 January 2017
5 மாநில தேர்தலால் முன்கூட்டியே தாக்கலாகுமா மத்திய பட்ஜெட்?

குழப்பத்தில் எதிர்க்கட்சிகள் :
தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அட்டவணையின்படி பிப்ரவரி 4 ம் தேதி துவங்கி மார்ச் 8 ம் தேதி வரை தேர்தல் நடத்தப்பட உள்ளது. 5 மாநிலங்களில் பதிவான ஓட்டுக்கள் மார்ச் 11 ம் தேதி எண்ணப்பட உள்ளன. ஆனால் பட்ஜெட் கூட்டத்தொடரை ஜனவரி 31 முதல் நடத்தவும், பிப்ரவரி 1 ம் தேதியன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவும் மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
பிப்ரவரி மாதத்தின் கடைசி தேதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முறை பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் சலுகைகள், வரி விதிப்புக்கள் போன்றவை ஏப்ரல் 1 ம் தேதி முதல் அமலுக்கு வருவது வழக்கம். இது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்படும் சட்டசபை தேர்தல்களின் முடிவை பாதிக்கும் என எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியிடம் முறையிட்டன. இதனால் ஜனாதிபதி பரிந்துரையின் பேரில் மத்திய அரசும், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதியை பிப்ரவரி இறுதி நாளுக்கு பதிலாக, பிப்ரவரி 1 ம் தேதிக்கு மாற்றியது. இப்போது முதல் கட்ட தேர்தல் பிப்ரவரி 4 ம் தேதி நடக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளதால் எதிர்க்கட்சிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன.
முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் :
ஆனால் தற்போது பிப்ரவரி 4 ம் தேதி, 5 மாநில தேர்தல் துவங்கும் எனவும், இதற்கான நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதனால் தற்போது முடிவு செய்துள்ள பிப்ரவரி 1 ம் தேதிக்கு முன்னதாகவே மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது பட்ஜெட் உடன் சேர்த்தே ரயில்வே பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளதால் பார்லி., பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கும் ஜனவரி 31ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் அல்லது பட்ஜெட் கூட்டத்தொடர் தேதியும் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.
English summary:
NEW DELHI: Uttar Pradesh, Goa, including 5 of the Election Commission today announced the schedule for the state assembly elections. Before the commencement of the election are expected to be filed in the federal budget.
Tuesday, 3 January 2017
உ.பி.யில் பா.ஜ.கவுக்கு பெரும் பான்மை ஆதரவு அளிக்க லக்னோ கூட்டத்தில் பிரதமர் மோடி வேண்டுகோள்

தனது மகனை கட்சியில் பிரபலப்படுத்த வேண்டும் என நினைக்கும் ஒரு கட்சி இந்த மாநிலத்தில் எந்த ஒரு பெரும் வெற்றியையும் பெற முடியவில்லை. மற்றொரு கட்சி தனது கறுப்பு பணத்தை வங்கிகளில் பாதுகாப்பதில் மும்முரமாக உள்ளது. 3வது கட்சி தனது குடும்பத்தை பாதுகாக்க பாடுபடுகிறது.¬¬¬ ஒவ்வொரு கட்சியும் தங்கள் நலனில் அக்கறை காட்டி வரும் நிலையில் இந்த மாநிலத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறையுடன் பா.ஜ.க உள்ளது. இந்த கட்சியால் அது முடியும்.கடந்த 14 ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சி உத்தரப்பிரதேச மாநிலத்தில் இல்லை. இது வன வாச காலமாகவே கருத வேண்டும். அந்த வன வாச காலம் முடிந்து விட்டது.
உத்தரப்பிரதேசத்தில் , 2017ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முழு பெரும் பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் உங்களிடம் எதிர் பார்க்கிறேன். பா.ஜ.க பெரும் வெற்றி பெற நீங்கள் வாக்களியுங்கள். மாநிலத்தில் முழு மாற்றம் தேவை. கடந்த 2014ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலின் போது ஏற்பட்ட மகத்தான மாற்றத்தைப்போல, உ.பி மாநில மக்களும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த தங்களது வாக்குகளை அளிக்க வேண்டும். உத்தரப்பிரதேச மாநிலத்தில் எதனையும் அரை குறையாக விடாதீர்கள். முழு சக்தியும் டெல்லியில் உங்களுடன் உள்ளது. நான் கறுப்பு பணம், ஊழல் ஒழிப்பு குறித்து பேசுகிறேன் . ஆனால் சிலர் வேறு விதமாக கோஷம் போடுகிறார்கள். இது குறித்து நாட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டும். லக் னோவில் இங்கு நடக்கும் கூட்டத்தில் மிகப்பெரும் அளவில் மக்கள் கூடியிருக்கிறீர்கள். இதைப்போன்ற கூட்டத்தைப்போன்ற கட்சி கூட்டத்தை வேறு எங்கும் பார்த்தது இல்லை.உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி அமைக்க முழு பெரும் பான்மை பெற வாக்களியுங்கள் . இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
English summary:
Lucknow - Uttar Pradesh BJP to form a government that would give majority support to a meeting in Lucknow, Modi appealed to the people of the state.
Friday, 30 December 2016
தந்தைக்கு போட்டியாக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டார் அகிலேஷ்

புறக்கணிப்பு:
உ.பி.,யில், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். அவருக்கும், அவரது சித்தப்பாவும், உ.பி., மாநில, சமாஜ்வாதி கட்சி தலைவருமான, சிவ்பால் யாதவுக்கும், அதிகாரப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மொத்தம் உள்ள, 403 தொகுதிகளில், 325 தொகுதிகளுக்கான, சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் பட்டியலை, முலாயம் சிங், நேற்று முன்தினம்(டிச.,28) வெளியிட்டார். இதில், அகிலேஷின் நெருங்கிய ஆதரவாளர்களில் பலர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
அதிருப்தி:
ஆனால், கட்சி விரோத நடவடிக்கை காரணமாக, அகிலேஷால் நீக்கப்பட்ட, சிவ்பால் யாதவ் உள்ளிட்ட, 10 அமைச்சர்களின் பெயர்கள், பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதனால், மனம் நொந்துபோன அகிலேஷ், தன் இல்லத்தில், ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். இதன்பின், கட்சித் தலைவர், முலாயம் சிங்கை சந்தித்து, தன் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டது குறித்து, முதல்வர், அகிலேஷ் யாதவ், அதிருப்தி தெரிவித்தார்.
சரியான போட்டி:
இந்நிலையில் முலாயம் சிங் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலுக்கு போட்டியாக, அகிலேஷ் யாதவும், 235 வேட்பாளர்கள் அடங்கிய தனி வேட்பாளர் பட்டியலை, அதிரடியாக வெளியிட்டார். இதில் தன் ஆதரவாளர்களுக்கு அதிக இடம் ஒதுக்கியுள்ளார். இதனையடுத்து சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே, உ.பி., அரசியல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
English summary:
Lucknow: Uttar Pradesh Chief Minister Akhilesh Yadav, Samajwadi Party senator from rival father released a list of 235 candidates.