Tuesday, 10 October 2023
Monday, 9 October 2023
தமிழகத்தில் எம்.பி தொகுதிகளைக் குறைக்கத் திட்டமா? - ஸ்டாலினின் கொந்தளிப்புக்குப் பின்னால்?!
நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதென்று மோடி அரசு முடிவுசெய்திருப்பதாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அரசியல் வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது. அதை உறுதிசெய்யும் வகையில், நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தில் மக்களவையில் 888 இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தொகுதி மறுவரையறை செய்வதற்கான திட்டமும் மத்திய அரசிடம் இருக்கிறது. மோடி
நடந்து முடிந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால், தொகுதி மறுவரையறைக்குப் பிறகுதான் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முடியும் என்று மத்திய பா.ஜ.க அரசு கூறிவிட்டது. அப்படியென்றால், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக இந்தியா முழுவதும் தொகுதி மறுவரையறைப் பணிகளை மேற்கொள்வதில் மத்திய பா.ஜ.க அரசு உறுதியாக இருப்பது தெளிவாகியிருக்கிறது.
சிக்கல் என்னவென்றால், மக்களவைத் தொகுதி எண்ணிக்கை அதிகரிக்கும்பட்சத்தில் உ.பி உள்ளிட்ட வட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை உயரவும், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையவும் வாய்ப்பு இருக்கிறது என்பதுதான். எனவே, மத்திய பா.ஜ.க அரசின் இந்த முடிவு தென் மாநிலங்களின் அரசியல் கட்சிகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்டாலின்
இந்த நிலையில்தான், தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கப்போகிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கொந்தளித்திருக்கிறார். தஞ்சாவூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா என்ற நிகழ்ச்சியில் ஸ்டாலின் பங்கேற்றார்.
அப்போது பேசிய ஸ்டாலின், ‘தமிழ்நாட்டின் நாடாளுமன்ற மக்களாட்சி உரிமைக்குக் கேடு விளைவிக்க முயல்கிறார்கள். மக்கள்தொகை குறைந்துவிட்டது என்று சொல்லி, நாடாளுமன்றத் தொகுதியின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான சதியை அரங்கேற்றப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்தியிருக்கிறோம். அதற்குத் தண்டனையாக, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கப் போகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து 39 எம்.பி-க்கள் செல்கிறார்கள் என்றால், நமது உரிமைகளை எடுத்துச் சொல்லவும், உரிமைகளை நிலைநாட்டவுமே செல்கிறார்கள். இந்த எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமே தவிர எக்காரணம் கொண்டும் குறையக் கூடாது’ என்றார் ஸ்டாலின்.நாடாளுமன்றம்
ஸ்டாலின் மேலும் பேசுகையில், ‘மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டையும் பா.ஜ.க அரசு முழு ஈடுபாட்டுடன் கொண்டு வரவில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்தபிறகு, தொகுதி மறுவரையறை முடிந்த பிறகு என்று சொல்வதே இதை நிறைவேற்றாமல் இருக்கும் தந்திரம்தான். குறிப்பாக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மகளிர் இட ஒதுக்கீட்டை வழங்க மறுப்பது, பா.ஜ.க-வின் உயர் வகுப்பு மனோபாவம். காலப்போக்கில் பட்டியலின இட ஒதுக்கீட்டையும் காலி செய்துவிடும் ஆபத்தும் இதில் இருக்கிறது’ என்றார் ஸ்டாலின்.பற்றவைத்த ஆளுநர் ரவி... பாய்ந்த திமுக! - நாயக்கனேரி ஊராட்சிமன்றப் பிரச்னையும், பின்னணியும்!
அதாவது, 2026-ம் ஆண்டுக்குப் பிறகு, மக்கள்தொகையின் அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படவிருக்கிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. தொகுதி மறுவரையறைக்குப் பிறகு, தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். உத்தரப்பிரதேசம் உட்பட வட மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
அந்த வகையில், உத்தரப்பிரதேசத்துக்கு 11 மக்களவைத் தொகுதிகள் கூடுதலாகக் கிடைக்கும். தமிழகத்தில் எட்டு மக்களவைத் தொகுதிகள் வரை குறைந்து மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 31 ஆக மாறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, 42 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 34 ஆகக் குறையலாம் என்று சொல்லப்படுகிறது.நாடாளுமன்றம் - மோடி
கேரளாவில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 20-லிருந்து 12-ஆகக் குறையலாம் என்றும், கர்நாடகாவில் மக்களவைத் தொகுதிகள் 28-லிருந்து 26-ஆகக் குறையலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே வேளையில், உ.பி-க்கு 11 தொகுதிகளும், பீகாருக்கு 10 தொகுதிகளும், ராஜஸ்தானுக்கு ஆறு தொகுதிகளும், மத்தியப் பிரதேசத்துக்கு நான்கு தொகுதிகளும், குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், டெல்லி, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதி அதிகரிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு, நியாயமான பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்றும், தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது என்றும் வலுவான குரல்கள் தென் மாநிலங்களிலிருந்து எழுந்திருக்கின்றன. அந்த வகையில், தொகுதிகள் குறைப்புக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் வலுவாகக் குரல் எழுப்பியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
http://dlvr.it/SxB1SS
நடந்து முடிந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால், தொகுதி மறுவரையறைக்குப் பிறகுதான் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முடியும் என்று மத்திய பா.ஜ.க அரசு கூறிவிட்டது. அப்படியென்றால், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக இந்தியா முழுவதும் தொகுதி மறுவரையறைப் பணிகளை மேற்கொள்வதில் மத்திய பா.ஜ.க அரசு உறுதியாக இருப்பது தெளிவாகியிருக்கிறது.
சிக்கல் என்னவென்றால், மக்களவைத் தொகுதி எண்ணிக்கை அதிகரிக்கும்பட்சத்தில் உ.பி உள்ளிட்ட வட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை உயரவும், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையவும் வாய்ப்பு இருக்கிறது என்பதுதான். எனவே, மத்திய பா.ஜ.க அரசின் இந்த முடிவு தென் மாநிலங்களின் அரசியல் கட்சிகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்டாலின்
இந்த நிலையில்தான், தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கப்போகிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கொந்தளித்திருக்கிறார். தஞ்சாவூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா என்ற நிகழ்ச்சியில் ஸ்டாலின் பங்கேற்றார்.
அப்போது பேசிய ஸ்டாலின், ‘தமிழ்நாட்டின் நாடாளுமன்ற மக்களாட்சி உரிமைக்குக் கேடு விளைவிக்க முயல்கிறார்கள். மக்கள்தொகை குறைந்துவிட்டது என்று சொல்லி, நாடாளுமன்றத் தொகுதியின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான சதியை அரங்கேற்றப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்தியிருக்கிறோம். அதற்குத் தண்டனையாக, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கப் போகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து 39 எம்.பி-க்கள் செல்கிறார்கள் என்றால், நமது உரிமைகளை எடுத்துச் சொல்லவும், உரிமைகளை நிலைநாட்டவுமே செல்கிறார்கள். இந்த எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமே தவிர எக்காரணம் கொண்டும் குறையக் கூடாது’ என்றார் ஸ்டாலின்.நாடாளுமன்றம்
ஸ்டாலின் மேலும் பேசுகையில், ‘மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டையும் பா.ஜ.க அரசு முழு ஈடுபாட்டுடன் கொண்டு வரவில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்தபிறகு, தொகுதி மறுவரையறை முடிந்த பிறகு என்று சொல்வதே இதை நிறைவேற்றாமல் இருக்கும் தந்திரம்தான். குறிப்பாக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மகளிர் இட ஒதுக்கீட்டை வழங்க மறுப்பது, பா.ஜ.க-வின் உயர் வகுப்பு மனோபாவம். காலப்போக்கில் பட்டியலின இட ஒதுக்கீட்டையும் காலி செய்துவிடும் ஆபத்தும் இதில் இருக்கிறது’ என்றார் ஸ்டாலின்.பற்றவைத்த ஆளுநர் ரவி... பாய்ந்த திமுக! - நாயக்கனேரி ஊராட்சிமன்றப் பிரச்னையும், பின்னணியும்!
அதாவது, 2026-ம் ஆண்டுக்குப் பிறகு, மக்கள்தொகையின் அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படவிருக்கிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. தொகுதி மறுவரையறைக்குப் பிறகு, தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். உத்தரப்பிரதேசம் உட்பட வட மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
அந்த வகையில், உத்தரப்பிரதேசத்துக்கு 11 மக்களவைத் தொகுதிகள் கூடுதலாகக் கிடைக்கும். தமிழகத்தில் எட்டு மக்களவைத் தொகுதிகள் வரை குறைந்து மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 31 ஆக மாறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, 42 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 34 ஆகக் குறையலாம் என்று சொல்லப்படுகிறது.நாடாளுமன்றம் - மோடி
கேரளாவில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 20-லிருந்து 12-ஆகக் குறையலாம் என்றும், கர்நாடகாவில் மக்களவைத் தொகுதிகள் 28-லிருந்து 26-ஆகக் குறையலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே வேளையில், உ.பி-க்கு 11 தொகுதிகளும், பீகாருக்கு 10 தொகுதிகளும், ராஜஸ்தானுக்கு ஆறு தொகுதிகளும், மத்தியப் பிரதேசத்துக்கு நான்கு தொகுதிகளும், குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், டெல்லி, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதி அதிகரிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு, நியாயமான பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்றும், தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது என்றும் வலுவான குரல்கள் தென் மாநிலங்களிலிருந்து எழுந்திருக்கின்றன. அந்த வகையில், தொகுதிகள் குறைப்புக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் வலுவாகக் குரல் எழுப்பியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
http://dlvr.it/SxB1SS
Sunday, 8 October 2023
LEO: `தெறிக்கவிட்ட விஜய் ரசிகர்கள்... நொறுக்கப்பட்ட ரோகிணி தியேட்டர்!' - யார்மீது தவறு?!
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் `லியோ' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. தற்போதுவரையில் யூடியூபில் மட்டும் 3.7 கோடி பார்வைகளைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. அதேநேரம் அந்த ட்ரெய்லரில் விஜய் பேசியிருக்கும் கெட்ட வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தி, எதிர்ப்புகளையும் பெற்றுவருகிறது. லியோ
இந்த நிலையில், ட்ரெய்லர் வெளியான அக்டோபர் 5-ம் தேதி மாலை 6:30 மணிக்கு சென்னை கோயம்பேட்டிலுள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுக்கான சிறப்பு `ட்ரெய்லர் காட்சி' திரையிடப்பட்டது. இதைக் காண்பதற்காக விஜய்யின் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாகத் திரையரங்கை நோக்கிப் படையெடுத்தனர். திரையரங்கினுள் `லியோ’ ட்ரெய்லர் வெளியானபோது, மெர்சலான விஜய் ரசிகர்கள் கத்தி, ஆரவாரம் செய்தனர். அதில் வெறித்தனமான பல விஜய் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் திரையரங்கின் இருக்கைகள்மீது ஏறிக் குதித்து நடனமாடினர். இதனால் 200-க்கும் மேற்பட்ட இருக்கைகள் சேதமடைந்தன. இந்தச் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. பலரும் விஜய் ரசிகர்ள் செய்த இந்தச் சம்பத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். Leo Trailer: 'லியோ' படத்தின் ட்ரெய்லர் இதோ!
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வல அனுமதி தொடர்பான ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பேசிய நீதிபதி ஜெயச்சந்திரன், `` `லியோ’ திரைப்பட ட்ரெய்லர் வெளியிட்டபோது ரோகிணி திரையரங்கம் சேதப்படுத்தப்பட்டதற்கும், ஏற்கெனவே ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் பாதுகாப்பு உள்ளிட்ட குளறுபடிகள் ஏற்பட்டதற்கும் காவல்துறையினரின் தவறான கையாளுதலே காரணம்" என அதிருப்தி தெரிவித்தார். மேலும், ``இது போன்ற நிகழ்வுகளுக்கு பார்க்கிங்கில் ஸ்க்ரீன் அமைத்து, தேவையான பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளுடன் காவல்துறையினர் ரசிகர்களைக் கையாண்டிருந்தால் இப்படியான ஒரு சம்பவம் நடந்திருக்காது. ஆகவே, இது மாதிரியான நேரங்களில் காவல்துறை உரிய அனுமதி வழங்கி, எந்த ஒரு சேதமும் ஏற்படாத வகையில் பாதுகாப்பும் வழங்க வேண்டும்" என அறிவுறுத்தினார்.விஜய் ரசிகர்கள்
பின்னர், இதற்கு விளக்கமளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, `` `லியோ’ ட்ரெய்லரை ரோகிணி திரையரங்குக்கு வெளியில் திரையிடுவது தொடர்பாக அனுமதி கேட்டு எந்த விண்ணப்பமும் எங்களுக்கு வரவில்லை. அனுமதி கேட்டிருந்தால் பரிசீலிக்கப்பட்டிருக்கும். அதேநேரம், திரையரங்கினுள்ளே ட்ரெய்லர் திரையிட எந்தவித அனுமதியும் பெறத் தேவையில்லை" என்றார்.
மேலும், ``ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிகளின்போது போலி டிக்கெட்டுகள் மூலமாக ரசிகர்கள் குவிந்ததுபோல, `லியோ’ படத்தின் இசை வெளியீட்டின்போது நடந்து விடாமல் இருக்க கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. இதனால், அந்த நிகழ்ச்சியை, படத் தயாரிப்பு நிறுவனம் தாமாகவே ரத்துசெய்துவிட்டது. எனவே, அதற்கும் காவல்துறைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.விஜய்: `லியோ' இசை வெளியீட்டு விழா ரத்தும், அரசியல் பேச்சுகளும்! | ஒரு பார்வை
திரையரங்கில் இருக்கைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக எந்தப் புகாரும் இதுவரை வரவில்லை. புகார் இல்லாமல் நடவடிக்கை எடுத்தால் வேண்டுமென்றே விஜய் ரசிகர்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும். காவல்துறையைப் பொறுத்தவரை எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி மறுப்பதில்லை" என்று விளக்கம் அளித்தார்.சென்னை உயர் நீதிமன்றம்
இந்த நிலையில், விஜய் ரசிகர்களின் செயல்பாட்டுக்குக் கண்டனம் தெரிவித்து திரைப்பட விமர்சகர்கள், பிற நடிகர்களின் ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துவருகின்றனர். மேலும் சிலர், `விஜய், ரசிகர்கள் சார்பில் இந்தச் சம்பவத்துக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்' எனக் கோரிவருகின்றனர். இந்த நிலையில் ரோகிணி தியேட்டரின் உரிமையாளரைத் தொடர்புகொண்டு நடிகர் விஜய் வருத்தம் தெரிவித்ததாக உறுதிபடுத்தப்படாத ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.லியோ
என்ன இருந்தாலும், வரும் அக்டோபர் 19-ம் தேதி வெளியாகவிருக்கும் `லியோ' படத்தை ரசிகர்கள் தியேட்டரில்தான் பார்க்கப்போகிறார்கள். தாங்கள் அமர்ந்து பார்க்கப்போகும் தியேட்டரை, தாங்களே சேதப்படுத்தினால் யாருக்கு நஷ்டம்... இதைப் புரிந்துகொண்டு அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் கட்டுக்கோப்பாகச் செயல்பட வேண்டும். சம்பந்தப்பட்ட நடிகர்களும், தங்களின் ரசிகர்களுக்கு நன்னடத்தையை அறிவுறுத்த வேண்டும். அதேபோல தீவிர ரசிகர்கள் ஒரே இடத்தில் குழுமினால் என்ன மாதிரியான அசாதாரண சூழல் நிகழும் என்பதை உணர்ந்து முன்கூட்டியே காவல்துறை பாதுகாப்பு வேண்டி திரையரங்க நிர்வாகம் காவல் நிலையத்தை அணுக வேண்டும். தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதைப்போல, மூன்று தரப்பினரும் இவற்றை உணர்ந்து இனிவரும் காலங்களிலாவது முறையாகச் செயல்படவேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
LEO Audio Launch: "அரசியல் காரணமில்லை!"- `லியோ' ஆடியோ லாஞ்ச் ரத்து; படக்குழு சொல்லும் காரணம் என்ன?
http://dlvr.it/Sx8DRL
இந்த நிலையில், ட்ரெய்லர் வெளியான அக்டோபர் 5-ம் தேதி மாலை 6:30 மணிக்கு சென்னை கோயம்பேட்டிலுள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுக்கான சிறப்பு `ட்ரெய்லர் காட்சி' திரையிடப்பட்டது. இதைக் காண்பதற்காக விஜய்யின் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாகத் திரையரங்கை நோக்கிப் படையெடுத்தனர். திரையரங்கினுள் `லியோ’ ட்ரெய்லர் வெளியானபோது, மெர்சலான விஜய் ரசிகர்கள் கத்தி, ஆரவாரம் செய்தனர். அதில் வெறித்தனமான பல விஜய் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் திரையரங்கின் இருக்கைகள்மீது ஏறிக் குதித்து நடனமாடினர். இதனால் 200-க்கும் மேற்பட்ட இருக்கைகள் சேதமடைந்தன. இந்தச் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. பலரும் விஜய் ரசிகர்ள் செய்த இந்தச் சம்பத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். Leo Trailer: 'லியோ' படத்தின் ட்ரெய்லர் இதோ!
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வல அனுமதி தொடர்பான ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பேசிய நீதிபதி ஜெயச்சந்திரன், `` `லியோ’ திரைப்பட ட்ரெய்லர் வெளியிட்டபோது ரோகிணி திரையரங்கம் சேதப்படுத்தப்பட்டதற்கும், ஏற்கெனவே ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் பாதுகாப்பு உள்ளிட்ட குளறுபடிகள் ஏற்பட்டதற்கும் காவல்துறையினரின் தவறான கையாளுதலே காரணம்" என அதிருப்தி தெரிவித்தார். மேலும், ``இது போன்ற நிகழ்வுகளுக்கு பார்க்கிங்கில் ஸ்க்ரீன் அமைத்து, தேவையான பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளுடன் காவல்துறையினர் ரசிகர்களைக் கையாண்டிருந்தால் இப்படியான ஒரு சம்பவம் நடந்திருக்காது. ஆகவே, இது மாதிரியான நேரங்களில் காவல்துறை உரிய அனுமதி வழங்கி, எந்த ஒரு சேதமும் ஏற்படாத வகையில் பாதுகாப்பும் வழங்க வேண்டும்" என அறிவுறுத்தினார்.விஜய் ரசிகர்கள்
பின்னர், இதற்கு விளக்கமளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, `` `லியோ’ ட்ரெய்லரை ரோகிணி திரையரங்குக்கு வெளியில் திரையிடுவது தொடர்பாக அனுமதி கேட்டு எந்த விண்ணப்பமும் எங்களுக்கு வரவில்லை. அனுமதி கேட்டிருந்தால் பரிசீலிக்கப்பட்டிருக்கும். அதேநேரம், திரையரங்கினுள்ளே ட்ரெய்லர் திரையிட எந்தவித அனுமதியும் பெறத் தேவையில்லை" என்றார்.
மேலும், ``ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிகளின்போது போலி டிக்கெட்டுகள் மூலமாக ரசிகர்கள் குவிந்ததுபோல, `லியோ’ படத்தின் இசை வெளியீட்டின்போது நடந்து விடாமல் இருக்க கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. இதனால், அந்த நிகழ்ச்சியை, படத் தயாரிப்பு நிறுவனம் தாமாகவே ரத்துசெய்துவிட்டது. எனவே, அதற்கும் காவல்துறைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.விஜய்: `லியோ' இசை வெளியீட்டு விழா ரத்தும், அரசியல் பேச்சுகளும்! | ஒரு பார்வை
திரையரங்கில் இருக்கைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக எந்தப் புகாரும் இதுவரை வரவில்லை. புகார் இல்லாமல் நடவடிக்கை எடுத்தால் வேண்டுமென்றே விஜய் ரசிகர்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும். காவல்துறையைப் பொறுத்தவரை எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி மறுப்பதில்லை" என்று விளக்கம் அளித்தார்.சென்னை உயர் நீதிமன்றம்
இந்த நிலையில், விஜய் ரசிகர்களின் செயல்பாட்டுக்குக் கண்டனம் தெரிவித்து திரைப்பட விமர்சகர்கள், பிற நடிகர்களின் ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துவருகின்றனர். மேலும் சிலர், `விஜய், ரசிகர்கள் சார்பில் இந்தச் சம்பவத்துக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்' எனக் கோரிவருகின்றனர். இந்த நிலையில் ரோகிணி தியேட்டரின் உரிமையாளரைத் தொடர்புகொண்டு நடிகர் விஜய் வருத்தம் தெரிவித்ததாக உறுதிபடுத்தப்படாத ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.லியோ
என்ன இருந்தாலும், வரும் அக்டோபர் 19-ம் தேதி வெளியாகவிருக்கும் `லியோ' படத்தை ரசிகர்கள் தியேட்டரில்தான் பார்க்கப்போகிறார்கள். தாங்கள் அமர்ந்து பார்க்கப்போகும் தியேட்டரை, தாங்களே சேதப்படுத்தினால் யாருக்கு நஷ்டம்... இதைப் புரிந்துகொண்டு அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் கட்டுக்கோப்பாகச் செயல்பட வேண்டும். சம்பந்தப்பட்ட நடிகர்களும், தங்களின் ரசிகர்களுக்கு நன்னடத்தையை அறிவுறுத்த வேண்டும். அதேபோல தீவிர ரசிகர்கள் ஒரே இடத்தில் குழுமினால் என்ன மாதிரியான அசாதாரண சூழல் நிகழும் என்பதை உணர்ந்து முன்கூட்டியே காவல்துறை பாதுகாப்பு வேண்டி திரையரங்க நிர்வாகம் காவல் நிலையத்தை அணுக வேண்டும். தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதைப்போல, மூன்று தரப்பினரும் இவற்றை உணர்ந்து இனிவரும் காலங்களிலாவது முறையாகச் செயல்படவேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
LEO Audio Launch: "அரசியல் காரணமில்லை!"- `லியோ' ஆடியோ லாஞ்ச் ரத்து; படக்குழு சொல்லும் காரணம் என்ன?
http://dlvr.it/Sx8DRL
Saturday, 7 October 2023
முடிவெடுக்காத ஆளுநர்; உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம் - 5 சிறைவாசிகளுக்கு இடைக்கால ஜாமீன்!
நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக அரசின் பரிந்துரைமீது ஆளுநர் முடிவெடுக்காததால், `ஐந்து சிறைவாசிகளுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபனை இல்லை' என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. நீண்டகாலமாகச் சிறையிலுள்ள இஸ்லாமியச் சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக் கோரிய வழக்குகள்மீது, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது.தமிழ்நாடு அரசு
கடந்த முறை இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, முதலமைச்சரின் பரிந்துரையின்பேரில் 49 சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான பரித்துரையை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியிருப்பதாகவும், அந்தப் பரிந்துரைகள் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிட்டு, உள்துறைச் செயலாளரின் கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் ஆகியோரின் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிறைவாசிகள் ஷாகுல் ஹமீது, அஸ்லாம் உள்ளிட்ட ஐந்து பேரின் சார்பில், ஜாமீனில் விடுவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக அரசின் பரிந்துரைமீது ஆளுநர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்தார். சென்னை உயர் நீதிமன்றம்
மேலும், ஏற்கெனவே உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் இதே போன்ற மற்றொரு சிறைவாசி ஜாமீன் வழக்கு விசாரணையின்போது, ஆளுநரிடம் கோப்புகள் நிலுவையில் இருப்பதால் ஜாமீன் வழங்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, மனுதாரர்களை ஜாமீனில் விடுவிக்க அரசுக்கு ஆட்சேபனை இல்லை என்று குறிப்பிட்டார். இதையடுத்து, மனுதாரர்கள் ஐந்து பேரையும் மூன்று மாதங்கள் இடைக்கால நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர். சிறைவாசிகள் ஐந்து பேரில், மூன்று பேர் இஸ்லாமியர்கள், இரண்டு பேர் இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
ஆயுள் சிறைவாசிகள் விடுதலை கோரிக்கை... என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?
http://dlvr.it/Sx6SPg
கடந்த முறை இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, முதலமைச்சரின் பரிந்துரையின்பேரில் 49 சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான பரித்துரையை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியிருப்பதாகவும், அந்தப் பரிந்துரைகள் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிட்டு, உள்துறைச் செயலாளரின் கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் ஆகியோரின் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிறைவாசிகள் ஷாகுல் ஹமீது, அஸ்லாம் உள்ளிட்ட ஐந்து பேரின் சார்பில், ஜாமீனில் விடுவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக அரசின் பரிந்துரைமீது ஆளுநர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்தார். சென்னை உயர் நீதிமன்றம்
மேலும், ஏற்கெனவே உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் இதே போன்ற மற்றொரு சிறைவாசி ஜாமீன் வழக்கு விசாரணையின்போது, ஆளுநரிடம் கோப்புகள் நிலுவையில் இருப்பதால் ஜாமீன் வழங்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, மனுதாரர்களை ஜாமீனில் விடுவிக்க அரசுக்கு ஆட்சேபனை இல்லை என்று குறிப்பிட்டார். இதையடுத்து, மனுதாரர்கள் ஐந்து பேரையும் மூன்று மாதங்கள் இடைக்கால நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர். சிறைவாசிகள் ஐந்து பேரில், மூன்று பேர் இஸ்லாமியர்கள், இரண்டு பேர் இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
ஆயுள் சிறைவாசிகள் விடுதலை கோரிக்கை... என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?
http://dlvr.it/Sx6SPg
Friday, 6 October 2023
``திமுக-வுக்கு யார் போட்டி என்பதில்தான் மிகப்பெரிய போட்டி நடக்கிறது!" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அ.தி.மு.க விலகிவிட்டது, பா.ஜ.க-வுடன் கூட்டணியில்லை என்று கட்சியின் மூத்த தலைவர்கள் முதல் எடப்பாடி பழனிசாமி வரை அனைவரும் வெளிப்படையாகப் பேசத் தொடங்கிவிட்டனர். ஆனால், பா.ஜ.க தரப்பிலிருந்து யாரும் அ.தி.மு.க-வின் கூட்டணி முறிவு குறித்து உறுதியாக எதுவும் கூறவில்லை. எல்லாம் டெல்லி மேலிடம்தான் முடிவுசெய்யும் என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை முதற்கொண்டு அனைவரும் கூறுகின்றனர்.அண்ணாமலை
இவ்வாறான சூழலில், டெல்லிக்குச் சென்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துவிட்டு தமிழகத்துக்குத் திரும்பிய அண்ணாமலை, சென்னையில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும் பா.ஜ.க-வுக்கும், தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக இருக்கும் தி.மு.க-வுக்கும் நடக்கும் போட்டிதான் 2024 தேர்தல்" என்று கூறினார். இந்த நிலையில், தி.மு.க-வுக்கு யார் போட்டி என்பதில்தான் போட்டி நடக்கிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
முன்னதாக, உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் தி.மு.க-வுக்கும், பா.ஜ.க-வுக்கும்தான் போட்டி என்று அண்ணாமலை கூறியது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், ``இதை நீங்கள் அ.தி.மு.க தலைவர்களிடம்தான் கேட்க வேண்டும். யாராக இருந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான். தலைவரின் வழிகாட்டுதலின்படி தேர்தலை எதிர்கொள்வோம். எங்களுக்கு யார் போட்டி என்பதற்குத்தான் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க-வுக்கு யார் போட்டி என்பதில்தான் மிகப்பெரிய போட்டி நடக்கிறது" என்று கூறினார்.உதயநிதி ஸ்டாலின்
மேலும், சனாதன விவகாரம் குறித்துப் பேசுகையில், ``இது திசைதிருப்பும் முயற்சி. சி.ஏ.ஜி அறிக்கை, மணிப்பூர் குறித்துப் பேசுவோம். அதேசமயம், சனாதனம் குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருப்பேன். பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் ஆகியோர் பேசியதைவிட, நான் அதிகமாகப் பேசவில்லை" என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
``கூட்டணியில் இருக்கிறார்கள் என மகிழ்ச்சியோ, இல்லை என வருத்தமோ கிடையாது!” - அண்ணாமலை ஓப்பன் டாக்
http://dlvr.it/Sx4RNN
இவ்வாறான சூழலில், டெல்லிக்குச் சென்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துவிட்டு தமிழகத்துக்குத் திரும்பிய அண்ணாமலை, சென்னையில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும் பா.ஜ.க-வுக்கும், தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக இருக்கும் தி.மு.க-வுக்கும் நடக்கும் போட்டிதான் 2024 தேர்தல்" என்று கூறினார். இந்த நிலையில், தி.மு.க-வுக்கு யார் போட்டி என்பதில்தான் போட்டி நடக்கிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
முன்னதாக, உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் தி.மு.க-வுக்கும், பா.ஜ.க-வுக்கும்தான் போட்டி என்று அண்ணாமலை கூறியது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், ``இதை நீங்கள் அ.தி.மு.க தலைவர்களிடம்தான் கேட்க வேண்டும். யாராக இருந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான். தலைவரின் வழிகாட்டுதலின்படி தேர்தலை எதிர்கொள்வோம். எங்களுக்கு யார் போட்டி என்பதற்குத்தான் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க-வுக்கு யார் போட்டி என்பதில்தான் மிகப்பெரிய போட்டி நடக்கிறது" என்று கூறினார்.உதயநிதி ஸ்டாலின்
மேலும், சனாதன விவகாரம் குறித்துப் பேசுகையில், ``இது திசைதிருப்பும் முயற்சி. சி.ஏ.ஜி அறிக்கை, மணிப்பூர் குறித்துப் பேசுவோம். அதேசமயம், சனாதனம் குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருப்பேன். பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் ஆகியோர் பேசியதைவிட, நான் அதிகமாகப் பேசவில்லை" என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
``கூட்டணியில் இருக்கிறார்கள் என மகிழ்ச்சியோ, இல்லை என வருத்தமோ கிடையாது!” - அண்ணாமலை ஓப்பன் டாக்
http://dlvr.it/Sx4RNN
`அதிகாரிகளுக்கே அதிகாரம்; மக்களுக்கு இல்லை!' ஶ்ரீவில்லிபுத்தூர் கிராம சபை விவகாரம் சொல்லும் உண்மை!
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஒன்றியம், பிள்ளையார்குளம் கிராம ஊராட்சியில், அக்டோபர் 2, காந்தி பிறந்தநாளையொட்டி நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், கேள்வி கேட்க முயன்ற அம்மையப்பன் என்ற விவசாயியை, அந்த ஊராட்சியின் செயலர் தங்கபாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், திருவில்லிபுத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர்கள் மற்றும் திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையிலேயே கடுமையாகத் தாக்கிய சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனிதத் தன்மையற்ற இந்தச் செயலுக்கு தன்னாட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இது குறித்து தன்னாட்சி அமைப்பின் பொதுச் செயலாளர் இரா. வினோத்குமார் பேசும்போது,காலால் உதைத்தல்
''இச்சம்பவத்தில் தொடர்புடைய ஊராட்சி செயலர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயியின் புகாரின் அடிப்படையில், ஊராட்சி செயலாளர் மீது குற்றவியல் வழக்கு பதியப்பட்டுள்ளது. அரசின் இந்தச் செயல்களை வரவேற்கலாம். எனினும், நிர்வாக ரீதியில் பெரும்பாலும், இவ்வாறான செயல்களில் ஈடுபடும் அரசு அலுவலர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக பணியிடை நீக்கம் அல்லது பணியிட மாற்றம் மட்டுமே தரப்படுகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக தன்னாட்சி உள்ளிட்ட சமூக இயக்கங்களின் தொடர் முயற்சியால், கிராமசபையில் மக்கள் அதிக அளவில் பங்கேற்பதும் பொறுப்பிலுள்ளவர்களின் செயல்பாடுகளை கேள்விக்குட்படுத்துவதும் நிகழத் தொடங்கியுள்ளன. இதை அடித்தள ஜனநாயகத்தை வலுப்படுத்தும் செயலாகக் கருதாமல், தங்களின் அதிகாரத்திற்கான அச்சுறுத்தலாகப் பார்க்கும் மனநிலை பல அலுவலர்களிடமும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடமும் இருக்கிறது. இதன் ஒரு வெளிப்பாடே, பிள்ளையார்குளத்தில் அரங்கேறியுள்ள தாக்குதல் சம்பவம்.கிராம சபைகிராம சபையைக் கூட்ட வலியுறுத்தி `கிராம சபை மீட்பு வாரம்'... கைகோக்கும் அமைப்புகள்!
கிராமசபை, உள்ளூராட்சியின் ஒரு முக்கிய அங்கம். மாநில அரசின் சட்டமன்றத்துடன் ஒப்பிடத்தக்க ஒரு சபை. கிராம ஊராட்சி நிர்வாகத்தை கண்காணிக்கக் கூடிய, கேள்விக்குட்படுத்தக் கூடிய அதிகாரம் ஊராட்சியின் வாக்காளர்களான கிராமசபையின் உறுப்பினர்களுக்கு உண்டு. ஆனால், யாருக்குப் பதில் சொல்ல வேண்டுமோ, யாருக்காகப் பணி செய்ய வேண்டுமோ அவர்களையே கிள்ளுக் கீரையாக நினைக்கும் போக்கே பெரும்பாலும் துறை அலுவலர்களிடம் உள்ளது.
சமீபத்தில் மாநில அளவில் நடைபெற்ற ஊராட்சி செயலாளர்களின் போராட்டத்திற்குப் பிறகு வெளியான தமிழ்நாடு கிராம ஊராட்சி செயலர்கள் குறித்த பணி விதிகள் - 2023 (அரசாணை 113, ஊ.வ.ஊ.துறை, நாள் 13.09.2023), ஊராட்சி செயலரைத் தண்டிக்கும் அதிகாரத்தை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வழங்கியுள்ளது. ஊராட்சி மன்றத்தையோ கிராமசபையையோ அதிகாரப்படுத்தாமல், இப்படித் துறை அலுவலர்களை அதிகாரப்படுத்தும் தமிழ்நாடு அரசின் செயல்களால்தான் அவர்களுக்குத் தாங்கள் பொதுமக்களுக்கு கட்டுப்பட்டவர்களல்ல என்ற எண்ணம் ஏற்படுகிறது..கிராம சபை`அதிகாரிகள் நடத்தலை; அதான் நாங்க நடத்துறோம்!' - இளைஞர்கள் முன்னெடுத்த மக்கள் கிராம சபை
மேலும், ஊராட்சியின் கடைநிலை அலுவலரான ஊராட்சி செயலாளர், ஒரு கிராமசபை உறுப்பினரை, சட்டமன்ற உறுப்பினர் மற்றும் துறை அலுவலர்கள் இருக்கும்போதே தாக்கும் அளவிற்கு அவருக்கு அதிகாரத் திமிரும் தைரியமும் காலனிய ஆதிக்க மனநிலையை இன்னமும் கைவிடாத பொது நிர்வாகத்திலிருந்தே கிடைக்கின்றன. இந்தியப் பொது நிர்வாகத்தை (Public Administration) முழுமையான சீர்திருத்தத்திற்கு உட்படுத்த வேண்டும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்று.
இந்தப் பின்னணியில் தன்னாட்சி, தமிழ்நாடு அரசுக்கு கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறது.கிராமசபைகிராம சபை என்பது பாராளுமன்றத்திற்கு ஒப்பானதா? - விளக்கம் தரும் துறைவல்லுநர்! #DoubtOfCommonMan
1. பாதிக்கப்பட்ட விவசாயி அம்மையப்பனுக்கு உரிய சிகிச்சையும் பாதுகாப்பும் வழங்குவதோடு, அவருக்கு இழப்பீடாகக் கணிசமான ஒரு தொகையை, தொடர்புடைய ஊராட்சி செயலரின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்து வழங்க வேண்டும்.
2. தன்னுடைய புகார் மனுவில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகத் அம்மையப்பன் தெரிவித்துள்ளதாலும் திறந்த இதய அறுவை சிகிச்சை செய்துள்ள அவரை ஊராட்சி செயலர் மார்பில் கடுமையாக எட்டி உதைத்தாலும், இந்த வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 506 (2) (இறப்பை அல்லது கடுங்காயத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தல்) சேர்க்கப்பட வேண்டும்.
3. பாதிக்கப்பட்ட விவசாயி, ஊராட்சி செயலர் மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்களாலும் தாக்கப்பட்டதாக வெளியான காணொளிகள் மூலம் அறிய முடிகிறது. எனவே உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீதும் குற்ற வழக்குகள் பதியப்பட வேண்டும்.
4. அனைவர் முன்னிலையிலும் ஒரு மனிதரை இழிவுபடுத்தும் விதமாக காலால் எட்டி உதைத்தது அப்பட்டமான மனித உரிமை மீறல். எனவே, உரிய விசாரணக்குப் பிறகு, அந்த செயலாளரை நிரந்தரப் பணி நீக்கம் செய்ய தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும். இது பொது மக்களின் கண்ணியத்துக்கு இழுக்கு விளைவிக்கின்ற மற்ற அலுவலர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.கிராமசபை கூட்டத்தில் கிராம சபை நடத்தக்கோரி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்புவது எப்படி? - ஒரு வழிகாட்டல்
5. மேலும், இச்சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஊராட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர்கள் மீதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
6. கிராம சபை எவ்வாறு நடத்தப்பட வேண்டும், அதில் தலைவர், ஊராட்சி செயலர், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம சபை உறுப்பினர்கள் போன்றோரின் பங்கு என்ன என்பது போன்ற சட்ட ரீதியான விழிப்புணர்வு விளம்பரங்கள் அரசால் வெளியிடப்பட வேண்டும்.
7. தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து கிராமசபைகளும் காணொளி பதிவு செய்யப்பட்டு, அரசின் இணையதளத்தில் மக்கள் பார்வைக்கு பதிவேற்றப்பட வேண்டும்.
8. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவுகள் 104 மற்றும் 106-ல் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள் மற்றும் கிராம ஊராட்சி செயலர்கள் குறித்த பணி விதிகள் (G.O (Ms.) No. 113, dated 13.09.2023) ஆகியவற்றில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு, ஊராட்சி செயலர்களைக் கட்டுப்படுத்தும் மற்றும் தண்டிக்கும் அதிகாரத்தை ஊராட்சி மன்றத்திற்கோ அல்லது கிராம சபைக்கோ வழங்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.
http://dlvr.it/Sx44y4
''இச்சம்பவத்தில் தொடர்புடைய ஊராட்சி செயலர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயியின் புகாரின் அடிப்படையில், ஊராட்சி செயலாளர் மீது குற்றவியல் வழக்கு பதியப்பட்டுள்ளது. அரசின் இந்தச் செயல்களை வரவேற்கலாம். எனினும், நிர்வாக ரீதியில் பெரும்பாலும், இவ்வாறான செயல்களில் ஈடுபடும் அரசு அலுவலர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக பணியிடை நீக்கம் அல்லது பணியிட மாற்றம் மட்டுமே தரப்படுகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக தன்னாட்சி உள்ளிட்ட சமூக இயக்கங்களின் தொடர் முயற்சியால், கிராமசபையில் மக்கள் அதிக அளவில் பங்கேற்பதும் பொறுப்பிலுள்ளவர்களின் செயல்பாடுகளை கேள்விக்குட்படுத்துவதும் நிகழத் தொடங்கியுள்ளன. இதை அடித்தள ஜனநாயகத்தை வலுப்படுத்தும் செயலாகக் கருதாமல், தங்களின் அதிகாரத்திற்கான அச்சுறுத்தலாகப் பார்க்கும் மனநிலை பல அலுவலர்களிடமும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடமும் இருக்கிறது. இதன் ஒரு வெளிப்பாடே, பிள்ளையார்குளத்தில் அரங்கேறியுள்ள தாக்குதல் சம்பவம்.கிராம சபைகிராம சபையைக் கூட்ட வலியுறுத்தி `கிராம சபை மீட்பு வாரம்'... கைகோக்கும் அமைப்புகள்!
கிராமசபை, உள்ளூராட்சியின் ஒரு முக்கிய அங்கம். மாநில அரசின் சட்டமன்றத்துடன் ஒப்பிடத்தக்க ஒரு சபை. கிராம ஊராட்சி நிர்வாகத்தை கண்காணிக்கக் கூடிய, கேள்விக்குட்படுத்தக் கூடிய அதிகாரம் ஊராட்சியின் வாக்காளர்களான கிராமசபையின் உறுப்பினர்களுக்கு உண்டு. ஆனால், யாருக்குப் பதில் சொல்ல வேண்டுமோ, யாருக்காகப் பணி செய்ய வேண்டுமோ அவர்களையே கிள்ளுக் கீரையாக நினைக்கும் போக்கே பெரும்பாலும் துறை அலுவலர்களிடம் உள்ளது.
சமீபத்தில் மாநில அளவில் நடைபெற்ற ஊராட்சி செயலாளர்களின் போராட்டத்திற்குப் பிறகு வெளியான தமிழ்நாடு கிராம ஊராட்சி செயலர்கள் குறித்த பணி விதிகள் - 2023 (அரசாணை 113, ஊ.வ.ஊ.துறை, நாள் 13.09.2023), ஊராட்சி செயலரைத் தண்டிக்கும் அதிகாரத்தை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வழங்கியுள்ளது. ஊராட்சி மன்றத்தையோ கிராமசபையையோ அதிகாரப்படுத்தாமல், இப்படித் துறை அலுவலர்களை அதிகாரப்படுத்தும் தமிழ்நாடு அரசின் செயல்களால்தான் அவர்களுக்குத் தாங்கள் பொதுமக்களுக்கு கட்டுப்பட்டவர்களல்ல என்ற எண்ணம் ஏற்படுகிறது..கிராம சபை`அதிகாரிகள் நடத்தலை; அதான் நாங்க நடத்துறோம்!' - இளைஞர்கள் முன்னெடுத்த மக்கள் கிராம சபை
மேலும், ஊராட்சியின் கடைநிலை அலுவலரான ஊராட்சி செயலாளர், ஒரு கிராமசபை உறுப்பினரை, சட்டமன்ற உறுப்பினர் மற்றும் துறை அலுவலர்கள் இருக்கும்போதே தாக்கும் அளவிற்கு அவருக்கு அதிகாரத் திமிரும் தைரியமும் காலனிய ஆதிக்க மனநிலையை இன்னமும் கைவிடாத பொது நிர்வாகத்திலிருந்தே கிடைக்கின்றன. இந்தியப் பொது நிர்வாகத்தை (Public Administration) முழுமையான சீர்திருத்தத்திற்கு உட்படுத்த வேண்டும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்று.
இந்தப் பின்னணியில் தன்னாட்சி, தமிழ்நாடு அரசுக்கு கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறது.கிராமசபைகிராம சபை என்பது பாராளுமன்றத்திற்கு ஒப்பானதா? - விளக்கம் தரும் துறைவல்லுநர்! #DoubtOfCommonMan
1. பாதிக்கப்பட்ட விவசாயி அம்மையப்பனுக்கு உரிய சிகிச்சையும் பாதுகாப்பும் வழங்குவதோடு, அவருக்கு இழப்பீடாகக் கணிசமான ஒரு தொகையை, தொடர்புடைய ஊராட்சி செயலரின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்து வழங்க வேண்டும்.
2. தன்னுடைய புகார் மனுவில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகத் அம்மையப்பன் தெரிவித்துள்ளதாலும் திறந்த இதய அறுவை சிகிச்சை செய்துள்ள அவரை ஊராட்சி செயலர் மார்பில் கடுமையாக எட்டி உதைத்தாலும், இந்த வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 506 (2) (இறப்பை அல்லது கடுங்காயத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தல்) சேர்க்கப்பட வேண்டும்.
3. பாதிக்கப்பட்ட விவசாயி, ஊராட்சி செயலர் மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்களாலும் தாக்கப்பட்டதாக வெளியான காணொளிகள் மூலம் அறிய முடிகிறது. எனவே உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீதும் குற்ற வழக்குகள் பதியப்பட வேண்டும்.
4. அனைவர் முன்னிலையிலும் ஒரு மனிதரை இழிவுபடுத்தும் விதமாக காலால் எட்டி உதைத்தது அப்பட்டமான மனித உரிமை மீறல். எனவே, உரிய விசாரணக்குப் பிறகு, அந்த செயலாளரை நிரந்தரப் பணி நீக்கம் செய்ய தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும். இது பொது மக்களின் கண்ணியத்துக்கு இழுக்கு விளைவிக்கின்ற மற்ற அலுவலர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.கிராமசபை கூட்டத்தில் கிராம சபை நடத்தக்கோரி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்புவது எப்படி? - ஒரு வழிகாட்டல்
5. மேலும், இச்சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஊராட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர்கள் மீதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
6. கிராம சபை எவ்வாறு நடத்தப்பட வேண்டும், அதில் தலைவர், ஊராட்சி செயலர், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம சபை உறுப்பினர்கள் போன்றோரின் பங்கு என்ன என்பது போன்ற சட்ட ரீதியான விழிப்புணர்வு விளம்பரங்கள் அரசால் வெளியிடப்பட வேண்டும்.
7. தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து கிராமசபைகளும் காணொளி பதிவு செய்யப்பட்டு, அரசின் இணையதளத்தில் மக்கள் பார்வைக்கு பதிவேற்றப்பட வேண்டும்.
8. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவுகள் 104 மற்றும் 106-ல் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள் மற்றும் கிராம ஊராட்சி செயலர்கள் குறித்த பணி விதிகள் (G.O (Ms.) No. 113, dated 13.09.2023) ஆகியவற்றில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு, ஊராட்சி செயலர்களைக் கட்டுப்படுத்தும் மற்றும் தண்டிக்கும் அதிகாரத்தை ஊராட்சி மன்றத்திற்கோ அல்லது கிராம சபைக்கோ வழங்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.
http://dlvr.it/Sx44y4
``தமிழ், சம்ஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் இளைஞர்கள் புலமையுடன் இருக்க விரும்பினார் வள்ளலார்!" - மோடி
வள்ளலாரின் 200-வது பிறந்தநாளையொட்டி, சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் வள்ளலார் சிலையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், வள்ளலார் சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் காணொளிக் காட்சி வாயிலாகக் கலந்துகொண்டார்.வள்ளலார் 200-வது பிறந்தநாள்
அப்போது உரையாற்றிய மோடி, ``கல்வியின் வலிமையை வள்ளலார் நம்பினார். ஒரு வழிகாட்டியாக அவரின் கதவுகள் எப்போதும் திறந்தே இருந்தன. அதன் மூலம், எண்ணற்ற மக்களுக்கு வழிகாட்டினார். சமூக சீர்திருத்தத்தில் வள்ளலார் முன்னோடியாக இருந்தார். கடவுளைப் பற்றிய அவருடைய பார்வை, சாதி, மதம், சமயம் ஆகியவற்றைக் கடந்தது. அவரின், படைப்புகளும் எளிதாகப் படித்துப் புரிந்துகொள்ளக் கூடியவையே.
தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இளைஞர்கள் புலமையாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவின் கல்வி உள்கட்டமைப்பில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்தியா, மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு தேசிய கல்விக் கொள்கையைப் பெற்றிருக்கிறது. இளைஞர்கள், தங்களின் உள்ளூர் மொழிகளில் படிப்பதன் மூலம், மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் ஆக முடியும்.மோடி
வள்ளலார் இன்று உயிரோடு இருந்தால் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தைப் பாராட்டியிருப்பார் என நம்புகிறேன். எனவே, இந்தப் புனிதமான நேரத்தில், அவரின் லட்சியங்களை நிறைவேற்றுவதற்கான நம் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவோம். நம்மைச் சுற்றியிருக்கும் யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்பதை உறுதிசெய்வோம். ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதிசெய்வோம்" என்று கூறினார்.`வள்ளலார் எனும் ஆன்மிகப் புரட்சியாளர்' - 200 வது பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!
http://dlvr.it/Sx44dq
அப்போது உரையாற்றிய மோடி, ``கல்வியின் வலிமையை வள்ளலார் நம்பினார். ஒரு வழிகாட்டியாக அவரின் கதவுகள் எப்போதும் திறந்தே இருந்தன. அதன் மூலம், எண்ணற்ற மக்களுக்கு வழிகாட்டினார். சமூக சீர்திருத்தத்தில் வள்ளலார் முன்னோடியாக இருந்தார். கடவுளைப் பற்றிய அவருடைய பார்வை, சாதி, மதம், சமயம் ஆகியவற்றைக் கடந்தது. அவரின், படைப்புகளும் எளிதாகப் படித்துப் புரிந்துகொள்ளக் கூடியவையே.
தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இளைஞர்கள் புலமையாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவின் கல்வி உள்கட்டமைப்பில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்தியா, மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு தேசிய கல்விக் கொள்கையைப் பெற்றிருக்கிறது. இளைஞர்கள், தங்களின் உள்ளூர் மொழிகளில் படிப்பதன் மூலம், மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் ஆக முடியும்.மோடி
வள்ளலார் இன்று உயிரோடு இருந்தால் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தைப் பாராட்டியிருப்பார் என நம்புகிறேன். எனவே, இந்தப் புனிதமான நேரத்தில், அவரின் லட்சியங்களை நிறைவேற்றுவதற்கான நம் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவோம். நம்மைச் சுற்றியிருக்கும் யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்பதை உறுதிசெய்வோம். ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதிசெய்வோம்" என்று கூறினார்.`வள்ளலார் எனும் ஆன்மிகப் புரட்சியாளர்' - 200 வது பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!
http://dlvr.it/Sx44dq