
கலைத்துறையில் அவர் பதித்த தடங்கள் அழகானவை; அழியாதவை. அவரைத் தவிர யாரும் ஆடமுடியாது என்ற நடனங்களும், அவரைத் தவிர யாரும் நடிக்க முடியாது என்ற காட்சிகளும் அவருக்கே சொந்தம். 'எங்கிருந்தோ வந்தாள்' படத்தில் அவர் காட்டிய குணச்சித்திரம் கொண்டாடத்தக்கது. 'மேஜர் சந்திரகாந்த்' படத்தில் இறந்ததாக அவர் நடித்தபோது மரணத்திற்கே ஒரு செளந்தர்ய ஒய்யாரம் தந்திருப்பார். 'ஆயிரத்தில் ஒருவனில்' அவரது அழகு சந்தனச் சிலையா சந்திர கலையா என்று சொக்க வைக்கும்.சந்தியாவின் மகளாய்ப் பிறந்தார்; இந்தியாவின் மகளாய் மறைந்தார். எல்லோர்க்கும் வாய்க்காது இந்தச் சரித்திரம். அவர் உயிரோடிருந்தபோது இந்தப் புகழ்மொழியைச் சொல்லமுடியாத சூழ்நிலையில் இருந்த நான், அவர் இறந்த பிறகு சொல்கிறேனே என்ற துயரம் இறப்பின் வலியை இருமடங்கு செய்கிறது.மறைந்தும் மறையாத கலையரசிக்கு ஒரு ரசிகனாக என் அஞ்சலிப் பூக்களை அள்ளித் தெளிக்கிறேன். எனக்கே ஆறுதல் தேவைப்படும்போது நான் யாருக்கு ஆறுதல் சொல்வது? என தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் அஞ்சலி:
நடிகர்களும் ஜெ., உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் விஜய், நடிகர் பிரபு அவரது மகன் விக்ரம் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகியோர் ஜெ., உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இயக்குநர்மற்றும் நடிகர் பாக்யராஜ் ஜெ., உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். நடிகர் சரத்குமார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நடிகர் மன்சூர் அலிகான் அஞ்சலி செலுத்தினார். இசையமைப்பாளர் இளையராஜா ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். நடிகர் சங்கம் சார்பில், நாசர், கார்த்தி, பொன்வண்ணன் ஆகியோரும், நடிகர்கள் கவுண்டமணி, ஓய்.ஜி. மகேந்திரன், இயக்குநர் பி.வாசு ஆகியோரும் மலரஞ்சலி செலுத்தினர். இசைக்கலைஞர் வீணை காயத்திரியும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
English Summary:
Chief Minister Jayalalithaa to pay tribute to the death of the poet published a poem expressing grief cleverer: she with the political history of art, and has been able to stop death